ஆரிய நாகரிகம்

- ஆரிய நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பின் இந்தியாவில் தோன்றியது.
- இது ‘வேதகால நாகரிகம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- வேதகாலம் இரு வகைப்படும்:
- முற்பட்ட வேதகாலம் (கி.மு.1600 முதல் கி.மு.1000 வரை)
- பிற்பட்ட வேதகாலம் (கி.மு.1000 முதல் கி.மு 600 வரை)
- ஆரிய நாகரிகம் பற்றி அறிய உதவுபவை: வேதங்கள், உபநிடதங்கள்.
- வேதங்கள் 4 வகை: ரிக், யஜூர், சாம, அதர்வணம்.
- வேதங்களில் பழைமையானது - ரிக் வேதம்.
- ரிக் வேதத்தில் 1,028 மந்திரங்கள் உள்ளன.
- யஜூர் வேதம் சடங்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது.
- இந்திய இசைக்கலைக்கான தொடக்கம் சாம வேதத்தில் காணப்படுகிறது.
- அதர்வண வேதம் - பில்லி, சூன்யம் பற்றிக் குறிப்பிடுகிறது.
- உபநிடதங்கள் மொத்தம் 108.
- ரிக் வேதகாலத்தில் ஆரியர்கள் சப்தசிந்து பகுதியில் குடியேறினார்கள்.
- ஆரியர்கள் தங்கள் தலைவரை ‘ராஜன்’ என்று அழைத்தனர்.
- ராஜனுக்கு அறிவுரை கூற ‘சபா’ (மூத்தோர் சபை) மற்றும் ‘சமிதி’ (பொது சபை) இருந்தன.
- முற்பட்ட வேதகாலத்தில் சமூகத்தில் வர்ணாஸ்ரமம் இருந்திருக்கவில்லை.
- ரிக் வேதகாலத்தில் சமூகத்தில் பெண்கள் நிலை உயர்ந்திருந்தது.
- பிற்பட்ட வேதகாலத்தில் பெண்களின் நிலை பின்தங்கியது.
- பிற்பட்ட வேதகாலத்தில் வர்ணாஸ்ரமம் தோன்றியது.
- ஆரியர்கள் இயற்கைச் சக்திகளை கடவுளாக வழிபட்டனர்.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||