Ad Code

டெல்லி சுல்தான்கள் ஆட்சி

டெல்லி சுல்தான்கள் ஆட்சி

முதல் முஸ்லிம் படையெடுப்பு

  • இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லிம் மன்னர்: முகமது பின் காசிம்.
  • முகமது பின் காசிம் கி.பி.712-ல் சிந்து மீது படையெடுத்தார்.

முகமது கஜினி

  • முகமது கஜினி இந்தியாவின் மீது கி.பி.1000-1025 வரை பதினேழு முறை படையெடுத்தார்.
  • முகமது கஜினி கடைசியாகக் கொள்ளையிட்டது, குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில்.
  • முகமது கஜினியோடு இந்தியா வந்த பெர்சிய அறிஞர்: அல்பெரூனி.

முகமது கோரி

  • 1191-ல் இந்தியா மீது படையெடுத்த முகமது கோரியை, ராஜபுத்திர அரசர் பிரிதிவிராஜன் தோற்கடித்தார்.
  • 1192-ல் முகமது கோரி, பிரிதிவிராஜனைத் தோற்கடித்து முஸ்லிம்கள் ஆட்சியை நிறுவினார்.
  • முகமது கோரி, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை, தன் அடிமையான குத்புதீன் ஐபெக்கிடம் தந்தார்.

அடிமை வம்சம் (மாமலுக்குகள்)

  • குத்புதீன் ஐபெக்கின் வம்சம், அடிமை வம்சம் என்று அழைக்கப்படுகிறது.
  • அடிமை வம்சத்தின் முதல் அரசரான குத்புதீன் ஐபெக், டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கினார்.
  • குத்புதீன் ஐபெக், ஏழைகளுக்கு லட்ச லட்சமாக வாரி வழங்கியதால் ‘லக்பக்ஷ்’ என அழைக்கப்பட்டார்.
  • குத்புதீன் ஐபெக், ‘போலோ’ விளையாடும்போது குதிரையிலிருந்து விழுந்து இறந்தார்.
  • குத்புதீன் ஐபெக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்த இல்டுமிஷ், குதுப்மினாரைக் கட்டி முடித்தார்.
  • துருக்கி கலிபாவின் அங்கீகாரம் பெற்ற முதல் டெல்லி சுல்தான்: இல்டுமிஷ்.
  • இல்டுமிஷ் ஆட்சியின்போது மங்கோலியர் செங்கிஸ்கான் இந்தியாவின் மீது படையெடுத்தார்.
  • இல்டுமிஷுக்குப்பின் அவரது மகள் சுல்தானா ரஸியா ஆட்சிக்கு வந்தார்.
  • டெல்லியை ஆண்ட முதல் பெண்: சுல்தானா ரஸியா.
  • சுல்தானா ரஸியாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்: கியாசுதீன் பால்பன்.
  • அடிமை வம்சத்து அரசர்கள் மாமலுக்குகள் என அழைக்கப்பட்டனர்.

கில்ஜி வம்சம்

  • அடிமை வம்சத்துக்குப் பின் கில்ஜி வம்ச ஜலாலுதீன் கில்ஜி ஆட்சிக்கு வந்தார்.
  • ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனான அலாவுதீன் கில்ஜி, தன் மாமனைக் கொன்று ஆட்சிக்கு வந்தார்.
  • அலாவுதீன் கில்ஜி, அங்காடிச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
  • சிரி நகரை நிர்மாணித்தவர்: அலாவுதீன் கில்ஜி.
  • அவரின் அவையில் இருந்த பாரசீகக் கவிஞர்: அமீர் குஸ்ரு.
  • அமீர் குஸ்ரு, ‘இந்தியாவின் கிளி’ என்றழைக்கப்பட்டார்.
  • சிதார் இசைக்கருவி, அமீர் குஸ்ருவால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அமீர் குஸ்ரு, ‘லைலா மஜ்னு’ கதையைப் பாரசீக மொழியில் எழுதினார்.

துக்ளக் வம்சம்

  • கில்ஜி வம்சத்துக்குப் பின் துக்ளக் வம்சம் ஆட்சிக்கு வந்தது.
  • முகமது பின் துக்ளக்குக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்: பெரோஸ் ஷா துக்ளக்.
  • துக்ளக் வம்ச நஸ்ருதீன் முகமது ஆட்சிக்காலத்தில் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.

சையது வம்சம்

  • துக்ளக் வம்சத்துக்குப் பின் தைமூரின் பிரதிநிதியால் தோற்றுவிக்கப்பட்ட சையது வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
  • சையது வம்ச அரசர்கள், நபிகள் நாயகத்தின் நேரடி சந்ததியினர் என்று சொல்லப்படுகிறது.

லோடி வம்சம்

  • சையது வம்சத்துக்குப் பின் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த லோடி வம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
  • லோடி வம்சத்து முதல் அரசரான பகலுல் லோடி, டெல்லியை ஆண்ட முதல் ஆப்கான்.
  • பகலுல் லோடிக்குப் பின் சிக்கந்தர் லோடி, ஆக்ராவை நிர்மாணித்தார்.
  • லோடி வம்சத்துக் கடைசி அரசர்: இப்ராஹிம் லோடி.

Post a Comment

0 Comments

Ad Code