Ad Code

ஆரிய நாகரிகம்

ஆரிய நாகரிகம் / arya civilization
  • ஆரிய நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பின் இந்தியாவில் தோன்றியது.
  • இது ‘வேதகால நாகரிகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • வேதகாலம் இரு வகைப்படும்:
    • முற்பட்ட வேதகாலம் (கி.மு.1600 முதல் கி.மு.1000 வரை)
    • பிற்பட்ட வேதகாலம் (கி.மு.1000 முதல் கி.மு 600 வரை)
  • ஆரிய நாகரிகம் பற்றி அறிய உதவுபவை: வேதங்கள், உபநிடதங்கள்.
  • வேதங்கள் 4 வகை: ரிக், யஜூர், சாம, அதர்வணம்.
    • வேதங்களில் பழைமையானது - ரிக் வேதம்.
    • ரிக் வேதத்தில் 1,028 மந்திரங்கள் உள்ளன.
    • யஜூர் வேதம் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது.
    • இந்திய இசைக்கலைக்கான தொடக்கம் சாம வேதத்தில் காணப்படுகிறது.
    • அதர்வண வேதம் - பில்லி, சூன்யம் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • உபநிடதங்கள் மொத்தம் 108.
  • ரிக் வேதகாலத்தில் ஆரியர்கள் சப்தசிந்து பகுதியில் குடியேறினார்கள்.
  • ஆரியர்கள் தங்கள் தலைவரை ‘ராஜன்’ என்று அழைத்தனர்.
  • ராஜனுக்கு அறிவுரை கூற ‘சபா’ (மூத்தோர் சபை) மற்றும் ‘சமிதி’ (பொது சபை) இருந்தன.
  • முற்பட்ட வேதகாலத்தில் சமூகத்தில் வர்ணாஸ்ரமம் இருந்திருக்கவில்லை.
  • ரிக் வேதகாலத்தில் சமூகத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்தது.
  • பிற்பட்ட வேதகாலத்தில் பெண்களின் நிலை பின்தங்கியது.
  • பிற்பட்ட வேதகாலத்தில் வர்ணாஸ்ரமம் தோன்றியது.
  • ஆரியர்கள் இயற்கைச் சக்திகளை கடவுளாக வழிபட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code