தென்னிந்திய மன்னர்கள்

- பண்டை தமிழகத்தை ஆண்ட அரசர்கள்: சேர, சோழ, பாண்டியர்கள்.
- சோழர்கள்
- தலைநகரம்: உறையூர்
- துறைமுகம்: காவிரிப்பூம்பட்டினம்
- சின்னம்: புலி
- அடையாளப் பூ: அத்தி
- சேரர்கள்
- தலைநகரம்: வஞ்சி
- துறைமுகங்கள்: தொண்டி, முசிறி
- சின்னம்: வில், அம்பு
- அடையாளப் பூ: பனம்பூ
- சேர அரசர்களில் தலைசிறந்தவன்: சேரன் செங்குட்டுவன்
- ‘கேரள புத்திரர்கள்’ எனப்படுவர்.
- பாண்டியர்கள்
- தலைநகரம்: மதுரை
- துறைமுகம்: கொற்கை
- சின்னம்: மீன்
- அடையாளப் பூ: வேம்பு
- பாண்டிய அரசர்களில் தலைசிறந்தவன்: நெடுஞ்செழியன்
- சாதவாகனர்கள்
- பழங்கால ஆந்திராவை ஆண்ட அரசர்கள்.
- ‘ஆந்திர புத்திரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
- தலைநகரம்: பிரதிஸ்தான்.
- சாளுக்கியர்கள்
- நாணயங்களில் பன்றிச் சின்னம் இடம்பெற்றிருந்ததால் அது ‘வராகன்’ எனப்பட்டது.
- சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி, புள்ளளூர் போரில் மகேந்திரவர்ம பல்லவரைத் தோற்கடித்தார்.
- பல்லவர்கள்
- நரசிம்மவர்ம பல்லவருக்கு ‘வாதாபி கொண்டான்’ என்ற பெயர் வந்தது, சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தீக்கிரையாக்கியதால்.
- நரசிம்மவர்மர், மற்போரில் சிறந்து விளங்கியதால் ‘மாமல்லன்’ என்றழைக்கப்படுகிறார்.
- தலைநகரம்: காஞ்சிபுரம்
- சின்னம்: நந்தி
- மகேந்திரவர்மர்
- கோயில் கட்டிய இடங்கள்: மாமண்டூர், பல்லவபுரம்.
- சைவ சமயத்துக்கு மாற்றியவர்: அப்பர்.
- திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில் கட்டியவர்.
- சிறப்புப் பெயர்கள்: சித்திரகாரப்புலி, விசித்திர சித்தர்.
- எழுதிய நூல்: மத்த விலாச பிரகடனம்.
- பல்லவர்கால ஓவியங்கள் காணப்படும் ‘சித்தன்னவாசல்’ புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
- மாமல்லபுரத்தை நிர்மாணித்தவர்: நரசிம்மவர்ம பல்லவர்.
- பல்லவர்கள் காலத்தில் தண்டி என்ற புலவர் ‘காவ்யதரிசனம்’ என்ற நூலை எழுதினார்.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||