Thursday 15 February 2024

உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம்.

📜 உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம்:

• உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) குரல் வாக்கெடுப்பின் மூலம் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்.

• நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய மாநிலமானது உத்தரகாண்ட்.


📜 General Civil Law in Uttarakhand:

• Uniform Civil Code passed in the Uttarakhand Legislative Assembly Passing of the Uniform Civil Code Bill by voice vote.

• Uttarakhand became the first state in the country to pass a Common Civil Code.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 21 May 2021

இந்தியா- வங்கதேசம் இடையிலான மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் மோடி

இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (9 March 2021) திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது. 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் முடிக்கப்பட்ட மேலும் சில உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் சில புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மைதிரி சேது பாலம் திறக்கப்பட்டதையடுத்து, சர்வதேச கடல் துறைமுகத்துக்கு அருகில் உள்ள நகரமாக அகர்தலா உருவெடுத்துள்ளது. நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இன்ஜின் அரசு இல்லையோ அங்கெல்லாம் ஏழைகள், விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படாமல் அல்லது மந்தமாக செயல்படுத்தப்படுவதை பார்க்க முடியும். உங்கள் பக்கத்து மாநிலத்திலேயே இந்த நிலைதான் உள்ளது. ஆனால் இரட்டை இன்ஜின் கொண்ட திரிபுரா அரசு, மாநில மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் இருந்த திரிபுரா, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் செய்வதற்கு ஏற்ற இடமாக மாறி உள்ளது என்றார்.இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (9 March 2021) திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது. 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் முடிக்கப்பட்ட மேலும் சில உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் சில புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மைதிரி சேது பாலம் திறக்கப்பட்டதையடுத்து, சர்வதேச கடல் துறைமுகத்துக்கு அருகில் உள்ள நகரமாக அகர்தலா உருவெடுத்துள்ளது. நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இன்ஜின் அரசு இல்லையோ அங்கெல்லாம் ஏழைகள், விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படாமல் அல்லது மந்தமாக செயல்படுத்தப்படுவதை பார்க்க முடியும். உங்கள் பக்கத்து மாநிலத்திலேயே இந்த நிலைதான் உள்ளது. ஆனால் இரட்டை இன்ஜின் கொண்ட திரிபுரா அரசு, மாநில மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் இருந்த திரிபுரா, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் செய்வதற்கு ஏற்ற இடமாக மாறி உள்ளது என்றார்.இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (9 March 2021) திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது. 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் முடிக்கப்பட்ட மேலும் சில உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் சில புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மைதிரி சேது பாலம் திறக்கப்பட்டதையடுத்து, சர்வதேச கடல் துறைமுகத்துக்கு அருகில் உள்ள நகரமாக அகர்தலா உருவெடுத்துள்ளது. நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இன்ஜின் அரசு இல்லையோ அங்கெல்லாம் ஏழைகள், விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படாமல் அல்லது மந்தமாக செயல்படுத்தப்படுவதை பார்க்க முடியும். உங்கள் பக்கத்து மாநிலத்திலேயே இந்த நிலைதான் உள்ளது. ஆனால் இரட்டை இன்ஜின் கொண்ட திரிபுரா அரசு, மாநில மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் இருந்த திரிபுரா, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் செய்வதற்கு ஏற்ற இடமாக மாறி உள்ளது என்றார்.இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (9 March 2021) திறந்து வைத்தார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே இரு நாடுகளையும் இணைக்கும் வகையில் மைத்ரி சேது பாலம் கட்டப்பட்டது. 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், திரிபுராவில் முடிக்கப்பட்ட மேலும் சில உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் சில புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மைதிரி சேது பாலம் திறக்கப்பட்டதையடுத்து, சர்வதேச கடல் துறைமுகத்துக்கு அருகில் உள்ள நகரமாக அகர்தலா உருவெடுத்துள்ளது. நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இன்ஜின் அரசு இல்லையோ அங்கெல்லாம் ஏழைகள், விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் திட்டங்கள் அமல்படுத்தப்படாமல் அல்லது மந்தமாக செயல்படுத்தப்படுவதை பார்க்க முடியும். உங்கள் பக்கத்து மாநிலத்திலேயே இந்த நிலைதான் உள்ளது. ஆனால் இரட்டை இன்ஜின் கொண்ட திரிபுரா அரசு, மாநில மக்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளது. பல ஆண்டுகளாக வளர்ச்சி அடையாமல் இருந்த திரிபுரா, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் செய்வதற்கு ஏற்ற இடமாக மாறி உள்ளது என்றார்.
மைத்ரி சேது பாலம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 18 May 2021

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா தேர்வு


பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் இந்திய அழகி அட்லைன் காஸ்டெலினோவுக்கு 4-வது இடம் கிடைத்தது.

கடந்த 1952-ம் ஆண்டு முதல் பிரபஞ்ச அழகியை (மிஸ் யுனிவர்ஸ்) தேர்வு செய்வதற்கான சர்வதேச அழகிப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பால் இந்த போட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரானா வைரஸ் பரவல் காரணமாக இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் 69-வது பிரபஞ்ச அழகி போட்டி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடன் இந்த பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது.

இந்த பிரபஞ்ச அழகி போட்டி இந்தியா உள்பட 74 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் இந்திய அழகி பட்டம் வென்ற அட்லைன் காஸ்டெலினோ (வயது 22) பங்கேற்றார்.

மெக்சிகோ அழகி ஆண்ட்ரியா மெசா

3 மணி நேரம் நடந்த இந்த போட்டியை ஹாலிவுட் நடிகர் மரியா லோபஸ் மற்றும் நடிகை ஒலிவியா கல்போ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

முன்னாள் பிரபஞ்ச அழகிகள் செஷ்லி கிறிஸ்ட், பவுலினா வேகா, டெமி லீ டெபோ ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.

இந்த போட்டியில் பல்வேறு சுற்றுகளை கடந்து மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்ட்ரியா மெசாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

அப்போது மெக்சிக்கோ அழகி ஆண்ட்ரியா மெசாவிடம் நடுவர்கள் ‘‘நீங்கள் உங்கள் நாட்டின் தலைவராக இருந்தால் தொற்று நோயை எவ்வாறு கையாண்டு இருப்பீர்கள்?’’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஆண்ட்ரியா மெசா ‘‘இந்த கடினமான சூழ்நிலையை கையாள சரியான வழி இல்லை. இருப்பினும் நிலைமை மோசமாவதற்கு முன்பே நான் ஊரடங்கு அமல்படுத்தி இருப்பேன் என்று நம்புகிறேன்.‌ ஏனென்றால் நாங்கள் பல உயிர்களை இழந்து உள்ளோம் அதை நம்மால் வாங்க முடியாது. எங்கள் மக்களை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் நான் ஆரம்பத்திலிருந்தே அவர்களைக் கவனித்து இருப்பேன்’’ என பதிலளித்தார்.‌

இறுதியாக அவரிடம் அழகின் தரம் குறித்து கேட்கப்பட்டது.‌ அதற்கு அவர் ‘‘நாம் மேலும் மேலும் முன்னேறிய ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். இப்போதெல்லாம் அழகு தான் நாம் பார்க்கும் ஒரே வழி. என்னைப் பொறுத்தவரை அழகின் தாக்கம் நம் ஆத்மாவுக்கு மட்டுமல்ல, நம் இதயத்திலும் நாம் நடந்து கொள்ளும் விதத்திலும் உள்ளது’’ என‌ கூறினார். அதனை தொடர்ந்து பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா அறிவிக்கப்பட்டார்.

2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோஜிபினி டுன்சி, பிரபஞ்ச அழகிக்கான தேர்வை அறிவித்தவுடன் ஆண்ட்ரியா மெசா மகிழ்ச்சியில் உற்சாக குரலிட்டு, கண்ணீர் விட்டார். அதனை தொடர்ந்து ஆண்ட்ரியா மெசாவுக்கு பிரபஞ்ச அழகி மகுடத்தை ஜோஜிபினி டுன்சி சூட்டினார்.

2-வது இடம் பிரேசில் நாட்டு அழகி ஜூலியா காமாவுக்கு கிடைத்தது, பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3-வது இடத்தை பெற்றார். இவர்களைத் தொடர்ந்து இந்திய அழகி அட்லைன் காஸ்டெலினோ பிரபஞ்ச அழகி போட்டியில் 4-வது இடத்தை பிடித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘கொரோனா வைரஸ் தொற்று நோயின் 2-வது அலையுடன் போராடும் இது போன்ற கடினமான காலங்களில் நாட்டின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’’ என கூறினார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண்கள் 3-வது முறையாக பிரபஞ்ச அழகிப் பட்டத்தைத் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன் கடந்த 2010-ல் ஜிமினா நவரெட்டேவும், கடந்த 1991-ல் லுபிடா ஜோன்சும் கைப்பற்றினர். ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மெக்சிகோவை சேர்ந்த பெண் ஒருவர் பிரபஞ்ச அழகியாக முடிசூடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 8 January 2021

ந.பிச்சமூர்த்தி

3.0 பாட முன்னுரை
காலத்தின் வேகத்தில் தமிழ்க் கவிதை இயல்பான ஒரு புது வளர்ச்சியைப் பெற்றது. புதுக்கவிதை தோன்றியது. ஆங்கிலத்தில் ‘New Poetry’, ‘Modern Poetry’ எனத் தோன்றிய சொல்லாக்கங்களுக்கு இணையாகத் தமிழில் அமைந்த சொல்லாக்கமே புதுக்கவிதை என்பது. 1960-ஆம் ஆண்டில்தான் இந்தக் கவிதை வகை இப்பெயரைப் பெற்றது. என்றாலும், 1934-ஆம் ஆண்டிலேயே ஒரு கவிஞர் இவ்வகைக் கவிதைப் படைப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அவர்தாம் ந.பிச்சமூர்த்தி. அவரையும் அவரது கவிதைகள் பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.

3.1 ந. பிச்சமூர்த்தி
தமிழ்நாட்டில் கலைகள் செழித்த மாவட்டம் தஞ்சாவூர். இதில் கும்பகோணம் நகரில் 15-8-1900-இல் இவர் பிறந்தார்.

பெற்றோர் நடேச தீட்சிதர் - காமாட்சி அம்மாள். தந்தை ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்யம், தாந்திரீகம் ஆகிய துறைகளில் வல்லவராய் இருந்தவர். எனவே கலை, சமயம், பண்பாடு, கல்வி, தொண்டு இவற்றில் ஊறி இருந்த ஒரு குடும்பப் பின்னணியில் பிச்சமூர்த்தி வளர்ந்தார். தத்துவத்தில் இளங்கலைப் பட்டமும், சட்டக் கல்வியில் பட்டமும் பெற்றார்.

சிறுகதை                                                                     
முதலில் ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதினார். பின்னர்த் தமிழில் எழுதத் தொடங்கினார். பிக்ஷு, ரேவதி என்னும் புனைபெயர்களில் எழுதினார். மணிக்கொடி என்னும் இலக்கிய இதழில் சிறப்பாக எழுதிய தொடக்கக் காலப் படைப்பாளிகளில் ஒருவர் ந. பிச்சமூர்த்தி. சிறந்த சிறுகதை எழுத்தாளராகப் போற்றப் படுகிறவர்.

புதுக்கவிதை
பாரதியின் கவிதைகள் மற்றும் வசன கவிதைகள், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் என்னும் கவிதை ஆகியவற்றால் தூண்டுதல் பெற்றுப் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்.

1934 முதல் 1944 வரை புதுக்கவிதைகள் எழுதினார். பதினைந்து ஆண்டுகள் எதுவும் எழுதவில்லை. மீண்டும் 1959-இல் தொடங்கி எழுத்து இலக்கிய இதழில் எழுதினார். தம் இறுதி நாள் வரை எழுதினார். 83 சிறந்த கவிதைகள் படைத்தார். இவற்றுள் 7 குறுங்காவியங்கள். பல சிறுகதைகளும், கட்டுரைகளும் சிறுவர் கதைகளும் நாடகங்களும் படைத்துள்ளார்.

4-12-1976-இல் சென்னையில் மறைந்தார்.

3.2 வசனமும் கவிதையும்

நண்பர்களே ! நாம் எண்ணத்தை மொழியாக வெளியிடுகிறோம். நம் எண்ண ஓட்டம் இரண்டு வழிகளில் அமைகிறது. ஒன்று, காரண காரியத்தோடு உலகின் உண்மைகளை அறியத் துடிக்கும் அறிவுவழி. இன்னொன்று உலகையும் வாழ்வையும் சுவைக்கத் துடிக்கும் நம் உணர்வின் வழி. மொழியாக வெளிப்படும் எண்ணம், அறிவின் வழியில் நடந்தால் அது வசனம் (உரைநடை) ஆகிறது. அந்த எண்ணம் உணர்வின் பாதையில் ஓடினால் அது கவிதை ஆகிறது.

ஒரு சான்று காட்டினால் இது இன்னும் தெளிவாக உங்களுக்குப் புரியும்.

‘தீ சுடும்’ என்பது அறிவியல் உண்மை. இப்படிச் சொன்னால் அது வசனம்.

‘தீ இனிது’ என்கிறார் பாரதி. தீ இனிமையானதா? இனிக்குமா? இது அறிவியலுக்கு ஏற்காது. இந்த வார்த்தைகள் அறிவு நிலையில் வெளிப்பட்டவை அல்ல. உணர்வு நிலையில் வெளிப்பட்டவை என்று புரிந்து கொள்கிறோம். இது பல கற்பனைகளை எழுப்புகிறது. எனவே, இது கவிதை.

வார்த்தை, நம் அறிவுடன் மட்டும் பேசும்போது அது வெறும் செய்தியை மட்டும் சொல்கிறது. வசனமாக நின்று போகிறது. வார்த்தை, நம் உணர்வுடன் பேசும்போது உணர்ச்சியைத் தூண்டுகிறது. கற்பனையைத் தூண்டுகிறது. கவிதை ஆகிறது.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன? வசனம் கவிதை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு வடிவத்தில் இல்லை; பண்பில்தான் உள்ளது.

மரபும் மீறலும்
இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தொன்று தொட்டு இலக்கணங்களால் வரையறுக்கப்பட்ட வடிவங்களில் தான் கவிதை உள்ளது என்று நம்பினர். நம் மொழியில் மட்டும் அல்ல, உலகின் எல்லா மொழியிலும் இந்த நம்பிக்கை வேர் ஊன்றி இருந்தது. வகுக்கப்பட்ட அந்த மரபான யாப்பு வடிவங்களில் எழுதப்படாத எதையுமே கவிதை என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் தோன்றிய வால்ட் விட்மன் என்னும் கவிஞன் இந்த மரபை மீறிக் கவிதைகள் படைத்தான். புல்லின் இதழ்கள் என்ற அக்கவிதைகள் உணர்வுடன் பேசின. அதுவரை வசனம் என்று நம்பிவந்த ஒரு வடிவத்தில் அவை கவிதைகளாக, உணர்ச்சி வெள்ளங்களாக வெளிப்பட்ட போதுதான் உலகம் நாம் மேலே கண்ட உண்மையை உணர்ந்தது. வசனம் கவிதை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பண்பில்தான் உள்ளது என்பதை ஏற்றது.

பாரதி, வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ படித்தார். தமிழின் மரபு ஆன யாப்பு வடிவங்களில் மட்டும் அன்றி, நாட்டுப்புற இசைப்பாடல் வடிவங்களிலும் கவிதை படைத்த உணர்ச்சிக் கவிஞர் அவர், அவரே, ‘புல்லின் இதழ்கள்’ போல் புதிய நடையில் காட்சிகள் என்னும் கவிதைகளை எழுதினார்.

3.2.1 புதுக்கவிதை என்ற பெயர்
மாறுதல் காலம் என்பதால், பாரதியின் ‘காட்சிகளும்’ விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’, வசன கவிதைகள் என்ற பெயரில் சுட்டப்பட்டன.

இந்த இரண்டையும் படித்தார் பிச்சமூர்த்தி. அதுவரை சிறுகதை மட்டுமே எழுதிவந்தவர் அவர். அவ்வசன கவிதைகளால் கவரப்பட்டுத் தாமும் கவிதை எழுதத் தொடங்கினார். மரபான கவிதை வடிவங்களில் இல்லாத அக்கவிதைகளை, அன்று இலக்கணம் கற்ற பண்டிதர் பலர் எதிர்த்தனர். அவை கவிதைகளே அல்ல என்று வாதிட்டனர்.

அவற்றின் சொல்லில், நடையில், உள்ளடக்கப் பொருளில் இருந்த புதுமை பலரைக் கவர்ந்தது. 1959-இல் தோன்றிய ‘எழுத்து’ என்னும் இதழில் பலர் புதிதாக எழுதத் தொடங்கினர். அவர்கள் பிச்சமூர்த்தியைப் பின்பற்றினர். தங்கள் கவிதைகளைப் ‘புதுக்குரல்கள்’ என்றனர். அதுவரை ‘வசன கவிதை’ என்று கூறிவந்த பொருந்தாத பெயர் மறைந்தது. ‘புதுக்கவிதை’ என்ற பெயர் பிறந்தது.

வித்திட்டவர்
இந்தப் புதுமைக்கு விதை போட்டுத் தொடங்கி வைத்தவர் பாரதிதான். உண்மையில் புதுக்கவிதையின் தந்தை அவர்தான். ஆனால் அவர் தொடராமல் விட்டதைத் தொடர்ந்து வளர்த்துச் சிறந்த கவிதைகளை எழுதிக் குவித்த பிச்சமூர்த்திக்கு அந்தப் பெருமை வந்து சேர்ந்துவிட்டது.காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறி வரும் வாழ்க்கையின் புதிய புதிய உள்ளடக்கங்களைத் தானும் ஏற்றுப் புதுக்கவிதை வளர்ந்து வருகிறது.

3.3 பிச்சமூர்த்தியின் கவிதைகள்
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்வுக்கான தத்துவ உண்மைகளைக் காண முயன்றவர் பிச்சமூர்த்தி. அந்த முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்.

இவரது 75 கவிதைகளைத் தொகுத்து 1975-இல் எழுத்து பிரசுரம் வெளியீடாக சி.சு. செல்லப்பா வெளியிட்டார். விடுபட்டிருந்த 8 கவிதைகளைத் தேடிச் சேர்த்து பிச்சமூர்த்தி கவிதைகள் என்ற பெயரில் 1985-இல் க்ரியா வெளியிட்டது. மதிநிலையம் வெளியீடாக 2000 ஆண்டில் ந.பிச்சமூர்த்தி கவிதைகள் என்னும் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

அறிவின் ஒளியும், உணர்வின் ஓட்டமும் இக்கவிதைகளில் உள்ளன. அழகு நயங்கள் நிறைந்துள்ளன. இரசனைக்கு இனிய விருந்தாக ஆகும் சிறந்த இலக்கியப் படைப்புகள் இவை. இவற்றைப் பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.

3.3.1 கவிதை பற்றிய கவிதை
காவிரி ஆற்றுக் கரையில் பிறந்து வளர்ந்தவர் பிச்சமூர்த்தி. ஊரின் சிறு குழந்தைகள் ஆற்று மணலைக் குவித்து, நீர் தெளித்துக் குச்சிகளைக் கம்பிபோல் வரிசையாய் அடுக்கிக் கூண்டுபோல் செய்து விளையாடுவார்கள். இதைக் கிளிக்கூண்டு விளையாட்டு என்பார்கள். கூண்டு இருக்கிறது, கிளி எங்கே? கூண்டை அப்படியே விட்டுவிட்டுப் போனால் இரவில் கிளி தானாக வந்து அதற்குள் அடையும்; நாளை வந்து பார்க்கலாம் என்று நம்புவார்கள். குழந்தைகளின் இந்த ஆசையும் கற்பனையும் அழகானவை.

கவிஞரும் ஒரு கிளிக்கூண்டு செய்கிறார்; அதில் வார்த்தைதான் மணல்; ஓசையே நீர்; தீராத தாகமே விரல்; ‘பாட்டு’ என்னும் கூண்டைக் கவிஞரும் அமைக்கிறார். ‘அழகு’ என்னும் கிளி வந்து அடையும் என்று நம்புகிறார்.

மணலில் கூண்டு செய்த குழந்தைகள் அடுத்த நாள் காலை வந்தனர். கூண்டைக் கண்டனர்; கிளியைக் காணவில்லை. இரு குழந்தைகள் வருந்தினர். ‘இரவில் கிளி வந்திருக்கிறது. சிறகை ஒடுக்கிப் பார்த்து இடம் இல்லை என்று பறந்து போய்விட்டது, சுவடுகள் இதோ’ என்றனர். பல குழந்தைகள் ‘கிளியாவது, சுவடாவது! முட்டாள்தனம்,’ என்று பரிகாசம் செய்தனர்.

கவிஞரும் தம் பாட்டு என்னும் கிளிக்கூண்டில் ‘அழகு’ என்னும் கிளி வந்து அடைந்ததா? என்று தேடுகிறார். மணல் கூண்டில் கிளி வந்து அடையுமா? உள்ளத்தின் வேட்கை வார்த்தையில் தோணுமா?.... அழகென்ன மீனா? ஓசையின் தூண்டிலில் சிக்குமா? என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

சில பெரியோர்கள் சொல்கின்றனர்: ‘நன்னூல் தெரியாத நண்பா!.... சொல்லோடு மன்றாடும் அடிமுட்டாள்’ என்று! வயிற்றையும் வாழ்க்கையையும் விட்டுக் காலத்தையும் காசையும் இழக்கின்ற பைத்தியமா என்று அவரைக் கேட்கின்றனர். அவர் மேல் இரக்கம் கொள்கின்றனர். பல சிறியோர்கள் அவரைப் புகழ்கின்றனர்:

தொட்ட வார்த்தையில் தங்கத்தைத் தேக்கினாய்
தொடாத தந்தியில் ஒலியை எழுப்பினாய்
எண்ணாத உள்ளத்தில் எழிலினை ஊற்றினாய்
அழகின் அம்பை வார்த்தையில் பூட்டினாய்
அழகுப் பித்தே வாழ்க

என்று வாழ்த்துகின்றனர். கவிஞர் ஒரு முடிவுக்கு வருகிறார்.

சிறியோர்கள் வார்த்தையைப் போற்றினேன்
பெரியோர்கள் இரங்கலைத் தள்ளினேன்
ஆறுஎங்கும் கிளிக்கூண்டு கட்டுவேன்
அழகினை அழைப்பேன்
எந்நாளும் -

என்று சொல்கிறார். அவரது கிளிக்கூண்டு என்னும் கவிதை இவ்வாறு முடிகிறது.

பிச்சமூர்த்தி தம் இலக்கியப் படைப்புக் கொள்கையாக உலகிற்கு அறிவிக்கும் செய்தியே இந்தக் கவிதை.

இதில் வரும் ‘பெரியோர்கள்’ - கற்றறிந்த பண்டிதர்கள். ‘சிறியோர்கள்’ - இயல்பான படைப்பு ஆற்றல் - கற்பனை ஆற்றல் உடையவர்கள்; புதிய தலைமுறையினர்; இலக்கணம் அறியாதவர்கள். நன்னூல் - தமிழ் இலக்கண நூல். இதைப்பற்றிய குறிப்புத்தான் நமக்கு இந்த இரு பிரிவினரைப் பிரித்து அடையாளம் காட்டுகிறது.

சிறியோர்களோ, ‘உன் சொற்களில் தங்கம் தேங்குகிறது. தந்தியை மீட்டாமலேயே வீணை இசை எழுகிறது. அறிவின் எண்ணம் தோன்றாத உள்ளத்தில் உணர்வாக அழகை நீ ஊற்றுகிறாய். வார்த்தை வில்லாக வளைகிறது, அதில் அம்பாக அழகு பாய்கிறது. உன் முயற்சி வீண் இல்லை’ என்று பாராட்டுகின்றனர்.

கவிஞர் தேடும் அழகு என்ற கிளி அவரது உணர்வின் போக்கில் அமைக்கும் வார்த்தை மணல் கூண்டில் தானாகவே வந்து அடைகிறது. அதைத்தான் அந்தச் சிறியோர்கள் பார்த்திருக்கின்றனர். பிச்சமூர்த்தியோ நிறைவு அற்றவர்; தம் சொல்லில் கவிதை வந்துவிட்டது என்பதை நம்ப மறுப்பவர். இந்தத் திருப்தியின்மையே அவரை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து வாழ்க்கை என்னும் ஆற்றங்கரையில் கிளிக்கூண்டுகளைக் கட்டிக் கொண்டே இருப்பதும் அழகென்னும் கிளியை அழைப்பதும்தான் தம் வாழ்க்கை என்று அவர் உணர்கிறார்.

‘கவிதை என்னும் அழகு, வார்த்தைகளுக்கோ, வடிவங்களுக்கோ கட்டுப்படாதது; அது எல்லையற்றது’ என்னும் பெரிய உண்மையை உணர்த்துகிறார்.

கொம்பும் கிணறும் என்னும் கவிதை, கவிதையின் வீச்சு, உச்சி வானத்தையும் தொடும்; கிணற்றின் ஆழத்தையும் தொடும் என்று உணர்த்தும் கவிதை.

நாங்களோ கலைஞர் !
ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம் ; ....
அணிலைப்போல் கொம்பேறி ஒளிக்கனி கடிப்போம்
கொம்பையும் கிணற்றையும் பிணைப்போம்.

3.3.2 வாழ்க்கையும் இயற்கையும்
பிச்சமூர்த்தி இயற்கையில் முழு ஈடுபாடு கொண்டவர். இயற்கையை உற்று நோக்கி அதிலிருந்து வாழ்க்கையைப் படித்துக் கொள்கிறார். துன்பங்களால் துவண்டு போகாமல் வாழும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார். நமக்கும் தாம் உணர்ந்ததை அழகிய கவிதையாய் வடித்துத் தருகிறார்.

ஒளியின் அழைப்பு என்னும் கவிதை மிக அழகானது. அதைப்பற்றி இப்பகுதியில் காண்போம்.

வாழ்க்கையில் போட்டி மிக அதிகமாகிவிட்டது. உணவுக்கும், இருப்பிடத்திற்கும், இவற்றைத் தரும் பணத்திற்கும், பணத்தைத் தரும் வேலைக்கும் எங்கும் எதிலும் போட்டி. இருப்பவை மிகக் குறைவு. மக்கள் எண்ணிக்கையோ மிக அதிகம். முந்திக் கொள்பவர்களே பிழைக்க முடியும் என்ற நிலை. இதனால் போட்டி கடுமையாகிவிட்டது. இந்தப் போட்டியில் ஏழையாய், இளைத்தவனாய்ப் பிறந்துவிட்ட ஒருவன் என்ன செய்ய முடியும்?

வாழ்க்கையின் சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு சொல்லும் ஆசிரியனாகப் பிச்சமூர்த்தி இயற்கையைத்தான் தேடிப் போகிறார்.

‘அடர்த்தியான பெரிய மரம் ஒன்று. ஒளி, வெளி, காற்று, நீர் அனைத்தையும் தனக்கே எடுத்துக் கொண்டது. நிலத்தையும் பெரும்பகுதி அடைத்துக் கொண்டு படர்ந்து வளர்ந்து நிற்கிறது. ‘பட்டப் பகலில் இரவைக் காட்டும்’ என்று படம்பிடிக்கிறார் அதை! இந்தப் பேராசை பிடித்த மரத்தின் அடியில் உள்ளது சிறிய கமுகு (பாக்கு). இதனால் சத்துக் கிடைக்காமல் வளர்ச்சி இன்றிச் சோனியாக (இளைத்துப்போய்) நிற்கிறது அந்தக் கமுகு. இந்த நிலையில் தன் பிறப்பை - சூழ்நிலையை நொந்து அது செத்துப் போய்விடவில்லை. வாழ்வதற்காகப் போராடுகிறது. தன்னால் இடம் பெயர்ந்து வேறு ஓர் இடத்துக்குச் செல்ல முடியாது என்று தெரியும். அதற்காகத் தளரவில்லை. தன் உடம்பை வளைக்கிறது. மரத்தை, அதன் இருட்டை மீறிக் கொண்டு ஒளியைத் தேடி வான் வெளியில் தலை நீட்டுகிறது, வாழ்கிறது.

கவிஞர் தம்மையும் இந்தக் கமுகையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். தாமும் இதன் நிலையில் இருப்பதை உணர்கிறார். பழமையின் இருட்டு; பொய்களின் இருட்டு; ‘உலகம் பொய் சாவுதான் மெய்’ என்னும் மூட வேதாந்தங்களின் இருட்டு. இவற்றுக்கு உள்ளே வளர்ந்ததால் தானும் சோனிக் கமுகாக ஆகிவிட்டதை உணர்கிறார்.

பெருமரத்துடன் போட்டி இடும் சோனிக் கமுகு இவருக்கு ஆசிரியன் ஆகிறது. வாழ்க்கை என்னும் போரை எதிர் கொள்ளும் நம்பிக்கையைப் போதிக்கிறது:

முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி

என்று உணர்த்துகிறது. மனம் தேறுகிறார். தம்மைப் போல் ‘சோனி’ ஆகிவிட்ட உலக மாந்தர்க்கும் உரைப்பதுபோல், தமக்குச் சொல்கிறார்:

ஜீவா ! விழியை உயர்த்து
சூழ்வின் இருள் என்ன செய்யும்?
அமுதத்தை நம்பு
ஒளியை நாடு
கமுகு பெற்ற வெற்றி நமக்கும் கூடும்
சூழ்வின் இருள் என்ன செய்யும்?

(ஜீவா = உயிர் வாழ்பவனே; சூழ்வு = வாழ்க்கைச் சூழ்நிலை; அமுதம் = (இங்கு) உயிர்தரும் ஒளி)

தளராத ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் இளைஞர்க்குக் கற்பிக்கப் பாடமாக வைக்க வேண்டிய அருமையான கவிதை இது.

மழைஅரசி, காட்டுவாத்து இவையும் நம்பிக்கையின் குரலை நம் மனத்தில் ஒலிக்கும் அழகிய குறுங்காவியங்கள் ஆகும்.

சைபீரியாவிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகிறது காட்டுவாத்து. வேடந்தாங்கலில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது. அவற்றை வளர்த்தெடுத்து அவற்றுடன், மீண்டு செல்கிறது. இதன் செயல், ‘வாழ்வு எங்கிருந்தாலும் நம்பிக்கையோடு அதைத் தேடிச் செல்’ என்னும் இயற்கையின் செய்தியாகிறது. அறவுரையாகிறது.

3.3.3 காதலும் இறைக்காதலும்
காதல் உயிரின் இயற்கை. உயிர்களின் உலகத்தை இயக்கும் சக்தியே அதுதான். ஒவ்வோர் அணுவிலும் துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு தவிப்பு அது.

துன்பம் எனும் இன்பம்
காதலர் சேர்ந்து தாகம் தணிவது இனிமைதான். அதைவிட, பிரிந்து தவித்து இருக்கும் கிளர்ச்சியே அதிக இனிமையானது. அந்தத் துன்பமே பெரிய இன்பம்.

இந்த மெய்யுணர்வின் வெளிப்பாடாக அமைந்ததுதான் காதல் என்ற கவிதை. இதுதான் பிச்சமூர்த்தி எழுதிய முதல் கவிதை.

மாந்தோப்பு வஸந்தத்தின் பட்டாடை உடுத்திருக்கிறது
மலர்கள் வாசம் கமழ்கிறது
மரத்தில் இருந்து ஆண்குயில் கத்துகிறது
என்ன மதுரம் ! என்ன துயரம் !

இப்படித் தொடங்குகிறது கவிதை. இளவேனில் காலம். மனிதனிலும் மற்ற உயிர் இனங்களிலும் மட்டும் அல்ல, பயிர் இனங்களிலும் கூடக் காதல் உணர்ச்சி பொங்கும் காலம். மாந்தோப்பு மணப்பெண் போலப் பட்டாடை உடுத்து நிற்கிறது. எங்கும் மலர்கள், காற்றும் வாசனையும் தழுவிக் கிடக்கின்றன. மரத்தில் இருந்து ஆண்குயில் கூவுகிறது. தன் இணையைச் சேர்வதற்காகத் தவிக்கிறது. தவிப்பு அழைப்பாகிறது. அதில், என்ன இனிமை! எவ்வளவு தனிமைத் துயரம்! அந்தக் குரலுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகள் கவிஞருக்குப் புரிகின்றன.
‘காதல் என்னும் தீயில் நெஞ்சம் கருகுகிறது. காதல் என்னும் நீரை ஊற்றித் தீயை அணைக்க வா’ என்று பெண்குயிலை அழைக்கிறதாம் ஆண்குயில்.

பக்கத்தில் இருக்கும் கொல்லையில் இருக்கிறது பெண்குயில். அது எதிர்க்குரல் கொடுக்கிறது. இந்தக் குரலில் இனிமையை முந்திக் கொண்டு சோகம் ஒலிக்கிறது. என்ன சொல்கிறது?

‘பிரிவின் தனிமை உயிரைத் தீக்கங்கு ஆக்கிவிட்டது. அதை உன் குரல் மூட்டிப் பெரிய தீச்சுடர் ஆக்கி விட்டது.

என் நெருப்பு உன் நெருப்பை அணைக்குமா?
காதல் தீர்வதைவிட இக்கிளர்ச்சியே போதை

இந்தத் துன்பம் தான் இன்பம்!’ என்கிறது.
கவிதையின் மூன்றாவது நிலையில் காதல் தெய்வம் பேசுகிறது. காற்றின் ஒலியில் (குரல் இன்றியே) இது கவிஞருக்கு மட்டும் கேட்கிறது.

ஒன்றுபட்டால் ஓய்வு உண்டாகும் ;
காதல் குரல்கட்டிப் போகும்.....

கிடைத்துவிட்டால் முயற்சி இல்லை. சேர்ந்துவிட்டால் தேடல் இல்லை. தேடல் இல்லையேல் இயக்கம் இல்லை. கற்பனையின் இனிப்பு இல்லை. கசப்புத்தான் மிஞ்சும்.

சேர்ந்துவிட்டால் அழைப்பு ஏது? காதல், குரல் எழுப்பாது; குரல் கட்டி ஊமை ஆகும்.

காதலின் குரல்கள்தாமே கவிதை, இசை, மற்றக் கலைகள் எல்லாம்? எல்லாமே இல்லாமல் போகும்....

கவிதையின் நான்காவது நிலையில் கவிஞரே பேசுகிறார். கவிஞர் மட்டும் பேசுகிறாரா? அவர், காதல் தெய்வம், பெண்குயில், ஆண்குயில் எல்லாம் ஒருவரே ஆகிப் பேசுகின்றாரா என்று பிரித்து அறிய முடியாத பேச்சு :

பிரிவினையின் இன்பம் இணையற்றது
தெரியாமலா ஈசனும் இயற்கையும் ஓடிப் பிடிக்கிறார்கள் !
தெய்வ லீலையை உரக்கச் சொல்லு
க்காவூ........க்காவூஉ........

இப்படி முடிகிறது கவிதை. உலக வாழ்க்கையே ஒரு விளையாட்டுத் (லீலை) தான். கடவுளும் இயற்கையாகிய நாம் எல்லாமும் பிரிந்து, ஒளிந்து கண்டு பிடிக்கச் சொல்லி ஆடும் ஒரு ‘கண்ணாமூச்சி’ ஆட்டம்.
சேருவதில் இன்பம் இருக்கிறது. அது கண்டுபிடித்தவுடன் ஏற்படும் கண நேர மகிழ்ச்சி. அதைவிடப் பிரிவில், தேடுவதில் ஏற்படும் இன்பம் மிகப் பெரியது, இணையற்றது. இதை நன்கு உணர்ந்துதான் இறைவன் நம்மிடம் இருந்து பிரிந்து ஒளிந்து விளையாடுகிறான். ‘இந்தத் தெய்வ விளையாட்டை (லீலையை) உரத்த குரலில் பாடு என்று க்காவூ..... க்காவூஉ’ என்னும் குயில்களின் கூவலோடு கவிதை முடிகிறது.

உண்மையில் பிச்சமூர்த்தி பார்த்தது பூத்த மாந்தோப்பை மட்டும்தான். கேட்டது இணைக்குயில்களின் குரல்களை மட்டும்தான். இவற்றின் உள்ளே இருந்து என்னென்ன உணர்வுகளைப் படித்துவிட்டார்! எத்தனை பெரிய தத்துவத்தைப் படித்துவிட்டார்!.

இயற்கை, வாழ்க்கை, ஆன்மா, இறைவன் இவ்வளவையும் பார்த்துவிட்டார். இவை அனைத்தையும் இணைக்கும் காதல் என்னும் உறவு நிலையை உணர்ந்து விட்டார். அதில் பிரிவுதான் இன்பம் என்ற மெய்யுணர்வை அடைந்து விட்டார். விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இவற்றின் தேடல் எல்லாம் இந்தப் பிரிவால் விளையும் தேடல்கள் தாம் என்று உணர்த்தி விட்டார்.

இந்தக் ‘காதல்’ என்ற முதல் கவிதையில் தொடங்கிக் கடைசியாக எழுதிய தேவை என்ற கவிதை வரை; இவரது 83 கவிதைகளிலும் என்ன பொருள் பொதிந்திருக்கிறது? இயற்கை - மனிதன் - இறைவன்: இந்த உறவு நிலையின் தத்துவச் சாரம்தான் அமைந்து கிடக்கிறது.

தமிழில் கவிதைக்கு இது ஒரு புதுப்பாதை திறந்திருக்கிறது. இதனால்தான் இவரது கவிதை புதுக்கவிதை ஆகியிருக்கிறது.

பெறுவது அன்று, தருவதே காதல்
காதல் என்னும் தலைப்பில் இன்னொரு கவிதையும் படைத்திருக்கிறார் பிச்சமூர்த்தி. காதலியாகத் தம்மைக் கற்பனை செய்து கொண்டு பாடிய கவிதை.

காதலரைத் தெருவில் காண்கிறாள். காதல் பொங்குகிறது. சேர்ந்து இன்பம் காண ஆசை கொண்டு வீட்டுக்கு அழைக்கிறாள். ஒருநாள் காதலர் மனம் கனிகிறார். ‘நாளை வருவேன்’ என்கிறார். தன்னையும் வீட்டையும் தூய்மை செய்து அலங்காரம் செய்து ஆவலுடன் காத்திருக்கிறாள். அவர் வரவில்லை. ஒருநாள் எதிர்பாராமல் வந்து நிற்கிறார் -

எண்ணாத நாள் ஒன்றில்
வந்தார் -
கோடை மழைபோல்
காட்டாற்று வெள்ளம்போல்
வீடெங்கும் குப்பைகூளம்
எங்கிலும் கந்தல் துணிகள்
முகம் எங்கிலும் வேர்வை
கைஎங்கும் சமையல் மணம்
எங்கும் இல்லநெடி
சிறு புகைச்சல்,
ஒட்டடை
வேளை பார்த்தா
நாதர் வந்தார்?
அசடானேன்.
கேட்பது அல்ல காதல்
தருவதுதான் என்று
தரையில் அமர்ந்தார்
என்னைக் காணேன்.

என்று காதலில் இணைவதைப் பாடி முடிகிறது இந்தக் கவிதை. முதல் ‘காதல்’ கவிதையில் இவர் காட்டிய பிரிவின் தத்துவம்தான் இதில் இணைவின் தத்துவம் ஆகக் கவிதை ஆகி இருக்கிறது. நண்பர்களே! முரண்பாடு இருப்பதுபோல் தோன்றுகிறதா? முரண்பாடு இல்லை. கண்ணாமூச்சியில் ‘தேடும் இன்பத்தை’, கிளர்ச்சியை முதல் கவிதை உணர்த்துகிறது. தேடி, எதிர்பாராமல் கண்டு பிடித்தவுடன் கிடைக்கும் ‘கூடும் இன்பத்தை’ இந்தக் கவிதை உணர்த்துகிறது. விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘என்னைக் காணேன்’ என்ற தொடரைக் கவனியுங்கள். அவர் வந்து சேர்ந்தபின் ‘தான்’ காணாமல் போகிறது. காதலில் மறுபடி ஆன்மிகம் கலக்கிறது. தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் என்ற திருநாவுக்கரசரின் ஆன்மக் காதல் உணர்வை இங்கும் காண்கிறோம். (திருவாரூர்த் திருத்தாண்டகம், 6501)

பிரிவு ஏது?
சிணுக்கம் என்னும் கவிதையில் இந்த நுணுக்கம் விளக்கம் பெறுகிறது. இதுவும் பிரிவு பற்றியது தான். ஊருக்குப் புறப்பட்டால், உறவினர் வண்டிப் படி அருகே ‘மதகு நீர்ச் சுழல் போல்’ தயங்கி விடை பெறுகின்றனர். வேலைக்குப் போகும் மகன் ‘போய் வாரேன் அம்மா’ என்று விடை பெறுகிறான். குளத்தின் சிறு அலைகூடக் கரை ஓரப் படியிடம் ‘சிறுமூச்சு’ விட்டு விடை பெறுகிறது. ‘நீ மட்டும் விடைபெறுவது இல்லை. கல்லா நீ’ என்கிறாள் தலைவி. இதற்குத் தலைவன் பதில் சொல்கிறான் : (இவர்களுக்கு வேலைக்குச் செல்லும் வயதில் மகன் இருக்கிறான்!)

"அடி கிறுக்கே !
சென்றால் அன்றோ விடைபெற வேண்டும்
போனால் அன்றோ வரவேண்டும்?
என்உயிர் என்னிடம்
இல்லாது இருக்கையில்
இருவர் ஏது?......
வீட்டில் இருந்தும்
என்னுடன் வருகிறாய்
வெளியே சென்றாலும்
உன்னுடன் இருக்கின்றேன்
கிறுக்கே” என்றேன்
சிணுக்கம் சிரிப்பாச்சு -

இதுவும் கூடக் கண்ணாமூச்சி விளையாட்டின் இன்னொரு பரிமாணம் தான். பிரிதல், சேர்தல் என்பவை கூட இன்பம் தரும் இந்த விளையாட்டு வசதிக்காகச் செய்து கொண்ட ஒரு ஏற்பாடுதான். உண்மையில் நீ, நான் இரண்டும் வேறல்ல. ஒன்றுதான். ஆன்மிக நெறியில் இதை இரண்டற்ற நிலை (அத்துவிதம்) என்பார்கள். இதைத்தான் இனிய காட்சிப் படிமமாகச் சொல் ஓவியம் தீட்டியிருக்கிறார் பிச்சமூர்த்தி.
காதலை நினைக்கும் போது ஆன்மக் காதலையும் இணைத்தே நினைக்கிறார் என்பதை இந்தக் கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

3.4 இக்கால உலகியல்

நண்பர்களே ! இயற்கையிலும் காதலிலும் பிச்சமூர்த்தி கண்ட வாழ்வியல் தரிசனங்களை, ஆன்மிக இணைவை இதுவரை கண்டோம். தற்கால வாழ்வியலில் - உலகியலில் அவரது பார்வை பற்றி இனி அறியலாம்.

இயற்கையின் சீரான இயக்கம், அழகு, தூய்மை இவற்றில் ஆழ்ந்து கரையும் மனம் பிச்சமூர்த்தியின் கவிமனம். இவரது ஆன்மிகமாகவும் இதுவே இருக்கிறது.

மனிதனின் சுயநலம், பொருள் தேடும் பேராசை இவை உலகத்தின் இனிமைகளைச் சிதைக்கின்றன. இவற்றின் மீது அவருக்கு எல்லை இல்லாத வெறுப்பு எழுகிறது. வெறுப்பை நெருப்பாக உமிழாமல் கேலி செய்யும் சிரிப்பாக வெளிப்படுத்துவது கவிஞனின் தனி இயல்பு. கேலியாக, பரிகாசம் தொனிக்க, நையாண்டி செய்து சுட்டிக் காட்டும் கவிதைக் கலை ‘அங்கதம்’ எனப்படும். பிச்சமூர்த்தியின் அங்கதம் தனித்தன்மை வாய்ந்தது.

3.4.1 கள்ளச் சந்தை
காந்தியின் தூய வாழ்க்கையால் கவரப்பட்டவர் பிச்சமூர்த்தி. சமூக வாழ்வில் எளிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், சேவை இவை இவர் வியந்து பின்பற்றிய காந்திய நெறிகள். சிறுமை கண்டு பொங்கும் நெஞ்சம் இவருடையது. ‘வாழ்வில் பெரும் செல்வத்தைத் தேடிக்கொள்ள எந்தக் கெட்ட வழியையும் பின்பற்றலாம்’ என்னும் ‘பிழைப்பு வாதத்தை’ இவர் கடுமையாக வெறுக்கின்றார்; எதிர்க்கின்றார். பெட்டிக் கடை நாரணன் என்ற அங்கதக் கவிதையாக இந்த எதிர்ப்பு உணர்வு வெளிப்பட்டு உள்ளது.

உலகப் போர்க் காலத்தில் வளர்ந்த ‘கள்ளச் சந்தை’ வணிகம் பற்றியது இக்கவிதை. போரின் விளைவால் உற்பத்தி, போக்குவரத்து இவை பாதிக்கப்பட்டு உணவு போன்ற பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பேராசை கொண்ட வணிகர்கள் பொருள்களைப் பதுக்கி வைத்து, மறைவாக மிக அதிக விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். மேலும், கலப்படம் செய்தும் மக்களை ஏமாற்றினர். இதற்குக் கள்ளச்சந்தை என்றும் கறுப்புச் சந்தை என்றும் பெயர். அரசாங்கம் இந்தக் கொள்ளைக்காரர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றப் பங்கீட்டுக் கடை (ரேசன் கடை)களை ஏற்படுத்தியது. அந்தக் கடை உரிமை பெற்ற வணிகர்களும் இந்த வகைக் கொள்ளை வியாபாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாமல் பிச்சமூர்த்தி படைத்த கவிதைதான் ‘பெட்டிக்கடை நாரணன்’.

முதலில் பெட்டிக்கடை வைத்த நாரணன் அரசாங்க அதிகாரி ஒருவர் தயவால் பங்கீட்டுக் கடை உரிமம் பெற்றான். அரிசியுடன் களிமண் உருண்டை கலப்படம் செய்தும், மண்ணெண்ணெயைக் ‘கறுப்பில்’ விற்றும் கொள்ளை இலாபம் அடைந்தான். தன்செயலை நியாயப்படுத்திப் பேசுகிறான். கவிஞர் நையாண்டியாய்ப் பேசுகிறார் :

மண்ணெண்ணெய் வர்ணம்
இரண்டுதான் என்றாலும்
மஞ்சளும் வெளுப்பும்
என்றாலும், பலபேர்கள்
கறுப்புஎன்று கதறினர்...

பாவமான கலப்படத்தை நியாயப்படுத்தி அவன் பேசும் பேச்சும் பரிகாசமாய் வெளிப்படுகிறது :

பாவம் ஒன்று இல்லாவிட்டால்
பார் உண்டா?
பசி உண்டா?

(பார் = உலகம்)

மண்ணில் பிறப்பதற்கு
நெல் ஒப்பும்போது
களிமண்ணில் கலந்திருக்க
அரிசி மறுப்பது இல்லை....
நட்சத்திரம் போல
நல்முத்துப் போல
சுத்தமாக அரிசிவிற்க
பங்கீட்டுக் கடைஎன்ன
சல்லடையா?
முறமா?.....

மூட்டை பிரிக்கும் முன்னர்
முந்நூறு பேர் இருந்தால்
சலிப்பது எங்கே?
புடைப்பது எங்கே?
புண்ணியம் செய்யத்தான்
பொழுது எங்கே?
அங்கயற் கண்ணியின்
அருள் என்ன சொல்வேன் !
பங்கீடு வாழ்க !
பாழ்வயிறும் வாழ்க !

வாழ்வில் தினமும் நடப்பதை அப்படியே இலக்கியமாய் ஆக்குவதை ‘நடப்பியல்’ என்பர். பேச்சு நடையில் நடைமுறை வாழ்க்கையின் புதிய கோலங்களை நேராகப் பேசுகிறார். கற்பனையும் உவமை உருவக அணிகளும் இருந்தால்தான் அது கவிதை என்ற பழமையான கருத்தை உடைத்து விட்டது இந்தப் புதுக்கவிதை.

‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை வரலாற்றில் ‘பெட்டிக் கடை நாரணன்’ முக்கியமான கவிதை’ என்கிறார் புகழ்பெற்ற இலக்கியப் படைப்பாளியான சுந்தர ராமசாமி.

3.4.2 விஞ்ஞானம்
கடவுளின் இயற்கைப் படைப்பு, மனிதனின் செயற்கைப் படைப்பு இரண்டில் எது உயர்ந்தது? விஞ்ஞான அறிவு இயற்கையை வெல்கிறது, ஆனால் அருள் இல்லாத அறிவு, அழிவுக்கே கொண்டு செல்லும் என்கிறது பிச்சமூர்த்தியின் கவிஉள்ளம்.

விஞ்ஞானியின் பக்கம் நின்று அவன் சாதனையைப் புகழ்வதுபோல் பழிக்கிறார் பிச்சமூர்த்தி. இதை ‘வஞ்சப் புகழ்ச்சி அணி’ என்று பழைய கவிமரபு சொல்லும். இந்த அங்கதக் கவிதை பிச்சமூர்த்தியின், இயற்கை பற்றிய உயர்ந்த மதிப்பீட்டைக் காட்டுகிறது. நகைச்சுவை உணர்வுக்குச் சான்றாகிறது.

கடவுளால் என்ன முடியும்?
புல்லைச் செய்வார்
மேய என்று மாட்டைச் செய்வார்
பொங்கும் நுரைப் பாலைச் செய்வார்
ஊட்ட என்று கன்றைச் செய்வார்

விஞ்ஞானி சொல்கிறான்: ‘நாங்கள் புல்லுக்குப் போட்டியாகக் கிருமிக் குண்டு செய்வோம்; வைக்கோலில் தோல் கன்று செய்து மாட்டைப் பால்சுரக்கச் செய்வோம்; உணவுச் சத்துகள் செய்து உழைப்புக்கே ஓய்வு தருவோம்; ஆண்பெண் சேர்க்கை இன்றி உயிரை உற்பத்தி செய்யும் முறையைக் கண்டு பிடிப்போம்; கோள்களில் தளம் அமைப்போம்’ என்று தன் பெருமையை ஆணவத்துடன் பேசுகிறான்.

அருள் என்னும் ஜால வித்தை
செலாவணி ஆகா தய்யா
மடமையால் உலகைச் செய்தால்
அறிவினால் களைதல் தவறா?

இறைவன் படைத்த இயற்கை மடமையில் இயங்குகிறதாம். விஞ்ஞானி அறிவு கொண்டு அதைத் திருத்துகிறானாம் ! ‘அருள்’ ஒரு மந்திரவித்தை. இனி அது உலகிற்குப் பயன்படாது என்று சொல்கிறான். விஞ்ஞானத்தைப் பெருமைப் படுத்துவதுபோல் கவிதை முடிகிறது. உண்மையில் முடியவில்லை தொடங்குகிறது. நம் சிந்தனையை எழுப்புகிறது. இயற்கை படைக்கிறது; செயற்கை - அறிவியல் அழிக்கிறது. இந்த அழிவுச் சக்தியின் இழிவைப் புகழ்வதுபோல் அங்கதமாகப் பழிக்கிறார். விஞ்ஞானம் அழிவுக்குப் பயன்படக் கூடாது என்பதே கவிஞரின் நோக்கம்.

3.5 உருவகமும், படிமமும்

‘உவமை, உருவகம் போன்ற அலங்காரங்களை மறுத்து, உண்மை, உலகியல் இவற்றையே இனிக் கவிதையின் இயல்பான அழகாகக் கொள்ள வேண்டும்’ -இது புதுக்கவிதையின் முக்கியப் பண்பு. எனவே படைப்பவன் கவிதையில் இவற்றைத் தேடி அணிவிப்பதும், படிப்பவன் தேடி அனுபவிப்பதும் தவறு. இது நல்ல கவிதைப் படைப்புக்கு அழகு அல்ல என்பது தான் புதுக்கவிதையின் கோட்பாடு.

ஆனால் மொழி இயற்கையிலேயே உவமை, உருவகம், படிமம் (உருக்காட்சி) இவற்றைத் தனக்குள் கொண்டிருக்கிறது. இதனால் இவற்றை முற்றிலும் விலக்கிவிட்டு ஒரு மொழி இயங்க முடியாது. மொழியின் முழு மலர்ச்சியான கவிதையால் எப்படி இயங்க முடியும்?

நண்பர்களே ! இதுவரை பார்த்த பிச்சமூர்த்தி கவிதைகளில் பல முழுக்கவிதைகளே உருவகமாகவும், படிமமாகவும் இருப்பதைக் காணலாம். ஒருமுறை திரும்பப் பாருங்கள். நல்ல உவமைகளும், உருவகங்களும் கவிதையோடு கலந்து நிற்பதைக் காண்பீர்கள்.இன்னும் சில சான்றுக்காக இங்குத் தரப்படுகின்றன.

உருவகம்
சொல் என்னும் கவிதையில் சொல்லை உருவக அடுக்காக வருணிக்கிறார். அதன் முரண்பட்ட இரட்டைத்தன்மையை, அது தரும் ஏமாற்றத்தை, சமயங்களில் அதன் பயனின்மையை - ஒரு கவிஞனின் அனுபவமாகத் தருகிறார்.

சொல் ஒரு சூது
இருபுறமும் ஒடும்
காக்கைக் கண்
இருமுகம் தெரியும்
பேதக் கண்ணாடி
காம்பில் படாமல்
மரத்தில் தாக்கி
மூர்க்கமாய்த் திரும்பிவரும்
எறிகல்
உண்மை என்று
ஒருதலை கடிப்பதை
மாயை என்று மறுக்கும்
இருதலைப் பாம்பு

படிமம்
தேவை என்னும் கவிதையில் சடுகுடு விளையாட்டு ஒரு படிமமாகிறது.

விலைப் புள்ளியும்
பஞ்சப் படியும்
விளையாடும் சடுகுடு


விலைப்புள்ளிக்கு ஏற்றாற் போல, ஊழியர்களின் பஞ்சப்படி ஏறும்; இறங்கும். இதை இரண்டுக்கும் இடையிலான சடுகுடுவாகக் காண்கிறார்.

இப்படிப் பல உருவகங்களை, படிமங்களை இவர் நூல் முழுக்கக் காணமுடியும்.

நண்பர்களே ! இவற்றால் என்ன புரிந்து கொள்கிறோம்?

எதுகைக்கும் மோனைக்குமாகச் சொற்களை வலிந்து கையாளுவது; உவமை உருவகம் என்று கவிதைப் பொருளோடு பொருந்தாமல் செயற்கையாகக் கையாளுவது - இவற்றையே பழமை என்று தள்ளுகிறார் பிச்சமூர்த்தி. கவிதையின் பொருளோடு இயைந்த இந்த எழில் நலங்களைத் தம் கவிதை முழுக்கத் தேவைக்கேற்பப் பயன்படுத்தியிருக்கிறார்.

3.6 உள் உணர்வின் வெளிப்பாடு
அறிவு மட்டுமே நம் வாழ்க்கையையும் உலகையும் வழிநடத்துகிறதா? இந்தக் கேள்விக்குக் கலைஞர்கள் கூறும் விடை ‘இல்லை’ என்பதுதான். உள் உணர்வுதான் வழி நடத்துகிறது என்றுதான் எந்த உயர்ந்த கலைஞனும் சொல்வான். ந.பிச்சமூர்த்தி உயர்ந்த கலைஞர். சிறந்த கவிஞர். நமக்குள் உறங்கிக் கிடக்கும் உள்ளுணர்வை - மெய் உணர்வை விழிக்க வைக்கக் குரல் எழுப்புவதே இவரது தொழிலாக இருக்கிறது. அந்தக் குரலே இவரது கவிதையாக இருக்கிறது.

காட்டுவாத்து குறுங்காவியம் இதை அழகாக வெளிப்படுத்துகிறது -

சுயநலத்தைப் பொதுத்தொண்டு ஆக்கும்
ஜாலக் கண்ணாடி வித்தை
காட்டநான் பாடவில்லை
பழவேதப் படையை ஓட்டி
லோகாயத வேதப் படையின்
தமுக்காய் ஒலிக்க நான்
தரணியில் அதிரவில்லை
மனுக்கால வெள்ளம்போச்சு
மார்க்ஸ்கால வெள்ளம்போகும்
பூமித்தாய் கருணை வெள்ளம்
எக்காலும் வழியாது ஓடும்
இயற்கையின் ஓயாத் தானம்
உயிர்களின் ஒழியா உழைப்பு
செயற்கையின் சிலுப்பல் இடையே
மலையாக உயர்ந்து நிற்கும்

(பழவேதம் = பழைய வேதங்கள்; லோகாயதம் = உலக வாழ்வியல்; தமுக்கு = வெற்றி முரசு; எக்காலும் = எப்போதும்; தானம் = கொடை, வழங்கல்)

காட்டுவாத்து - பறந்துவரப் பாதை இல்லை, பார்த்துவர வரை படங்கள் இல்லை. பிழைதிருத்த அதற்குப் பகுத்தறிவு இல்லை ; பறக்கும் சாத்திரம் பற்றிய படிப்பு அறிவு இல்லை. சைபீரியாவை விட்டு மூவாயிரம் மைல் தாண்டி வேடந்தாங்கலுக்குப் பறந்து வருகிறது. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சை வளர்த்துவிட்டுத் திரும்பிப் போகிறது. தன் இனத்தைப் பேணும் உணர்வில்,


நெறியோ நீதியோ
நீண்ட கதைகளோ
கலாச்சார மரபோ, மமதையோ
புகட்டாத மெய்யுணர்வால்
மூவாயிரம் கல்தாண்டி
இங்குவந்த பறவைச் சத்தம்.....

(மமதை = ‘நான்’ என்னும் அகந்தை; வேடந்தாங்கல் = தமிழ்நாட்டில் இருக்கும் பறவைகள் சரணாலயம்)


பிச்சமூர்த்தியின் பாட்டுச் சத்தமும், இந்தப் பறவையின் சிறகுச் சத்தமும் வேறு அல்ல.

‘மெய்யுணர்வை எழுப்பிடும் ‘காட்டு வாத்து’ ஆகிச் சிறகை விரித்துவிட்டால் வாழ்வும் வேடந்தாங்கல் ஆகும்’ என்கிறார் இந்தக் கவிஞானி.

பொங்கல் கவிதையில் இறுதியில் இதே அறிவுரைதான் கூறுகிறார்:

பொங்கல்இடு தன்னலத்தை
பொங்கவிடு உள்உணர்வை

வாழ்வியல் பற்றிய இவரது கவிதைக் கோட்பாடு இதுதான்! நண்பர்களே! ந.பிச்சமூர்த்தி கவிதை தமிழ்க்கவிதை வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் என்பதை இதுவரை கண்ட சில சான்றுகளால் உணர்ந்திருப்பீர்கள். அவரது கவிதைகளை, முழுதும் ஆழமாக விரித்துரைக்க இப்பாடப் பகுதியில் இடமில்லை. நூல் தேடிப் படித்துச் சுவையுங்கள்.

3.7 தொகுப்புரை

இதுவரை ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்று நினைவுபடுத்திப் பாருங்கள் :
  • ந. பிச்சமூர்த்தி என்னும் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
  • அவரது கவிதைகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.
  • மரபில் இருந்து விலகித் தமிழில் புதுக்கவிதை தோன்றுவதற்குப் பிச்சமூர்த்தி ஆற்றிய பங்கு பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
  • அவரது கவிதைகளில் பாடப்பெறும் பொருள்கள் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.
  • பிச்சமூர்த்தியின் படைப்புக் கலைத்திறன்கள் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
  • பிச்சமூர்த்தியின் வாழ்வியல் பற்றிய பார்வையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
  • ‘பெட்டிக்கடை நாரணன்’ என்னும் கவிதை எந்தச் சமூக இழிவுகளை எள்ளி நகையாடுகிறது? கலப்படம், கறுப்புச்சந்தை வணிகம்.
  • ‘விஞ்ஞானி’ என்ற கவிதை எதை உணர்த்துகிறது? அருள் இல்லாத அறிவு அழிவுக்கே கொண்டு செல்லும் என்பதை உணர்த்துகிறது.
  • ‘காட்டுவாத்து’ என்ன விளைவை ஏற்படுத்துகிறது? உறங்கும் நம் உள்உணர்வை - மெய்யுணர்வைத் துயில் எழுப்புகிறது.
  • பிச்சமூர்த்தி கவிதைகளின் வாழ்வியல் பற்றிய கோட்பாடு என்ன? தன்னலத்தை அழித்துவிடு, உள்உணர்வை எழுப்பிவிடு.
  • ‘புதுக்கவிதை’ என்ற பெயர் பெறுவதற்கு முன், அது என்ன பெயரால் அழைக்கப்பட்டது? வசன கவிதை.
  • காதலில் அதிக இன்பம் எதில்? இணைவதிலா? பிரிவதிலா? பிரிவதில்.
  • பிச்சமூர்த்தி எந்த இயற்கைப் பொருளைப் பார்த்துத் தன்னம்பிக்கைப் பாடம் கற்றார்? சோனிக் கமுகு - இளைத்த பாக்கு மரத்தை !
  • பிச்சமூர்த்தியின் ‘கிளிக்கூண்டு’ என்பது எதைக் குறிக்கிறது?
  • கவிதையின் வடிவத்தை !

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday 7 January 2021

தமிழ்நாடு சமூக நல வாரியம்

  • மகளிர் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு 1954 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சமூக நல வாரியம் தொடங்கப்பட்டது. 
  • மகளிர் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பின்வரும் நோக்கங்களுடன் இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது. 
  • மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்கான அரசு சாரா நிறுவனங்களின் தன்னார்வ முயற்சிகளை ஊக்குவித்து மேம்படுத்துதல். 
  • தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப வசதியும் மற்றும் நிதியுதவியும் அளித்து அவற்றின் சேவையின் தரத்தையும் மதிப்பையும் உயர்த்துதல். 
  • மாநில மற்றும் மத்திய சமூக நல வாரியங்களின் திட்டங்களையும் மாநில அரசின் திட்டங்களையும் நன்முறையில் செயல்படுத்துவதை கண்காணித்தல். 
  • தமிழ்நாடு சமூக நல வாரியம் ஒரு அலுவல் சாரா தலைவரையும், மத்திய சமூக நல வாரியத்தால் நியமிக்கப்பட்ட 15 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 15 அலுவல் சாரா உறுப்பினர்களையும், ஆக மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 
  • பெண்களுக்கு அதிகாரமளித்தலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பலப்படுத்தவும், அவற்றிற்கு உதவி செய்யும் பொருட்டு, கல்வி மற்றும் பயிற்சி, அதிகாரம் அளித்தல், கூட்டு முயற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்திற்கு வருவாய் பெருக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு சமூக நல வாரியம் ஊக்கப்படுத்தி உதவி செய்கிறது. 
  • மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு 
  • அரசு சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல் 
  • சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 11 July 2020

ஆசியாவில் மிகப் பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம்

மத்திய பிரதேச மாநிலம் ரெவா பகுதியில் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். படம்: பிடிஐ
ரெவா (ம.பி.)
‘‘சுற்றுச் சூழலை பாதிக்காத வகை யில் சூரிய ஆற்றலில் மின்னுற்பத்தி செய்வதில் இந்தியா மிகவும் முன் னேற்றம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் ஒரு துறையாக இத்துறை வளர்ந்து வருகிறது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரெவா எனுமிடத்தில் முதல் கட்டமாக 750 மெகா வாட் சூரிய மின்னுற்பத்தி மையத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஆசியாவி லேயே மிகப் பெரிய சூரிய மின் னுற்பத்தி பூங்கா இங்கு உருவாக் கப்பட்டுள்ளது. மொத்தம் 1,500 ஹெக்டேர் பரப்பளவு இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விழா வில் பிரதமர் மோடி பேசியதாவது:

மத்திய பிரதேச மாநிலம் சூரிய மின்னுற்பத்தியில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சா ரத்தை இந்தியாவுக்கு அளிக்கும் மாநிலமாகவும் விளங்குகிறது. இந்த சூரிய மின்னுற்பத்தி ஆலை யில் உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு காற்றில் கலப்பது குறையும்.

சூரிய மின் சக்தி நிச்சயமானது, சுத்தமானது. சூரிய மின்னுற்பத்தி யில் முன்னணியில் திகழும் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. ரெவா சூரிய மின்னுற் பத்தி ஆலையில் உற்பத்தியாகும் மின்சாரம், மத்திய பிரதேச மாநிலத்துக்கு மட்டுமின்றி, டெல்லி மெட்ரோ சேவைக்கும் அளிக்கப்படும். 21-ம் நூற்றாண்டில் மின் சக்தி மிகவும் முக்கியமானது. அதில் சுத்தமான, சூழல் பாதிப்பில்லாத மின்சாரம் சூரிய ஆற்றலில் இருந்து கிடைக்கிறது.

வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது. இத்தகைய சூழலில் சுய சார்புடன் திகழ சூரிய மின்னுற்பத்தி மிகவும் உதவியாக இருக்கும்.

இதுபோன்ற மிகப் பெரிய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மின்னுற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், சூழல் பாதுகாப்பில் நமக்குள்ள அக்கறை வெளிப்படுவதோடு, சூரிய மின்னுற்பத்தியில் நமது சுய தேவையும் பூர்த்தியாகும். நமது மின் தேவையை நாமே பூர்த்தி செய்யும் திறனை பெற்றுள்ளோம்.

இந்தியாவில் இருந்து மனித நேயத்தை எதிர்நோக்குகிறது இந்த உலகு. இந்த உலகை ஒருங் கிணைக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதி தான் ஐஎஸ்ஏ அதாவது சர்வதேச சூரிய ஒருங்கிணைப்பு. இந்த சக்தி தான் உலகை ஒன்றிணைக்கிறது. ரெவா தவிர, ஷஜாபூர், நீமுச், சத்ர பூர் ஆகிய பகுதிகளிலும் சூரிய மின்னுற்பத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ரெவா மின்னுற்பத்தி திட்ட மானது 3 திட்டங்களை உள்ளடக்கி யது. ஒவ்வொன்றும் தலா 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் பகுதிகளைக் கொண்டது. இந்த சூரிய மின்னுற்பத்தி நிறுவனம் ரெவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் (ஆர்யுஎம்எஸ்எல்) நிறு வனத்தால் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் (எம்பியுவிஎன்) மற்றும் சூரிய மின்னுற்பத்தி கார்ப்ப ரேஷன் ஆப் இந்தியா (எஸ்இசிஐ) ஆகிய இரண்டும் கூட்டாக உருவாக்கிய நிறுவனமாகும்.

சூரிய மின்னுற்பத்தி பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.138 கோடி முதலீடு செய்துள்ளது. மஹிந் திரா ரெனிவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், அரின்சுன் கிளீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், ஏசிஎம்இ ஜெய்ப்பூர் சோலார் பவர் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங் கள் இங்கு ஆலை அமைத்துள்ளன.

டெல்லி மெட்ரோ ரயில் நிறு வனத்துக்கு இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 24 சதவீத மின்சாரம் சப்ளை செய்யப்படும். எஞ்சிய மின்சாரம் மாநில மின் உபயோகத் துக்கு வழங்கப்படும். சூரிய மின்னுற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரம் வெளி மாநிலத்துக்கு சப்ளை செய்வது இதுவே முதல் முறை. மத்தியப் பிரதேசத்தில் இருந்து டெல்லி மெட்ரோ ரயில் சேவைக்கு இந்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.97 முதல் ரூ.3.30 என்ற விலையில் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் சிவராஜ் சிங் சவு கான், மத்திய மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மத் திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிர தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐ.நா. பாராட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் தலை வர் அன்டோனியோ குத்தேரஸ், இந்திய சூரிய மின்னுற்பத்தி திட்டத் துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் சூழலிலும் இந்தியா இத்தகைய சூழல் பாதுகாப்பு மின்னுற்பத்தி திட்டத்தை செயல்படுத்தி உள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் 2050-ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்யம் அளவுக்குக் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எட்டுவதற்கு சூரிய மின்னுற்பத்தி மிகவும் உதவியாக இருக்கும் என்று குத்தேரஸ் சுட்டிக் காட்டினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி சிகாகோ ரோட்டரி சங்கம் கவுரவம்

சிறந்த சேவைக்காக முதல்வர் பழனிசாமியை ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ என்று அமெரிக்காவின் சிகாகோ ரோட்டரி ஃபவுண்டேஷன் கவுரவப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அமெரிக்காவின் சிகாகோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் ‘தி ரோட்டரி ஃபவுண்டேஷன் ஆஃப் ரோட்டரி இன்டர்நேஷனல்’ அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்த் தடுப்பு, தாய்சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு ‘பால் ஹாரிஸ் ஃபெல்லோ’ (PAUL HARRIS FELLOW) என அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி, இந்த அமைப்பு ‘பால் ஹேரிஸ் பெல்லோ’ என கவுரவப்படுத்தியுள்ளது. இத் தகவலை செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 29 May 2020

துறைத் தந்தையர்

ஒவ்வொரு துறை கண்டுபிடிப்புக்கும் முன்னோடியாக விளங்கியவர்களை அந்தத் துறையின் தந்தை என்று போற்றி வருகிறோம். அந்த வகையில் சில முக்கியமான துறைகளின் தந்தை யார் என்று இங்கு அறிவோம்...

நோய் தடுப்பியலின் தந்தை (தடுப்பூசி) - எட்வர்டு ஜென்னர்

தொல்லுயிரியலின் தந்தை - சார்லஸ் குவியர்

சுற்றுச்சூழலியலின் தந்தை - எர்னஸ்ட் ஹெக்கல்

வேதியியலின் தந்தை - ராபர்ட் பாயில்

நவீன வேதியியலின் தந்தை - லவாய்சியர்

அணுகுண்டின் தந்தை - ராபர்ட் ஓபன் ஹெய்மர்

கணிப்பொறியின் தந்தை - சார்லஸ் பாபேஜ்

ரெயில்வேயின் தந்தை- ஜார்ஜ் ஸ்டீவன்சன்

நகைச்சுவையின் தந்தை - அரிஸ்டோ பேனஸ்

துப்பறியும் நாவல்களின் தந்தை - எட்கர் ஆலன் போ

அறிவியல் நாவல்களின் தந்தை - ஜூல்ஸ் வெர்னே

செல்போனின் தந்தை - மார்டின் கூப்பர்

இந்திய அணுக் கருவியலின் தந்தை - ஹோமி பாபா

இந்திய விண்வெளி இயலின் தந்தை - விக்ரம் சாராபாய்

இந்திய ஏவுகணைத் தொழில்நுட்ப தந்தை - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

ஹோமியோபதியின் தந்தை - சாமுவேல் ஹானிமன்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தகவல் களஞ்சியம்

டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல்தான், காது கேட்கும் கருவியையும் கண்டுபிடித்தார்.

போரில் முதன் முதலில் ஹெலிகாப்டர்களை பயன்படுத்திய நாடு, ‘அமெரிக்கா’.

அமெரிக்காவுக்கு ‘சூரியன் மறையும் நாடு’ என்ற பெயர் உண்டு.

உலகில் 500-க்கு மேற்பட்ட எரிமலைகள், செயல்படும் எரிமலைகளாக உள்ளன.

இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம், ‘டைனமோ’.

இந்தோனேஷியாவின் விமான நிறுவனம் ஒன்றின் பெயர், ‘கருடா’.

‘மார்த்தா வாஷிங்டன் ஓட்டல்’, பெண்களுக்காக கட்டப்பட்ட ஓட்டலாகும்.

ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.

எரிவதற்கு காற்று தேவை என்பதை நிரூபித்துக் காட்டியவர், ஜான்மேயோவ்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில், இந்தியர்கள் அதிகம் வாழுகிறார்கள்.

முகத்தை (கிரீம்மூலம்) ஈரப்படுத்திக் கொண்டு தாடி மழிக்கும் (ஷேவ்) முறையை கையாண்டவர்கள், ரோமானியர்கள்.

உலகின் மிகப்பெரிய வெண்கலச் சிலை, ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு புத்தர் சிலையாகும்.

ஐ.நா. பொதுசபை தலைவர் பதவி வகித்த முதல் பெண்மணி, இந்தியரான விஜயலட்சுமி பண்டிட் ஆவார்.

கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி, ஷராவதி நதியிலிருந்து உற்பத்தியாகிறது.

‘புளுட்டோனியம்’ அதிக நச்சுத்தன்மை கொண்டதாகும்.

அமெரிக்காவில் 1830-ல் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 11 May 2020

எவரெஸ்ட் சிகரம் திபெத்தில் உள்ளதா? சீனாவுக்கு இந்திய, நேபாள மக்கள் கடும் எதிர்ப்பு

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், திபெத்தில் அமைந்திருப்பதாக சீன அரசு பொய் செய்தியை பரப்பி வருகிறது. இதற்கு இந்திய, நேபாள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேபாளத்தின் இமய மலைப் பகுதியில் சாகர் மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இதனை ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவின் அரசு தொலைக்காட்சியான சிஜிடிஎன் சேனலின் ட்விட்டர் கணக்கில் கடந்த மே 2-ம் தேதி ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அதில், சீன ஆளுகைக்கு உட்பட்ட திபெத் தில் எவரெஸ்ட் சிகரம் அமைந் துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு இந்தியா, நேபாள மக்கள் சமூக வலைதளம் வாயிலாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேபாளத்தை சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளது. இந்த சிகரம் சீன எல்லைக்குள் இருப்பதாக பொய் செய்தியை பரப்புவதை நிறுத்துங்கள்’’ என்று கண்டித்துள்ளார்.

நேபாளத்தை சேர்ந்த மற் றொருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எவரெஸ்டை சீனா சொந் தம் கொண்டாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சீனாவுக்கு எதிராக நேபாள அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக் கழக பேராசிரியர் காந்த் கூறும்போது, ‘‘சீனாவின் திபெத் எல்லைப் பகுதியில் இருந்து எவரெஸ்ட் சிகரத்துக்கு செல்லும் வழி கடினமானது, செங்குத்தானது. இதனால் அங்கு சுற்றுலா தொழில் செழிப்பாக இல்லை. நேபாளம் வழியாகவே எவரெஸ்ட் சிகரத்துக்கு மலையேற்ற வீரர்கள் செல்கின்றனர். எனவே எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நேபாள எல்லைப் பகுதியை ஆக்கிரமிக்க சீன அரசு முயற்சிக்கிறது’’ என்று தெரிவித்தார்.

எவரெஸ்ட் விவகாரத்தில் இந்தியா, நேபாளம் மட்டுமன்றி உலகம் முழுவதும் சீனாவுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், எவரெஸ்ட் சிகரத்தில் பிரதிபலித்த சூரியனின் ஒளிவட்ட புகைப்படங்களை சிஜிடிஎன் சேனல் ட்விட்டரில் நேற்று வெளியிட்டது. அதில் எவரெஸ்ட் சிகரம் சீன - நேபாள எல்லையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ‘‘எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ளது. சீன - நேபாள எல்லையில் இல்லை’’ என்று ஏராளமானோர் கண்ட னத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் சீன ஆதிக்கத்தில் இருந்து திபெத் விடுதலை பெற வேண்டும் என்ற குரலும் சமூக வலைதளத்தில் ஓங்கி ஒலிக்கிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 4 May 2020

பொது அறிவு வினாக்கள்

1) சிவாஜி வசூலித்த விளைச்சல் வரி பங்கு?2/5 பங்கு

2) ரோகில்லாப் போர் நடைபெற்ற ஆண்டு? 1774

3) சுதந்திர மரத்தை நாட்டவர்?
திப்புசுல்தான்

4) முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஆண்டு?1951

5) இந்திய அரசு எல்லையோர அமைப்பை தொடங்கிய ஆண்டு?
1960

6) உலகத்திலேயே அதிக அதிகாரமுடைய ஜனாதிபதி யார்?
அமெரிக்கா

7) இந்தியாவின் மருத்துவ தலைநகரம்?
சென்னை

8) சணல் தொழிற்சாலை முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
ரிஸ்ரா (கொல்கத்தா )

9) பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எப்போது தொடங்கப்பட்டது?
மே 1 2016

10) மொகஞ்சதாரோவின் மிகப்பெரிய தானியக்களஞ்சியம் எத்தனை அடி ஆகும்? 150

11) இந்தியாவில் எந்த மாநிலத்தில் நந்தாதேவி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது?உத்திரபிரதேசம்

12) அனைவருக்கும் கல்வியை கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசு முன்னுரிமை கொடுத்தது எந்த வகுப்பிற்கு? 1 முதல் 5

13) புவியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் தோன்றி அதிக எண்ணிக்கையில் மக்களை பாதிக்கும் நோய்? எபிடேமிக்

14) சிக்கிள் செல் அனீமியா நோயால் பாதிக்கப்பட்ட நபர் இறக்கும் வரை தினமும் உட்கொள்ள வேண்டியது?
போலிக் அமிலம்

15) சிவப்பு நிறத்தை கண்டறிய முடியாத நிலையில் பெயர் என்ன?புரோட்டோனோபியா

16) புரதம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்? முல்டர்

17) தாய் பாறைகள் என அழைக்கப்படுவது? தீப்பாறைகள்

18) புவியின் மேற்பரப்பில் மொத்த பரப்பளவு?
510 பில்லியன் ச கி மீ

19) சிலிக்கா பாறைகள் அதிகம் காணப்படும் அடுக்கு?மேலோடு

20) அமைதிப் மண்டலம் என அழைக்கப்படுவது எது?
நிலநடுக்கோட்டுதாழ்தழமண்டலம்

21) நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பீரோஸ்துகளக்

22) செம்மறி ஆட்டு மேகங்கள் என அழைக்கப்படுவது எது?
இடைபட்ட திரள் மேகங்கள்

23) வளிமண்டலத்தில் ஆக்சிஜன் உள்ளது என கண்டறிந்தவர்?
ஜோசப் பீரிஸ்ட்

24) காற்றின் செங்குத்து அசைவினை எவ்வாறு அழைக்கலாம்?
காற்றோட்டம்

25) முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக இருந்தவர்?
மொராஜி தேசாய்

26)  சூரியனை கிழக்கிலிருந்து மேற்காக சுற்றிவரும் கோள் எது?
வெள்ளி

27) சர்வதேச மலைகள் தினம்?
டிசம்பர் 11

28) ஆண்டிஸ் மலைத்தொடர் காணப்படும் பகுதி?
தென்அமெரிக்கா

29) இந்தியாவிற்கு வந்த முதல் சீன பயணி யார்?
பாகியன்

30) உலகின் பெரும் மருந்தகம் என அழைக்கப்படும் காடுகள்?
வெப்பமண்டல மலைகாடுகள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 1 May 2020

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள் ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி சுற்றுவட்டார கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலைக்கு தனி மவுசு உண்டு. இயற்கையாகவே இனிப்பு சுவையுள்ள இந்த நிலக்கடலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறி யீடு பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசின் புவி சார் குறியீடு வழக்கறிஞர் ப.சஞ்சய் காந்தி ஆஜரானார். மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் புவிசார் குறியீடு பதிவகம் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் கோவில்பட்டி கடலைமிட்டாய், மணிப்பூர் கருப்பு அரிசி, கோரக்பூர் டெரகோட்டா ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி கூறும்போது, ஏற்கெனவே, தமிழகத்தின் 33 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தற்போது 34-வது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கிடைத்துள்ளது.

1940-ம் ஆண்டு முதல் கோவில் பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தோம். தற்போது அதற்குரிய அங்கீ காரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக் கிறது.

இனிமேல், கோவில்பட்டி கடலைமிட்டாய் என்ற பெயரில் கோவில்பட்டி நகரம் மற்றும் அருகே உள்ள கிராமங்களில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும், என்று கூறினார்.

கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கச் செயலாளர் கே.கண்ணன் கூறுகையில், கோவில்பட்டியில் 150 கடலைமிட்டாய் உற்பத்திக் கூடங்கள் உள்ளன. இப்பணியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.160-க்கு விற்பனை செய் யப்படுகிறது. தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், எங்கள் வாழ் வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி பகுதி கடைகளுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் கள் கிடைக்கும் என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 24 April 2020

தகவல் களஞ்சியம்

நான்காம் உலகத் தமிழ்மாநாடு இலங்கையில் நடந்தது.

செஞ்சிலுவைச் சங்க நாளாக மே 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

சோழர்களின் முதலாம் தலைநகராக இருந்தது உறையூர்.

நைட்ரிக் அமிலம் பட்டால் தங்கத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

பெண் தொழிலாளர்கள் அதிகமுள்ள நாடு சீனா.

நாவல் பழம் கல்லீரலுக்கு வலிமை தரும்.

மான்களின் கொம்பு கிளைகளைக் கொண்டு அதன் வயதை அறியலாம்.

வேர்க்கடலை பிரேசிலை பூர்வீகமாக கொண்டது.

அமைதிக் கடல் எனப்படுவது பசிபிக்.

உலகின் பழமையான ரெயில் நிலையம் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ரெயில் நிலையம்.

சரோஜினி நாயுடு இந்தியாவின் கவிக்குயில் எனப்படுகிறார்.

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழித்தார்.

பூஜ்ஜியத்தின் பயன்பாட்டை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.

நீலப்புரட்சி என்பது அதிக மீன் உற்பத்தியை குறிக்கும்.

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தவர் தெரசா தான்.

செய்தித்தாள், இலக்கியம், இசைத்துறை சாதனைகளுக்காக புலிட்சர் பரிசு வழங்கப்படுகிறது.

உலக சர்க்கரை நோய் தினம் ஜூலை 27.

ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை இடம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் அமைந்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday 22 April 2020

குதிரைக்கு மட்டும் ஏன் கண்களுக்குக் கவசம் இட்டு ஓட்டுகிறார்கள்?

குதிரையின் நீண்ட தலை அமைப்பில் , கண்கள் பக்கவாட்டில் அமைந்துள்ளன இதனால் அதற்கு இரண்டு ஒற்றைக்கண் பார்வைகள் ( இரண்டு கண்களும் இருவேறு பொருள்களை பார்க்கும்திறன் ; தனிமனிதனுக்கு இரண்டு கண்களும் ஒருபொருளை மட்டும்தான் பார்க்க முடியும் ) கிடைக்கும். ஒரே சமயத்தில் தனது இரண்டு பக்கவாட்டுத் திசைகளிலும் பார்க்க முடியும்.

அத்துடன் தனக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க முடியும் அதன் உடலால் மறைக்கப்படுகிற பின் பகுதியை மட்டும்தான் அதனால் பார்க்க முடியாது. தனக்குப் பின்னாலிருக்கிற பொருள்களைக் குதிரை இரண்டு கண்களாலும் பார்க்க முயற்சிக்கும் போது அது கண்களை முன்பக்கம் திருப்பிப் பார்வையைக் குவியப்படுத்தும். அப்போது அதற்கு பக்கவாட்டுப் பார்வையும் பின்புறப் பார்வையும் மறைந்துவிடும். அதன் கண்கள் சுமார் 1.2 மீட்டருக்குக் குறைவான தொலைவில் உள்ள பொருள்களைக் குவியப்படுத்த முடியாது. ஆனால் அதுதான் சாப்பிடும் இரையைக்கூட பார்ப்பதே இல்லை.

குதிரைகளின் கண்களைக் கவசம் போட்டு மறைக்கும்போது தான் ஓடுகிற திசையில் மட்டுமே கவனத்தை செலுத்தும் , பக்கவாட்டிலோ  , பின்புறத்திலோ என்ன நடக்கிறது என்பது அதற்குத் தெரியாது. மேலும் குதிரையின் கண்களைவிட உயர்ந்தமட்டத்தில் இருக்கும் பொருள்களையும் அதனால் தெளிவாகப் பார்க்க முடியாது.

தொலைவில் உள்ள பொருள்களையும் நுட்பமாகப் பார்க்க குதிரையால் இயலாது. குதிரை நிறக்குருடு வேறு. இந்தக் குறைபாடுகளைச் சமாளிக்க குதிரையின் நீண்ட கழுத்து உதவுகிறது. தலையின் நிலையை மாற்றித் திருப்பி தனது கண்களில் பொருள்கள் தெளிவாக தெரியும்படி குதிரை செய்து கொள்கிறது.

குதிரையின் கண்ணில் உள்ள விழித்திரை தட்டையாக இருக்கும். மற்ற விலங்குகளில் அது குழிவாக உள்ளது. அதனால்தான் தன் தலையை திருப்பி விழித்திரையில் பொருள்கள் பிம்பம் குவியப்படும்படி செய்ய குதிரையால் முடிகிறது. அத்துடன் பெரும்பாலான குதிரைக்குக் கண்ணில் உள்ள லென்சும் , கார்னியாவும் சரியானபடி வடிவமைக்கப்படவில்லை. கீறல் விழுந்த லென்சைப்போல மேடுபள்ளங்களுடனிருப்பதால் குதிரைக்குத் தெளிவாக பார்வை கிடைப்பதில்லை. தன்தலைக்கு முன்னாலிருப்பவற்றை தெளிவாக பார்க்கக்கூடிய குதிரைகளே உயர்தரமானவையாக மதிப்பிடப்பட்டுள்ளன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday 17 April 2020

கோழி முட்டையின் வடிவம் உருண்டையாக இல்லாமல் நீண்டு இருப்பதேன்?

பொதுவாக முதிர்ந்த அண்டங்கள் ( Ovum ) அனைத்தும் உருண்டை வடிவம் உடையவை. ஆனால் சில விலங்குகளில், அதிலும் பூச்சியினத்தில் முட்டைகள் நீள வடிவமுடையவை. சுத்தி மீன் மற்றும் பறவைகளின் முட்டைகளும் நீள்வட்ட வடிவமுடையவை. கோழி முட்டை நீள்கோள வடிவமுடையது. இதன் ஒரு முனை சற்று கூர்மையாகவும் மற்றொரு முனை மழுங்கியும் காணப்படும்.

கோழியின் அண்டச் சுரப்பியில் உருவாகும் அண்டம் கோள வடிவம் கொண்டு ஒரு அங்குல விட்டமுடையதாக உள்ளது. இந்த முதிர்ந்த அண்டம், அண்ட நாளத்தில் இறங்கும்போது பல்வேறு சுரப்புகள் மூலம் நாம் பார்க்கும் முட்டையாக மாறுகிறது. முட்டையின் மையத்தில் கருமையம் இருக்க வேண்டி சலாஜா ( Chalaza ) என்ற வெண்திரி அமைப்பும், அல்புமின் என்ற முட்டை வெள்ளையும் அண்டச் சுரப்பியின் முன்பகுதியில் சுரக்கப்பட்டு அண்டத்தோடு இணைக்கின்றன. அதன் மேல், கருப்பையின் கீழ்பகுதியில் கெரடின் இழைகளாலான உள் / வெளி ஓட்டுச்சவ்வுகள் சுரக்கப்படுகின்றன.

முடிவாக அண்டச் சுரப்பியின் இஸ்துமஸ் ' என்ற பகுதியிலுள்ள நிடமென்டல் சுரப்பிகள் ( ஓட்டுச் சுரப்பிகள் ) கால்சியத்தாலான ஓடு சுரக்கப்படுகிறது. இந்த வெளிப்புற ஓட்டில் பல நுண்துளைகள் ( 0.04 முதல் 0.05 மி.மீ குறுக்களவு ) உள்ளன. சுமார் 7500 நுண்துளைகள் உள்ளன. முட்டையின் அகன்ற முனையில் நிறைய துளைகள் இருக்கின்றன. இந்த அமைப்புகளின் கூட்டே நாம் காணும் முட்டை ஆகும். ஆக, முட்டையின் வடிவம் அதிலுள்ள கருவுணவின் அளவு அண்டப் படலங்களின் அமைப்பு, அவ்வுயிரியின் கருநிலை வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது.

கோழி முட்டையின் மஞ்சள் நிறக் கோளம்தான் உண்மையான அண்டம். அதைச் சுற்றியுள்ள ஆல்புமின், உள், வெளி ஓட்டுச் சவ்வுகள், ஓடு ஆகியவை மூன்றாம் நிலை அண்டப் படலங்கள் ஆகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக தொழில்துறை - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்!

தொழில்துறை

சென்னை , இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும் , வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது இது உலக வங்கி மற்றும்பன்னாட்டு நிதிநிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இது ஆசியாவின் டெட்ராய்ட் எனவும் அழைக்கப்படுகிறது . தமிழ்நாட்டில் ஏறக்குறைய 110 தொழிற் பூங்காக்கள் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளோடு செயல்பட்டு வருகின்றன.

மேலும் தமிழக அரசு இரப்பர் பூங்கா , ஆயத்த ஆடைகள் பூங்கா , பூக்கள் பூங்கா , உயிரி தொழில்நுட்பப் பூங்கா , சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் வேளாண் ஏற்றுமதிப் பூங்கா போன்ற பல துறைகளையும் முன்னேற்றியுள்ளது . மாநிலத்தின் பெரிய அளவிலான பொறியியல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மையமிட்டுள்ளன .

சென்னை பன்னாட்டு அளவில் கார் உற்பத்தி ஜாம்பவான்களின் நகரமாக உள்ளது . பேருந்து கட்டுமானத் தொழிலுக்குப் பெயர் பெற்ற கரூர் , தென்னிந்திய பேருந்து கட்டுமானத் தொழிலுக்கான பங்களிப்பில் 80 % மாக உள்ளது . கரூரில் உள்ள தமிழ்நாடு காதித உற்பத்தி நிறுவனம் ஆசியாவிலேயே மிகப் பெரிய சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத காகித நிறுவனங்களுள் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

எஃகு நகரம் என்றழைக்கப்படும் சேலத்தில் பல பெரிய ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்களும் கனிமச் செல்வங்களும் உள்ளன .

சிவகாசியில் அச்சுத் தொழில் , பட்டாசு நிறுவனங்கள் , தீப்பெட்டித் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது , இந்தியாவின்மொத்தத் தீப்பெட்டி உற்பத்தியில் 90 % பங்கும் சிவகாசியில் உற்பத்தியாகிறது .

தமிழகத்தின் நுழைவாயில் தூத்துக்குடி ஆகும் . சென்னைக்கு அடுத்தபடியாக வேதிப்பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 ஜவுளித்துறை

தமிழ்நாடு இந்தியாவின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தி மையமாகும் . தமிழ்நாடு இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படுகிறது . இந்திய அளவில் மொத்த உற்பத்தியில் 41 சதவீத நூல் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன .

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஜவுளித்துறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது , 35 மில்லியன் மக்களுக்கு நோடி வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
4 % பங்களிப்பையும் , மொத்த ஏற்றுமதி வருவாயில் 35 % ஜவுளித் துறையிலிருந்து கிடைக்கிறது .

உற்பத்தித்துறையில் 14 % பங்களிப்பு ஜவுளித்துறை மூலமாக கிடைக்கப் பெறுகிறது , நூல் நூற்பிலிருந்து ஆடைத் தயாரிப்பு ஜவுளிகளுக்கான உற்பத்தித் தொடர்புடைய அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன .

 தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளான கோயம்புத்தூர் , திருப்பூர் , ஈரோடு , திண்டுக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் தமிழ்நாடு , மகாராஷ்டிரா நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் பருத்தி பாலியஸ்டர் கலப்பு நூல் , பட்டு நூல் உற்பத்தி செய்யும் ஆலைகள் பெருமளவில் அமைந்துள்ளன.

 இங்கிருந்து சீனா வங்கதேசம் போன்ற பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது . பின்னலாடைகளின் நகரம் ' என அழைக்கப்படும் திருப்பூர் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பளவில் பின்னலாடைகளை ஏற்றுமதி செய்கிறது . திரைச் சீலைகள் , படுக்கை விரிப்புகள் , சமையலறை விரிப்புகள் , கழிவறை விரிப்புகள் , மேஜை விரிப்புகள் , சுவர் அலங்காரங்கள் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது .

ஈரோடு மாவட்டம் தென்னிந்தியாவின் மொத்த மற்றும் சில்லறை ஆயத்த ஆடைகளுக்கான முக்கிய ஜவுளி சந்தையாக உள்ளது .

தோல்பொருட்கள்

இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30 % - யும் , தோல் பொருட்கள் தயாரிப்பில் 70 சதவீதத்தையும் தமிழகம் கொண்டுள்ளது . நூற்றுக்கணக்கான தோல் பொருட்கள் மற்றும் பதனிடும் தொழிற்சாலைகள் வேலூர் , திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அமைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது .

மின்னணு சாதனங்கள்

மின்னணு சாதனங்கள் உற்பத்தியானது தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உள்ளது . பல பன்னாட்டு நிறுவனங்கள் , தெற்காசியாவின் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையமாக சென்னையைத் தேர்ந்தெடுத்துள்ளன.

வாகன உற்பத்தி

ஆசியாவின் டெட்ராய்ட் ' என்றழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரி பாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது . தமிழ்நாடு , இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் 28 சதவீதமும் , லாரிகளுக்கான உற்பத்தியில் 19 சதவீதமும் , பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18 சதவீதமும் கொண்டுள்ளது .

சிமெண்ட் தொழிற்சாலை

சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்திய அளவில் 3 இடத்தில் உள்ளது (ஆந்திர பிரதேசம் - முதலிடம் ராஜஸ்தான் - இரண்டாமிடம் ) . 2018 - ல் இந்தியாவில் உள்ள 10 மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த ராம்கோ சிமெண்ட் மற்றும் இந்தியா சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன .

மொத்த சிமெண்ட் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் 21 அலகுகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் , 35 அலகுடன் ஆந்திர பிரதேசம் முதலிடத்திலும் உள்ளது .

பட்டாசுப் பொருட்கள்

சிவகாசி நகரம் அச்சுத் தொழில் , பட்டாசுப் பொருட்கள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் தலைமையாகச் செயல்படுகிறது . ஜவஹர்லால் நேரு அவர்களால் குட்டி ஜப்பான் ' என்று சிவகாசி அழைக்கப்பட்டது ,

இந்திய பட்டாசு உற்பத்தியில் 88 % சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது . இந்தியாவின் அச்சுத் துறைத் தீர்வுகளில் 60 % சிவகாசியிலிருந்தே பெறப்படுகிறது . பிறதொழிற்சாலைகள் உலக அளவில் மின்பொருட்கள் தயாரிப்பில் மிகப் பெரிய ஒன்றான BHEL நிறுவனம் திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

 கரூரில் அமைந்துள்ள தமிழக அரசின் தமிழ்நாடு காதிதத் தயாரிப்பு நிறுவனம் உலகின் மிகப் பெரிய காகிதத் தயாரிப்பு நிறுவனமாகும் ,

இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் அரியலூர் , விருதுநகர் , கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது .

சேலத்தைச்சுற்றியுள்ள பகுதிகள் செழிப்பான கனிமவளம் கொண்டுள்ளன . இந்தியாவின் மிகப் பெரிய எஃகு உருக்காலை நிறுவனமான SAIL தனது எஃகு ஆலையை சேலத்தில் நிறுவியுள்ளது . இந்தியாவின் மோட்டார் மற்றும் பம்புகளுக்கான தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை வழங்குவதால் கோயம்புத்தூர் ' காற்றமுத்த விசைக் குழாய் நகரம்
' ( Pump City ) என்றழைக்கப்படுகிறது .

 தங்க ஆபரணங்கள் , மாவு அரைப்பான் இயந்திரம் மற்றும் வாகன உதிரிப்பாகம் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிப்பதால் " கோயம்புத்தூர் மாவு அரைப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

தூத்துக்குடி தமிழ்நாட்டின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுகிறது , மாநிலத்தில் வேதிப்பொருள் உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது . இந்திய உப்பு உற்பத்தியில் 30 சதவீ மும் , மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் 70 ) சதவீதமும் தூத்துக்குடியில் உற்பத்தியாகிறது .

குறு சிறு நடுத்தர நிறுவனங்கள்

MSMED - 2006 சட்டத்தின்படி , குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன . குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை , கட்டமைப்பு மற்றும் தளவாடப் பொருட்கள் மீதான முதலீட்டின் அடிப்படையில் ( நிலம் மற்றும் கட்டிடம் நீங்கலாக ) உற்பத்தி நிறுவனம் , பணிகள் நிறுவனம் என வகைப்படுத்தப்படுகின்றன .

குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் , தமிழ்நாடு 15 . 07 சதவீதத்துடன் தேசியளவில் முதலிடத்தில் உள்ளது . 6 . 89 இலட்சம் பதிவு செய்யப்பட்ட குறு , சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன . இவை 8000 வகையான பொருட்களை 32,008 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்கின்றன . இவை அனைத்து துறைகளைச் சார்ந்த பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

அவற்றுள் முக்கியமானவை பொறியியல் பொருட்கள் , மின் சாதன பொருட்கள் , வேதிப் பொருட்கள் , இரும்பு , காதிதம் , தீப்பெட்டி , நெசவு மற்றும் ஆடைகள் போன்றவையாகும் . ரூபாய்1 , 68 , 331 கோடி முதலீட்டில் , பதிவு செய்யப்பட்ட 15 . 61 இலட்சம் தொழிலமுனைவோருடன் 99 . 7 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது .

 ஆதாரம் - MSME திட்ட குறிப்பு 2017 - 18.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 23 March 2020

மூலக்கூறு ஆய்வில் முதன்மை பெண்மணி

அறிவியல் உங்கள் விருப்பப்பாடமா? இங்கே விடுகதைபோல கொடுக்கப்படும் குறிப்புகள் எந்த விஞ்ஞானியைக் குறிக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

விஞ்ஞானி விடுகதை

* நான் எகிப்தில் பிறந்தவள்.

* இங்கிலாந்து குடியுரிமை பெற்றவள்.

* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆண்களுடன் இணைந்து படிப்பதற்காக போராடி வேதியியல் துறையில் படித்த முதல் பெண் என்ற பெருமை பெற்றேன்.

* பென்சிலின் மற்றும் இன்சுலின் மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்தேன்.

* அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற முதல் இங்கிலாந்து பெண் என்ற பெருமைக்குரியவள் நான்.

நான் யார் கண்டுபிடித்துவிட்டீர்களா?

விடை :

நான்தான் டோரத்தி ஹாட்கின்.

வாழ்க்கை குறிப்புகள்

டோரத்தி எகிப்தின் கெய்ரோவில் 1910-ம் ஆண்டு மே 12-ந் தேதி பிறந்தவர். அவரது பெற்றோரான ஜான் மற்றும் கிரேஸ் ஆகியோர் தொல்லியல் ஆய்வாளர்கள். அவருக்கு 4 வயதாக இருந்தபோது முதல் உலகப்போர் சமயத்தில் அவரது பெற்றோர் இங்கிலாந்தில் குடியேறினார்கள்.

டோரத்தி வேதியியல் மீது ஆர்வம் கொண்டிருந்ததை அவரது சிறிய வயது செயல்கள் காண்பிக்கின்றன. 10 வயதிலேயே அவர் படிகங்களை எரித்து நிகழும் மாற்றங்களை ஆச்சரியமாகப் பார்த்தார். உற்றுக் கவனித்து என்ன நடக்கிறது? என்பதை ஆராய்ந்தார். அவரது செயல்களை ஊக்குவித்து ஆதரவு தெரிவித்தவர் அவரது அன்னை.

அந்தக் காலத்தில் ஆண்களுடன் சேர்ந்து பெண்கள் அறிவியல் படிக்க முடியாத நிலை இருந்தது. டோரத்தி மிகுந்த போராட்டத்துடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் வேதியியல் படிக்கும் வாய்ப்பை பெற்றார். அவர் வேதியியல் பட்டப்படிப்பை படித்து முடித்து, வேதிப்பொருட்களின் கட்டமைப்பை ஆராய்ந்து பார்த்த முதல் பெண்மணியாக டோரத்தி கருதப்படுகிறார்.

எக்ஸ்ரே படிகவியல் முறையில் அணுகட்டமைப்பு, மூலக்கூறு கட்டமைப்பை ஆராய்ந்தார். இதன் அடிப்படையில் கதிர்களின் வேறுபாட்டை பகுப்பாய்வு செய்தார்.

பென்சிலின் கட்டமைப்பை இவர் 1945-ல் கண்டுபிடித்தார். அதுபோல வைட்டமின்-பி12 கட்டமைப்பை 1950-ல் கண்டறிந்தார்.

இதுபோல இன்சுலின் படிக கட்டமைப்பை கண்டுபிடிக்க 35 ஆண்டுகள் உழைத்தார். அதற்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து கொலஸ்டிரால் மற்றும் வைட்டமின்-டி ஆகியவற்றின் மூலக்கூறு கட்டமைப்பையும் கண்டுபிடித்து வெளியிட்டார்.

அவரது ஆய்வுக் கண்டுபிடிப்புகள் 1964-ல் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. வேறு பல்வேறு கவுரவங்களும் பெற்றுள்ளார். பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

இவரது மாணவர்களில் ஒருவராக விளங்கிய மார்க்ரெட் தாட்சர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராக உயர்ந்தார்.

டோரத்தி 1994-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி மரணம் அடைந்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசியச் சின்னம்

நம் தேசியச் சின்னம் அசோகரின் சாரநாத் சிம்மத் தூணிலிருந்து பெறப்பட்டது.

சாரநாத் சிம்மத்தூணில் ஒன்றுக்கொன்று முதுகுப்புறமாக அமைந்த நான்கு சிங்கங்கள் ஒரு பீடத்தில் அமைந்துள்ளன.

சிம்மத் தூணின் பீடத்தில் ஒரு யானை, ஒரு எருது, ஒரு குதிரை ஆகியவை அமைந்துள்ளன.

பீடத்திலுள்ள மிருகங்களுக்கு இடையே 24 ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரங்கள் உள்ளன.

சிம்மத்தூண் பீடம், ஒரு தாமரை மேல் அமைந்துள்ளது.

1950 ஜனவரி 26-ல் நம் தேசியச் சின்னம் அங்கீகரிக்கப்பட்டது.

நமது தேசிய சின்னத்தில் மூன்று சிங்கங்கள் மட்டுமே பார்வைக்குத் தெரிகின்றன.

சிங்க பீடத்தில் எருது வலது பக்கத்திலும், ஓடும் குதிரை இடது பக்கத்திலும் இருக்க நடுவே தர்ம சக்கரம் உள்ளது.

சிங்க பீடத்தின் வலது, இடது நுனிகளில் தர்ம சக்கரங்களின் சிறு பகுதி தென்படுகிறது.

தேசியச் சின்னத்தில் முண்டக உபநிஷதத்தில் இருந்து எடுக்கப்பட்ட ‘சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு உள்ளது.

சாரநாத் சிம்மத்தூணில் இருக்கும் யானை, தாமரை நம் தேசிய சின்னத்தில் இடம் பெறவில்லை.

தேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுது தாள்களில் (லெட்டர் ஹெட்ஸ்) நீலவண்ணத்தில் இடம்பெறும்.

அதிகாரிகள் பயன்படுத்தும் எழுது தாள்களில் தேசியச் சின்னம் சிவப்பு வண்ணத்தில் இடம்பெறும்.

மக்களவை உறுப்பினர்கள் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு நிறத்திலும் தேசியச் சின்னத்தை பயன்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு அரசுகளுடனான கடித தொடர்புக்கு நீல நிறத்தில் தேசியச் சின்னம் அச்சிடப்பட்ட எழுது தாள்களையே பயன்படுத்த வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தூசுகளை உறிஞ்சும் கருவி

வீடுகள் மற்றும் பொது இடங்களை வேகமாக தூய்மை செய்ய ‘வாக்வம் கிளீனர்’ கருவிகள் பயன்படுகின்றன. இவை தூசுகளை உறிஞ்சி அகற்றும். இது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது, எப்படி செயல்படுகிறது என்பது பற்றி கேள்வி பதில் வடிவில் அறிவோமா?

வாக்வம் கிளீனரை யார் கண்டுபிடித்தது?

ஆங்கிலேய என்ஜினீயர் சீசில் பூத் என்பவர் வாக்வம் கிளீனரை கண்டுபிடித்தார்.

இந்த கருவி ஊதிய வயிற்று சாதனம் என அழைக்கப்படுகிறதே ஏன்?

தூசுகளை உறிஞ்சி சேகரிக்கும் இடம் ஊதிய வயிறுபோல பெரிதாக இருப்பதால், இதை அப்படி அழைப்பது உண்டு.

மின்சாரத்தில் இயங்கும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக்கூடிய வாக்வம் கிளீனர் கருவி எங்கு முதன் முதலில் அறிமுகமானது?

அமெரிக்காவில்தான் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய, மின்சாரத்தில் இயங்கும் தூசு உறிஞ்சு கருவி வழக்கத்திற்கு வந்தது. இதை ஜேம்ஸ் முர்லேஸ் ஸ்பாங்லர் என்பவர் கண்டுபிடித்தார்.

எப்போது மின்சார வாக்வம் கிளீனர் கருவிகள் பிரபலமானது?

1920-ல், வில்லியம் ஹூவர் என்பவர் விற்பனைக்காக வாக்வம் கிளீனர்களை தயாரித்து விற்கத் தொடங்கிய பின்னர் அவை பிரபலமடைந்தன.

ஹூவரின் இயந்திரங்களை வீட்டுப் பொருளாக கொண்டு சேர்த்த வரிகள் எவை?

எல்லா அழுக்கு தூசுகளையும் ஹூவரின் இயந்திரம் உறிஞ்சி அகற்றிவிடும் எனும் பொருள்பட அமைந்த ஆங்கில வரிகளே இதனை பெருமைப்படுத்தின. அந்த வரிகள்...

all the dirt, all the grit

hoover gets it, every bit என்பதாகும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடற்பாசி

பூமியில் காடுகளில் உயிர்ச்சூழல் மண்டலம் நிரம்பி இருப்பதாக அறிகிறோம். அதுபோலவே கடலடியில் காணப்படும் கடற்பூண்டு பாசியினங்களிடையே ஏராளமான உயிர்ச்சூழல் காணப்படுகிறது.

சொல்லப்போனால், நிலப்பரப்பைவிட இங்கு உயிர்ச்சூழல் அதிகம் என்றே மதிப்பிடலாம். ‘கேல்ப் பாரஸ்ட்’ எனப்படும் இந்த கடற்பாசி காடுகள் உலகின் எல்லா பகுதிகளிலும் பரவி உள்ளது.

வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகள், ஆப்பிரிக்காவின் தென்முனை, ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவை ஒட்டிய தீவுகள் ஆகிய இடங்களில் கடற்பாசி காடுகள் மிகுதியாக உள்ளன.

வட அமெரிக்காவில் அலாஸ்கா முதல் கலிபோர்னியா வரை பசிபிக் கடற்கரை பகுதியில் கடற்பாசி காடுகள் காணப்படுகின்றன.

கடற்பாசி காடுகளில் பலவகையான சிறிய வகை உயிரினங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு கடற்பாசிகள் சிறந்த வாழ்விடமாகவும், உணவு தயாரிப்பு கூடமாகவும் விளங்குகின்றன.

எதிரிகளிடம் இருந்து சிறிய உயிரினங்கள் மறைந்து வாழ கடற்பாசி காடுகள் சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. புயல்களிடம் இருந்தும்கூட பல சிற்றுயிரினங்கள் கடற்பாசிகளால் காக்கப்படுகின்றன.

பல்வேறு பாலூட்டிகள், பறவைகள் கடற்பாசி காடுகளை சார்ந்து வாழ்கின்றன. கடல்பசு, கடல்சிங்கங்கள், திமிங்கலங்கள், நீர்நாய்கள், கடல் பறவைகள் போன்றவை கடற்பாசி காடுகளை சார்ந்து வாழ்கின்றன.

‘கேல்ப் காடுகள்’ எந்த நேரத்திலும் வளராமல் இருப்பதில்லை. தினமும் 30 செ.மீ. வளரும் தாவரங்களும் உண்டு. சில தாவரங்கள் 45 மீட்டர் உயரம் வரை வளர்கின்றன.

செயற்கையாக கடல் பாசி வளர்ப்பதும் உலகளாவிய தொழில்களில் ஒன்றாக உள்ளது. பெரிய நிறுவனங்கள் பல லட்சம் தொகையை முதலீடாகச் செய்து கடல்பாசி வளர்ப்பு தொழிலை செய்கிறார்கள்.

கடல்பாசிகள் கடலின் அமிலத்தன்மை அதிகரிக்காமல் தடுக்கிறது. இதற்கு அவர்களுக்கு மட்டிமீன்களும் உதவுகிறது. இந்த விவசாயம் தொங்கும் கயிறுகளில் நடக்கிறது. இது சிப்பிகளுக்கும் உதவியாக இருக்கின்றன. ஒரு கேல்ப் பண்ணையில் 40 மெட்ரிக்டன் பாசிகள் மற்றும் ஒரு மில்லியன் மட்டி மீன்கள் ஓராண்டு காலத்தில் உற்பத்தியாகின்றன.

கடற்பாசி காடுகள் கடல்களின் நுரையீரல் எனப்படுகிறது. தாவரங்கள் அடர்ந்த காடுகள் எப்படி பூமியின் நுரையீரல் எனப்படுகிறதோ அதுபோல கடல்பாசிகள் நீரடி தாவரங்களாக உயிர்ச்சூழலை தாங்கி்பிடிக்கிறது. இவையும் கார்பன்-டை-ஆக்சைடை கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காந்திக்கு நோபல் பரிசு?

அமைதிக்கான நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான முதல் நோபல் பரிசு செஞ்சிலுவை சங்கத்தை ஏற்படுத்திய ஹென்றி டூனன்டுக்கு வழங்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை (1937, 1938, 1939, 1947, 1948) ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கும் வாய்ப்பு 1948-ல் பெரிதும் இருந்தும் அந்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி அவர் கொல்லப்பட்டதால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டும் நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. எனவே நோபல் கமிட்டி, ‘வாழ்பவர்களில் யாரும் அந்த ஆண்டு நோபல் பரிசுக்கு தகுதி பெறவில்லை’ என அறிவித்தது. காந்தியடி களுக்கு நோபல் பரிசு வழங்க இயலாமல் போனதற்கு 2009-ம் ஆண்டிலும் நோபல் பரிசு கமிட்டி வருத்தம் தெரிவித்தது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வினைத் தொகை

முக்காலத்துக்கும் பொருந்தி வரும் வினைச்சொல்லே வினைத் தொகை. இதை காலம் கடந்த பெயரெச்சம் என்பர். உழுபடை என்பது உழுதபடை, உழுகின்ற படை, உழும்படை என முக்காலத்துக்கும் பொருந்தும். இந்த வினைத் தொகைச் சொற்களில் வல்லினம் மிகாது என்பது தமிழ் இலக்கண விதிகளில் ஒன்று.

உழுபடை, கொல்புலி, வளர்தமிழ், ஊறுகாய், சுடுசோறு போன்ற சொற் களைச் சொல்லிப் பார்த்தாலே ஊறுக்காய், சுடுச்சோறு என்று வராது என்பதை உணரலாம்.

ஆனால் இந்தப் பொது விதியை உணராமல் நாம் தவறு செய்யும் சில இடங்கள் உண்டு. திருநிறை செல்வன், கணிபொறி என்பதில் பலர், வல்லினம் மிகுந்து எழுதுவது உண்டு.

திருநிறை செல்வன் என்ற சொல் வினைத் தொகை என்பதால் திரு நிறைச் செல்வன் என்று எழுதுவது பிழை. திருநிறை என்ற சொல், ‘ஐ’ ஈறுற்றுப் பெயர்ச் சொல்லாக இருப்பதால் நாம் இந்த தவறைச் செய்கிறோம். இனி திருநிறை செல்வன் என்றே எழுதுவோம்.

கணிப்பொறி என்று எழுதுவது பிழை என்று சொன்னாலும் பலர் அதை பின்பற்றுவதில்லை என்பதால் அதற்கு மாற்றாக கணினி என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று தமிழ் அறிஞர் குழு அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தச் சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி-இச்ட்யாலஜி

1. கீல்வாத முடக்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய் எது?

2. கால்சியம் ஆக்ஸைடு என்பதன் வழக்குப் பெயர் என்ன?

3. இச்ட்யாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பாகும்?

4. விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்மணி யார்?

5. கவுதம புத்தரின் மகன் பெயர் என்ன?

6. டேவிஸ் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

7. பசுவின் பாலில் எந்த பருவகாலத்தில் கொழுப்பு சக்தி அதிகரிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?

8. ரத்தசோகை உருவாக காரணமான வைட்டமின் எது?

9. ‘நல்ல தாய்களைத் தாருங்கள், உங்களுக்கு நல்ல நாட்டைத் தருகிறேன்’ என்றவர் யார்?

10. இன்டர்நெட் அறிமுகமான நாடு எது?

11. காஸ்மிக் வருடம் என்பது எத்தனை ஆண்டுகளை கொண்டது?

12. எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

13. ‘அரவுண்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி டேஸ்' என்ற நாவலை எழுதியவர் யார்?

14. உடலின் மிகப்பெரிய சுரப்பி எது?

15. 25 வயதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யார்?

விடைகள்

1. டெங்கு காய்ச்சல், 2. சுட்ட சுண்ணாம்பு, 3. மீன்கள், 4. ஷாலி ரைடு, 5. ராகுலன், 6. டென்னிஸ், 7. கோடை, 8. வைட்டமின்-டி, 9.நெப்போலியன், 10. அமெரிக்கா, 11. 25 கோடி ஆண்டுகள், 12. 1956, 13. ஜூல்ஸ் வெர்ன், 14. கல்லீரல், 15. வில்லியம் லாரன்ஸ் பிராக்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

6. புவியியல் முக்கிய வினாவிடை!

*கிருஷ்ணா நதியின் துணை ஆறு எது ? விடை : - துங்கபத்திரா

*கங்கை ஆற்றின் நீரானது எந்த கடலை அடைகிறது ?
விடை : - வங்காள விரிகுடா

*குடகில் பிறந்த நதி எது ?
விடை : - காவிரி
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*கோதாவரி ஆற்றின் நீளம் என்ன ? விடை : - 1465 கி . மீ

*நர்மதை எந்த மலைத்தொடரில் தோன்றுகிறது ? விடை : - மைகான்

* சிந்து நதியின் நீரானது எந்த கடலில் கலக்கிறது ? விடை : - அரபிக் கடல்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
* சிந்து எந்த நாட்டில் பெரும்பாலும் பாய்கிறது ? விடை : - பாகிஸ்தான்

*சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள் விடை : - வியாழன்

*கொடுக்கப்பட்டவைகளுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது ?
விடை : - குல்பர்கா - கர்நாடகம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*2011 - ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள் எண்ணிக்கை அடர்த்தி குறைவாக காணப்படும் மாநிலம்?
விடை : - அருணாச்சலப்பிரதேசம்

* இந்தியாவில் இரண்டு மாநிலங்கள் அதிக இரும்புத் தாதுவைப் பெற்றிருக்கின்றன . அவை ,
விடை : - ஜார்கண்ட் , ஒடிசா

*தமிழ்நாட்டின் பழைமையானதும் , மிகப் பெரியதுமான சர்க்கரை ஆலை அமைந்துள்ள இடம் ?
விடை : - நெல்லிக்குப்பம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*கூடங்குளம் அணுமின்சக்தி நிலையம் அமைந்துள்ள மாவட்டம் ?
 விடை : - திருநெல்வேலி

*2011 - ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் மக்கள் தொகையில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது ? விடை : - 7 - ஆவது

*இந்தியாவின் பாதிக்கு மேற்பட்ட மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் விடை : - ஜார்கண்ட்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*சென்னையில் உள்ள ஹீண்டாய் மோட்டார் கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
விடை : - ஸ்ரீபெரும்புதூர்

*கோடைக்கால கதிர்த் திருப்பம் காணப்படும் நாள்?
விடை : - ஜீன் 21

*பொதுத் துறையில் இயங்கும் கொயாலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள மாநிலம்?
விடை : - குஜராத்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*இந்தியாவில் அதிகமாக சந்தன மரங்கள் காணப்படும் மாநிலம்?
விடை : - கர்நாடகா

*இந்தியாவில் எங்கு முதன் முதலில் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது ?
விடை : - டெல்லி

*இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகவும் அதிகமான நெசவுத் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன ?
விடை : - குஜராத்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
மாங்கனீஸ் அதிகமாகக் காணப்படும் மாநிலம்?
விடை : - ஒடிசா

கீழ்வரும் மாநிலங்களில் எதில் குறைவான மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் காணப்படுகிறது ?
விடை : - மிசோரம்

*தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் ( ) அமைந்துள்ள இடம் National Chemical Laboratory விடை : - புனே
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ள நகரம்?
விடை : - புது டெல்லி

*பீஹாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு யாது ?
விடை : - கோசி

*இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேத்ரி என்ற மையம் - - - - - - - - - - - சுரங்கத்திற்கு புகழ்பெற்றது ஆகும் . விடை : - தாமிரம்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
* விஸ்வேஸ்வரய்யா இருப்பு எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் விடை : - பத்திராவதி

*ஜாரியா நிலக்கரி அமைந்துள்ள மாநிலம் வயல்கள்?
விடை : - ஜார்கண்ட்

*கீழ்வருவனவற்றுள் எது வைரத் துறைமுகம் என அழைக்கப்படுகிறது ? ( Diamond Harbour )
விடை : - கொல்கத்தா
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*உலகில் எங்கு அதிகமாக ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது ?
விடை : - மலேசியா

*அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம்
 விடை : - கேரளா

*எங்கு இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன ?
விடை : - பெரம்பூர்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*தபதி நதியின் முகத்துவாரத்தில் காணப்படும் நகரம்
விடை : - சூரத்

* தீபகற்ப ஆறுகள் தோன்றுமிடம்
விடை : - மேற்குத் தொடர்ச்சி மலைகள்

*தமிழ்நாட்டில் நிலப்பரப்பின் அடிப்படையில் காணப்படும் சிறிய மாவட்டம் விடை : - சென்னை
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*சிவாலி குன்றுகளுக்குத் தெற்கே காணப்படும் சமவெளி என்பது விடை : - தராய்

*தென்னிந்தியாவில் அதிகமாக  வெப்பநிலை காணப்படும் மாதம்
விடை : - மே

*இந்தியாவின் மொத்த நிலப்பரப்பின் அளவு?
விடை : - 3 . 28 மில்லியன் சதுர கி . மீ .
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
*வெளிப்புற இமயமலைகளின் மற்றொரு பெயர்?
விடை : - சிவாலிக் மலைத்தொடர்கள்

*விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்?
விடை : - திருவனந்தபுரம்

*பின்வருவனவற்றுள் எது திட்டமிடப்பட்ட குடியிருப்பு ?
 விடை : - சண்டிகர்
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
* கீழ்க்க ண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது ?
விடை : - நாகர்ஜீனசாகர் - கிருஷ்ணா நதி

* இந்தியாவில் முதல் இருப்புப் பாதை எங்கு அமைக்கப்பட்டது?
விடை : - பம்பாய்க்கும் தானாவிற்கும் இடையில்

*இந்தியாவின் தென்கோடி முனை
விடை : - நிக்கோபர் தீவுகளிலுள்ள இந்திரா முனை
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE