Tuesday 26 February 2019

தாவரவியல் முக்கிய வினாக்கள்


  • செயற்கைமுறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர்-ஸ்வீடன் தாவரவியலார் 
  • எந்த வகைப்பாடு இனப்பெருக்க வகைப்பாடு என அழைக்கப்படுகிறது? செயற்கைமுறை வகைப்பாடு 
  • இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர்-காஸ்பர்டு பாஹின் 
  • பெந்தம் மற்றும் ஹீக்கர் வெயிட்ட ஜெனிரா பிளாண்டாரம்-மூன்று தொகுதிகளையுடையது. 
  • பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்;பாட்டில் ‘தற்கால’ துறைகள் இவ்வாறு அழைக்கப்பட்டன-கோஹார்ட்டுகள் 
  • இணையாத தனித்த அல்லிகளையுடைய தாவரங்கள் கீழ்கண்ட எவற்றுள் இடம்பெறும்-பாலிபெட்டாலே 
  • இன்ஃபெரே வரிசையிலுள்ள துறைகள் மற்றும் குடும்பஸ்களின் எண்ணிக்கை முறையே-3 மற்றும் 9 
  • பெந்தம் மற்றும் ஹீக்கர் தங்கள் வகைப்பாட்டில் எத்தனை குடும்பங்களை விவரித்துள்ளார்-202 
  • பெந்தம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டில் தற்கால ‘குடம்பங்கள்’ எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன-துறைகள் 
  • தலாமிஃபுளோரேவில் எத்தனை துறைகள், குடும்பங்கள் உள்ளன? 6 துறைகள், 34 குடும்பங்கள் 
  • பின்வரும் எந்த வரிசையில் சூலக கீழ்மலர்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன? இன்ஃபரே 
  • யூனிசெக்ஸ்வேல்ஸ் என்ற வரிசையில் உள்ள குடும்பம்-யூஃபோர்பியேசி 
  • தெஸ்பிஸியா பாப்புல்னியா இடம் பெற்றுள்ள குடும்பம்-மால்வேசி 
  • மால்வேசி இடம் பெற்றுள்ள குடும்பம்-தலாமிஃபுளோரே 
  • ஓரறைடைய மகரந்தப்பைக் காணப்படும் குடும்பம்-மால்வேசி 
  • ஏபல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி சூலக அறை வெடிகனி 
  • வெண்டை தாவரத்தின் இருசொற்பெயர்-ஏபல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ் 
  • சொலானேசி இடம்பெற்றுள்ள துறை-பாலிமோனியேல்ஸ் 
  • நடுநரம்பு மற்றும் பக்க நரம்புகளின் மீது மஞ்சள் நிற முட்கள் காணப்படும் தாவரம்-சொலானம் சாந்தோகார்பம் 
  • சூலிலைகள் நேர்கோட்டில் அமையாமல் சற்று சாய்வாக அமைந்துள்ள மலர்கள் உடைய குடும்பம்-சொலானேசி 
  • யூஃபோர்பியேஸி குடும்பத்தில் இடம்பெற்றுள்ள பேரினங்கள் 300 
  • ரிசினஸ் கம்யூனிஸ் ஒரு-புதர்செடி 
  • கிளாடோடுக்கு ஒரு எடுத்துக்காட்டு-யூஃபோர்பியா திருக்கள்ளி 
  • ஹீவியா பிரேசிலியன்ஸிஸ் தாவரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளையுடைய கூட்டிலை 
  • ‘பறவைகளின் சொர்க மலர்’ என்றழைக்கப்படுவது-ஸ்டெரிலிட்சியா ரெஜினே 
  • மியூஸா தாவரத்தின் இலையமைவு: சுழல் இலையமைவு 
  • ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் தாவரத்தின் மஞ்சரி கூட்டுசைம் 
  • ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் மலரில் காணப்படும் வளமான மகரந்தத்தாட்களின் எண்ணிக்கை. ஆறு 
  • ஆக்குத்திசுவானது நிலைத்தத் திசுவாக மாற்றம் அடைவது-எனப்படும். வேறுபாடடைதல் 
  • வாழை, கல்வாழை ஆகிய தாவரங்களின் இலைக்காம்பில் நட்சத்திர வடிவ பாரன்கைமா செல்கள் காணப்படுகின்றன. ஆவை-பாரன்கைமா எனப்படுகின்றன. ஸ்டெல்லேட் பாரன்கைமா 
  • தாவரத்தின் அனைத்து உறுப்புகளிலும் பொதுவாக காணப்படும் திசு: பாரன்கைமா 
  • எந்த தாவரத்தின் ஹைப்போடெர்மிஸ் அடுக்கு கோலன்கைமாவால் ஆனது? ஹீலியாந்தஸ் 
  • வேர்தூவிகளை உற்பத்தி செய்பவை ட்ரைகோபிளாஸ்டுகள் 
  • ஆஸ்டியோஸ்கிளீரைடு காணப்படும் பகுதி பட்டாணியின் விதையுறை 
  • இருபக்க ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றைகள் காணப்படும் தாவரக்குடும்பம் குக்கர்பிட்டேஸி 
  • காஸ்பரியன் பட்டைகள்-ன் அகத்தோலில் காணப்படுகின்றன-இருவித்திலைத் தாவர வேர் 
  • வழிச்செயல்கள்--ன் அகத்தோலில் காணப்படுகின்றன-இருவித்திலைத் தாவர வேர் 
  • பலமுனை சைலம்-நாணப்படுகிறது ஒருவித்திலைத் தாவர வேர் 
  • புறணியின் கடைசியடுக்கு-ஆகும் அகத்தோல் 
  • புரோட்டோசைலம் தண்டின் மையத்தை நோக்கி அமைந்துள்ள வாஸ்குலார் கற்றை-எனப்படும்-உள்நோக்கு சைலம் 
  • சைலமும்,ஃபுளோயமும் ஒரே ஆரத்தில் அமைந்திருக்கும் வாஸ்குலார் கற்றைகள்-எனப்படுகின்றன. கன்ஜாயிண்ட் 
  • மண்டை ஓடு வடிவ வாஸ்குலார் கற்றைகள் இதில் காணப்படுகின்றன ஒரு வித்திலை தாவரதண்டு 
  • புரோட்டோசைல இடைவெளிகொண்டுள்ள வாஸ்குலார் கற்றை-காணப்படுகிறது. ஒருவித்திலை தாவரதண்டு 
  • இருபக்கம் ஒத்த அமைப்புடைய இலை-ல் காணப்படுகிறது: புல் 
  • இலையில் காணப்படுகின்ற வாஸ்குலார் கற்றைகள் ஒருங்கமைந்தவை,மூடியவை 
  • வாஸ்குலார் கேம்பியம் ஒரு: பக்க ஆக்குத்திசு 
  • வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கும் ஃபுளோயத்திற்கும் இடையில் காணப்படும் கேம்பியம்--எனப்படும் கற்றைகேம்பியம் 
  • வாஸ்குலார் கேம்பிய வளையத்தின் செல்கள் வெளிப்புறம் தோற்றுவிக்கும் செல்கள்-ஆக வேறுபாடு அடைகின்றன. இரண்டாம் நிலை ஃபுளோயம்
  • குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் வால்டேயர் 
  • தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது உருவாக்கப்படும் பாதுகாப்பு அடுக்கின்பெயர்-எனப்படும் பெரிடெர்ம் 
  • ஜீன்கள் குரோமோசோம்களில் உள்ளன என்பதை உறுதி செய்தவர் .பிரிட்ஜஸ் 
  • இணைப்பு சோதனைக்கலப்பு விகிதம்: 7:1:1:7 
  • குரோமோசோம்களின் மீள்சேர்க்கை குன்றல் செல்பிரிதலின்போது புரோஃபேஸ் I ல் எந்த நிலையில் நிகழ்கிறது? பாக்கிடின் 
  • எந்த தாவரத்தில் ஹியூகோட்ரிவிஸ் திடீர்மாற்றத்தை கண்டறிந்தார். ஈனோதிரா வாமார்க்கியானா 
  • உயிர் வேதி திடீர்மாற்றத்தின் காரணமாக இது-சில அமினோ அமிலங்களை உருவாக்க முடிவதில்லை நியூரோஸ்போரா 
  • நல்லிசோமி இவ்வாறு குறிப்பிடப்படுகிறது: 2n-2 
  • DNA வின் இரட்டை சுருள் மாதிரியை விளக்கியவர் .வாட்சன் மற்றும் கிரிக் 
  • DNA மூலக்கூறின் விட்டம் 20 A 
  • கீழ்க்கண்ட எந்த உயிரினத்தில் சயெ காண்படுவதில்லை DNA வைரஸ் 
  • செல்லில் உள்ள RNA வில் m DNA வின் அளவு 3-5 சதவீதம்
  • பாக்டீரிய செல்லில்-க்கு அதிகமான கடத்து RNA க்கள் உள்ளன.
  • ரெஸ்ட்ரிக்ஷன் நொதி இவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது: பாக்டீரியங்கள் மட்டும்
  • ஒவ்வொரு ரெஸ்ட்ரிக்ஷன் நொதியும் DNA மூலக்கூறை இந்த இடத்தில் துண்டிக்கிறது: நியூக்ளியோடைடு வரிசையில் 
  • அயல்ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் முறை: மின்துறையாக்கம் 65. எறக்குறைய இன்றைய நிலையில் காணப்படும் அயல்ஜீனைப் பெற்ற தாவரங்களின் எண்ணிக்கை 50 
  • பூச்சிகளைக் கொல்லும் நச்சுத்தன்மையுடைய டெல்டா எண்டோடாக்சின் புரதத்தினை உற்பத்தி செய்வது பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் 
  • உயிருள்ள தாவர செல்லிலிருந்து முழுத்தாவரத்தை உருவாக்கும் திறன்-எனப்படும். முழுத்திறன் பெற்றுள்ளமை 
  • சைட்டோகைனின் பணி இதை அதிகரிக்கிறது-செல்பகுப்பு 
  • திசு வளர்ப்பு முறைமூலம் பெறப்படும் முக்கியப் பொருள்: செயற்கை விதைகள் 
  • இரண்டு புரோட்டோ பிளாஸ்டுகளுக்கிடையே இணைவை உண்டாக்கும் இணைவு காரணி பாலி எத்திலின் கிளைக்கால் 
  • இவற்றின் மூலம் உடல கலப்பினங்கள் உருவாக்கப்படுகின்றன -புரோட்டோபிளாச இணைவு 
  • பின்வரும் ஒன்று தனி செல்புரத உயிரினமாகும்-ஸ்பைருலினா 
  • .மனிதன் உட்கொள்ளதக்க வைட்டமின் செறிந்த மாத்திரைகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது-ஸ்பைருலினா 
  • ‘என்சைம்’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்-குன் 
  • நொதியின் பூட்டுசாவிக் கோட்பாடு இவரால் கூறப்பட்டது-ஃபிஷ்ஷர் 
  • டிரான்ஸ்பரேஸ்களுக்கு எடுத்துக்காட்டு-டிரான்ஸ் அமினேஸ் 
  • ஒளிச்சேர்க்கை இங்கு நடைபெறுகிறது-பசுங்கணிகங்கள் 
  • சுழற்சி எலக்ட்ரான் கடத்தலின்போது உற்பத்தியாலது-ATP மட்டும் 
  • .பின்வருனவற்றுள் எது 5C சேர்மம்?- ரைபோஸ் 
  • பின்வருவனவற்றுள் எது C4 தாவரம்? கரும்பு 
  • பச்சையத்தின் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கிய பொருள்-Mg 
  • சூரிய ஆற்றலை கவர்ந்து இழுக்கும் அதிகதிறன் கொண்ட நிறமி: .பச்சையம் 
  • பின்வரும் எந்த பாக்டீரியம் அம்மோனியாவை நைட்ரைட்டாக ஆக்ஸிஜனேற்றம் செய்கிறது நைட்ரசோ மோனாஸ் 
  • பின்வருவனவற்றுள் எதுமுழு ஒட்டுண்ணித்தாவரம்? கஸ்குட்டா 
  • ஒளிச்சேர்க்கை மிக்திறம்படத் தூண்டும் ஒளி அலை-400nm -700 nm 
  • இருட்சுவாசம் இதில் நடைபெறுகிறது: .பெராக்ஸிசோம் 
  • ஒளிச்சேர்க்கையின்போது வெறிப்படும் வாயு; ஆக்ஸிஜன் 
  • இருள்வினை இவ்வாறு அழைக்கப்படுகிறது: கால்வின் சுழற்சி 
  • C4 பாதை இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஹேட்ச்-ஸ்லாக்பாதை 
  • ஒளிச்சுவாசம் இவ்வாறு அழைக்கப்படுகிறது: C2 சுழற்சி 
  • பூச்சியுண்ணும் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு: ட்ரஸீரா 
  • பின்வருவனவற்றில் எது முதன்மை நிறமியாகும்? பச்சையம்-‘a’ 
  • ஒளிச்சேர்க்கையின் இருள்விணைகளைக் கண்டறிந்தவர் மெல்வின் கால்வின் 
  • பின்வருவணவற்றுள் 5 கார்பன் கொண்ட சேர்மம் எது? RuBp 
  • C3 தாவரங்களில் ஒளிவினைகள் மற்றும் இருள்வினைகள் நடைபெறும் இடம்: இலை இடைத்திசு செல்கள் 
  • C3 வழித்தடத்தில் CO2 ஜ ஏற்கும் மூலக்கூறு எது? RuBp 
  • பின்வருவனவற்றுள் எது C4 தாவரமல்ல? கோதுமை 
  • வாண்டா ஒரு-தாவரம்: .தொற்றுத்தாவரம் 
  • ஒளிவினையில் உண்டாகும் ஒடுக்கஆற்றல் NADPH2 
  • பின்வருவனவற்றுள் எது துணைநிறமியல்ல? பச்சையம் 
  • ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படுமிடம் . தையகாய்டு 
  • கீழ்க்கண்டவற்றுள் பொதுவான சுவாசதளப்பொருள் எது? .கார்போஹைட்டே;டுகள் 
  • ATP யின் மிகைஆற்றல் பிணைப்புகளின் எண்ணிக்கை இரண்டு 
  • சுவாசத்தின் முதல் நிலை .கிளைகாலிசிஸ் 
  • குளுக்கோசை பாஸ்பரிகரணமடையச் செய்கு குளுக்கோஸ் 6-பாஸ்பேட்டாக மாற்ற மடையச செய்யும் நொதி . ஹெக்சோகைனேஸ் 
  • சிஸ்-அகோனிடிக் அமிலத்துடன் நீர் சேர்க்கப்பட்டு ஜசோ-சிட்ரிக் அமிலமாகும் வினையில் ஈடுபடுவது அகோனிடேஸ் 
  • முழுகைய ஆக்ஸிஜனேற்றமடையும் குளுக்கோசிலிருந்து கிடைப்பது: 38 ATP 
  • பைருவிக் அமிலத்தின் ஆக்ஸிஜனேற்ற கார்பன் நீக்கவினையை ஊக்குவிக்கும் நொதி பைருவிக் டீஹைடிரஜனேஸ் 
  • கீட்டோ குளுடாரிக் அமிலம் ஒரு-கார்பன் சேர்மம் ஆகும் ஜந்து 
  • குளுக்கோஸின் சுவாச ஈவு ஓன்று 
  • ஒரு மூலக்கூறு FADD2 முழுமையான ஆக்ஸிஜனேற்றத்தின் போது வெளிப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை 2 ATP 
  • எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் ATP உண்டாவது-எனப்படும் ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் 
  • பின்வருவனவற்றுள் EMP வழித்தடம் எனப்படுவது . கிளைக்காலிசிஸ் 114.ஒரு மூலக்கூறு NADH2 முழுமையான ஆக்ஸிஜனேற்றத்தின்போது வெறிப்படும் யுவுP மூலக்கூறுகளின் எண்ணிக்கை மூன்று 
  • ஓரு மூலக்கூறு குளுக்கோஸ் முழுகையான ஆக்சிஜனேற்றத்தின்போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு 2900 KJ 
  • பின்வருவனவற்றுள் 5C சேர்மம் சைலுலோஸ் பாஸ்பேட் 
  • தாவரஹார்மோன்களில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது ஆக்ஸின் 
  • செயற்கை ஆக்ஸினுக்கு ஒர் எடுத்துக்காட்டு-NAA
  • முனை ஆதிக்கம் என்பது எதனால் ஏற்படுகிறது ஆக்சின் 
  • நெற்பயிரில் பக்கானே நோயை ஏற்படுத்துவது ஜிப்ரலிக் அமிலம் 
  • சிக்மாய்டு வளைவு வரைபடத்தில் விரைவான வளர்ச்சிநிலை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது விரைவு நிலை 
  • ஆக்ஸின் இதைத்தடுக்கிறது .உதிர்தல் 
  • நெற்பயிரில்’கோமாளித்தன நோய்’ உருவாக்குவது ஜிப்ரலின் 
  • இலைத்துளை மூடுவதைத் தூண்டுவது அப்சிசிக் அமிலம் 
  • நிலத்தில் உள்ள களைகளை நீக்கப்பயன்படுவது 2-4-D 
  • உதிர்தல் எதனால் தடைசெய்யப்படுகிறது ஆக்ஸின் வாயுநிலையிலுள்ள ஹார்மோன் எது? .எத்திலின் 
  • உயர்தாவரங்களில் காணப்படும் இயற்கை ஹார்மோன் எது? IAA 
  • ஒளி மற்றும் இருட்கால அளவிற்கேற்ப அமையும் தாவரத்தின் பதில் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஓளிக்காலத்துவம்
  • மலர்தலில் ஒளிக்காலத்துவ பதில் விளைவு முதல்முதலில் கண்டறியப்பட்ட தாவரம் புகையிலை 
  • குறும்பகல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு புகையிலை 
  • நெல்லில் வெப்பு நோயை உருவாக்கும் நோயுயிரி எது? பைரிகுலேரியா ஒரைசே 
  • பைரிகுலேரியா ஒரைசேவின் இரண்டாம் நிலை ஓம்புயிர்த்தாவரம் டீஜிடேரியா மார்ஜினேட்டா 
  • நிலக்கடலையில் டிக்கா நோயை உருவாக்கும் நோயுரி எது? சேர்கோஸ்போரா பெர்சனேட்டா 
  • அகாலிபைன்-லிருந்து எடுக்கப்படுகிறது . அகாலிபா இண்டிகா 
  • வில்வம் தாவரத்தின் இருசொற்பெயர் ஏகில் மார்மிலஸ் 

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாடு

  • செயற்கை முறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர் - ஸ்வீடன் தாவரவியலார்
  • எந்த வகைப்பாடு இனப்பெருக்க வகைப்பாடு என அழைக்கப்படுகிறது - செயற்கை முறை வகைப்பாடு
  • இருசொற் பெயரிடுமுறையை அறிமுகப்படுத்தியவர் - காஸ்பார்டு பாஹின்
  • பெந்தம், ஹீக்கர், வெளியிட்ட ஜெனிரா பிளாண்டாரம் - மூன்று தொகுதிகளை உடையது.
  • பெந்தம், ஹீக்கர், வகைப்பாட்டியல், தற்காலத் துறைகள் இவ்வாறு அழைக்கப்பட்டன - கோஹார்ட்டுக்கள்
  • இணையாத தனித்த அல்லிகளை உடைய தாவரங்கள் கீழ்கண்ட எவற்றுள் இடம்பெறும் - பாலிபெட்டாலே
  • இன்ஃபெரே வரிசையில் உள்ள துறைகள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை முறையே - 3 மற்றும் 9
  • பெந்தம், ஹீக்கர், வகைப்பாட்டியல் எத்தனை குடும்பங்களை விவரித்துள்ளனர்? - 202
  • பெந்தம், ஹீக்கர், வகைப்பாட்டியல், தற்காலத் குடும்பங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டிருந்தன? - துறைகள்
  • தலாமிபுளோரேவில் எத்தனை துறைகள், குடும்பங்கள் உள்ளன? - 6 துறைகள், 34 குடும்பங்கள்.
  • பின்வரும் எந்த வரிசையில் சூலகக் கீழ்மலர்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன? - இன்பெரே
  • யூனிசெக்சுவேல்ஸ் என்ற வரிசையில் உள்ள குடும்பம் - யூபோர்பியேசி
  • தெஸ்பீசியா பாபுல்னியா இடம் பெற்றுள்ள குடும்பம் - மால்வேசி
  • மால்வேசி இடம் பெற்றுள்ள வரிசை - தலாமிபுளோரா
  • ஓரறை உடைய மகரந்தப்பை காணப்படும் குடும்பம் - மால்வேசி
  • ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் தாவரத்தின் கனி  - சூலக அறை வெடிகனி
  • வெண்டை தாவரத்தின் இருசொற் பெயர்  - ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலெண்டஸ்
  • சொலனேசி இடம் பெற்றுள்ள துறை - பாலிமோனியேல்ஸ்
  • நடுநரம்பு மற்றும் பக்க நரம்புகளின் மீது மஞ்சள் நிறமுட்கள் காணப்படும் தாவரம் - சொலானம் சாந்தோகார்பம்
  • சூலிலைகள் நேர்கோட்டில் அமையாமல் சற்று சாய்வாக அமைந்துள்ள மலர்களை உடைய குடும்பம் - சொலானேசி
  • உலகளவில் யூஃபோர்யேசி குடும்பத்தில் இடம் பெற்றுள்ள பேரினங்கள் - 300
  • ரிசினஸ் கம்யூனிஸ் ஒரு  - குற்று மரம்.
  • கிளாடோடிற்கு ஒரு எடுத்துக்காட்டு - யூஃபோர்பியா திருக்கள்ளி
  • ஹீவியா பிரேசிலியன்சிஸ் தாவரத்தின் இலைகள் - மூன்று சிற்றிலைகளை உடைய கூட்டிலை
  • பறவைகளின் சொர்க்கமலர் என்றழைக்கப்படுவது  - ஸ்டெரிலிட்சியா ரெஜினே
  • மியூசா தாவரத்தின் இலையமைப்பு. - சூழல் இலையமைப்பு
  • ராவனெலா மடகாஸ்காரியன்சிஸ் தாவரத்தின் மஞ்சரி  - கூட்டுசைம்
  • ராவனெலா மடகாஸ்காரியன்சிஸ் மலரில் காணப்படும் வளமான மகரந்ததாள்களின் எண்ணிக்கை. - ஆறு
  • தாவர வகைப்பாட்டியல் - முறைப்பாட்டுத் தாவரவியல்
  • லின்னேயஸ் எழுதிய நூல் - ஸ்பிசிஸ் பிளாண்டாரம்
  • எங்ளர், மற்றும் பிராண்டில் எழுதிய நூல் - டை நேச்சர்ரலிக்கன், ஃ பிளான்ஸன், ஃ பாமிலியன்
  • மேம்பாடைந்த இருவித்திலை, ஒருவித்திலை குடும்பங்கள் - ஆஸ்ட்ரேசி, ஆர்க்கிடேசி
  •  “உயிருள்ள தாவரத் தொகையின் முறைபாட்டியல்” எனப்படுவது – பரிசோதனை வகைப்பாட்டியல்
  • கேரியோஃபில்லத்தின் பல சொல் பெயர் - கேரியோஃபில்லம் சாக்சாடிலிஸ் ஃபோலிஸ் கிராமினிஸ் அம்பேலட்டஸ் கோரிம்பிஸ்
  • ஐந்தாவது அகில உலக தாவரவியல் கூட்டம் - கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து.
  • அகில உலக தாவரவியல் பெயர் சூட்டுச் சட்டம் பின்பற்றப்பட்ட ஆண்டு – 1978 முதல்.
  • இருசொற் பெயரிடு முறையினை சரியான விதத்தில் பயன்படுத்தியவர் -கரோலஸ் லின்னேயஸ்
  • பேரின, சிற்றினப் பெயர் இரண்டும் ஒன்றாக இருத்தல் - டாட்டோனிம்
  • டாட்டோனிம் - எ.கா.-சாசாஃப்ரஸ் சாசாஃப்ரஸ்.
  • ஹெர்பெரிய தயாரிப்பில் புஞ்சைக்கொல்லி – 0.1% மெர்குரிக் குளோரைடு கரைசல்.
  • ஹெர்பேரிய தயாரிப்பில் பூச்சிக்கொல்லி – நாப்தலீன் , கார்பன் - டை- சல்பைடு
  • ரெப்பிநெட் ஹெர்பேரியம், திருச்சியில் உள்ள உலர் தாவரங்கள் - 12,000 திற்கு மேல்.
  • பெந்தம், ஹீக்கர், விளக்கியுள்ள சிற்றினங்கள் - 97,205 (202 குடும்பங்கள்)
  • போடோஸ்டெமேசியின் வரிசை – மல்டி ஓவுலேட்டே அக்வாட்டிக்கே
  • வரிசை கர்வெம்பிரியேவின் துணைவகுப்பு – மானோக்ளமைடியே
  • நட்சத்திர வடிவ தூவிகள் காணப்படும் குடும்பம் - மால்வேசி
  • பவோனியா ஓடோரேட்டாவின் மஞ்சரி – நுனி அல்லது இலைக்கோண சைம்.
  • புறப்புல்லி வட்டம் இதில் இல்லை. – அபுட்டிலான் இண்டிகம்
  • ஆல்த்தியாவில் உள்ள சூலிலைகள் - பத்து
  • ஏபல்மாஸ்கசின் கனி – அறைவெடி கனி
  • விதை மேற்புற நார்கள் உள்ள தாவரம் - காசிப்பியம் பார்படென்ஸ்
  • டெக்கான் பருத்தியின் இரு சொற்பெயர் - ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ்
  • பூவரசின் தாவரவியல் பெயர் - தெஸ்பீசியா பாப்புல்னியா
  • ஹோலிகாக்கின் இரு சொற்பெயர் - ஆல்தியா ரோசியா
  • மால்வேசி குடும்ப அல்லியின் இதழமைவு – திருகு இதழமைவு
  • சொலனேசியின் துறை – பாலிமோனியேல்ஸ்
  • சொலனேசி குடும்ப மரம் - சொலானம் ஜெய்ஜான்ஷியம்
  • பூவடிச் செதிலற்ற மலர் - சொலானம் நைக்ரம்
  • நிலையான புல்லி – சொலனாம் மெலாஞ்சினா
  • இருவளமான மகரந்ததூள், 3 ஸ்டாமினோடு – ஷைசான்தஸ் பின்னேட்டஸ்,
  • பொய்யான குறுக்குச்சுவரை உடைய சூலிலை – டாட்டுரா மெட்டல்.
  • பெட்டுனியாவின் கனி – காப்சியூல் (வெடிகனி)
  • மழுங்கிய சூல்முடி – டாட்டூரா மெட்டல்
  • தசை வலியினை போக்கும் மருந்து – அட்ரோஃபின் (அட்ரோபா பெல்லடோனா)
  • நரம்புத் தளர்சியினை போக்கும் மருந்து – அஸ்வகந்தா (வைத்தானியா சாம்னிஃபெரா)
  • தசைபிடிப்பு வலிகளுக்கு மருந்து – நிக்கோட்டியானா டொபாக்கம்
  • இரவு மல்லி - செஸ்ட்ரம் நாக்டர்னம்
  • தூதுவளை – சொலானம் டிரைலோபேட்டம்.
  • சூலக இலைகள் அச்சிற்கு இணையாக அமையாமல் சற்று சாய்வாக காணப்படும் குடும்பம் - சொலானேசி
  • மூன்று சிற்றிலையில் முடியும் கூட்டிலை – ஹுவியா பிரேசிலியன்சிஸ்
  • இலையடிச் செதில்கள் முட்களாக மாறியுள்ள தாவரம் - யூபோர்பியா ஸ்பிலன்டென்ஸ்
  • இலையடிச் செதில்கள் உரோம சுரப்பியாக மாறியுள்ள தாவரம் - ஜட்ரோபா குர்காஸ்.
  • அகாலிபாவின் மஞ்சரி – கேட்கின்
  • பலகற்றை மகரந்ததூள் - ரிசினஸ் கம்யூனிஸ்
  • இத்தாவர வேர்கள் ஸ்டார்ச் சத்து நிறைந்தவை - மானிஹாட் எஸ்குலெண்டா
  • பயோ – டீசல் - ஜட்ரோஃபா குர்காஸ்
  • ஜட்ரோஃபா காஸிப்பிஃபோலியா இலை, வேர் - பாம்புக்கடி மற்றும் தொழுநோய்க்கு மருந்து
  • தோட்டங்களின் குரோட்டன் - கோடியம் வேரிகேட்டம்
  • பால் புதர் - யூபோர்பியா திருக்கள்ளி
  • பில்லாந்தஸ் எம்பிளிக்கா கனி – வைட்டமின் -ஊ நிறைந்தது.
  • கிளாடோடு – யூபோர்பியா ஆண்டிகோரம், யூபோர்பியா திருக்கள்ளி.
  • மணிக்கோபா ரப்பர் - மானிஹாட் கிளாசியோவி
  • மானோகார்பிக் பல்லாண்டு தாவரம் - மியூஸா
  • மியூஸாவின் உண்மையான தண்டு – தரையடி ரைசோம்.
  • சிறகு இணைப்போக்கு நரம்பமைப்பு – மியூசேசி, மியூசா.
  • மியூஸாவின் மஞ்சரி – கிளைத்த ஸ்பாடிக்ஸ்
  • ஆண் மலர்கள். பெண் மலர்கள், மற்றும் இருபால் மலர்கள், ஒரே தாவரத்தில் இருப்பது – பாலிகேமஸ் எ.கா.மியூஸா
  • மியூஸாவின் கனி – பெர்ரி
  • ராவனெலாவின் கனி – வெடிகனி.
  • பயணிகளின் பனை – ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ்
  • மணிலா நார்த் தாவரம் - மியூஸா டெக்ஸ்டைலிஸ்
  • அபாகா துணி – மியூஸா டெக்ஸ்டைல்ஸ்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுதேசி இயக்கம் :

கர்சன் பிரபு வங்காளத்தை 1905ஆம் ஆண்டு பிரித்தார். அச்செயல் காங்கிரசு இயக்கத்திற்கு மறைமுகமாக உதவியது. வங்கப் பிரிவினை மக்களைப் பிரிப்பதற்கு பதில், அவர்களை ஒன்றாகச் சேர்த்தது. அச்செயல் பொருளாதாரப் புறக்கணிப்பு எனும் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு வழிவகுத்தது. சுதேசி என்பதன் பொருள் சொந்த நாடு என்பதாகும். அவ்வியக்கம் சொந்த நாட்டின் தொழில்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. சுதேசி இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட ஏராளமான மக்கள் ஆங்கிலப் பொருட்களையும், குறிப்பாக துணிவகைகளையும், புறக்கணித்தனர். அதனால் இந்தியத் தொழில்கள் வளர்ந்தன. சுதேசி இயக்கத்தினர் அயல்நாட்டுத் துணிகளைச் சேகரித்து அவற்றை நிகரங்களின் மையப்பகுதிகளில் எரித்துச் சாம்பலாக்கினர். ஏராளமான இளைஞர்கள் தம் படிப்பையும் விட்டு அவ் வியக்கத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வந்தே மாதரம் எனும் “தாய்நாட்டு பற்றுமிக்க முழக்கத்தை எழுப்பினர். தென்னிந்தி யாவில் தூத்துக்குடியைச் சேர்ந்த வ.உ.சி. என எல்லோராலும் அழைக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி அல்லது குழுமத்தினை (Swedeshi Steam Navigation Company) இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் வணிகம் செய்ய நிறுவினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முஸ்லிம் லீக் தோற்றம் 1906 :

இந்திய தேசியக் காங்கிரசின் தோற்றம் முஸ்லிம்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. தங்கள் முன்னேற்றத்திற்குத் தனியாக ஒரு அமைப்புத் தேவை என்று படித்த முஸ்லிம்கள் பலரும் உணர்ந்தனர். பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றிய ஆங்கில அரசு முஸ்லிம்களின் வேண்டுகோளை ஏற்றது. 1906ஆம் ஆண்டு டாக்காவின் நிவாபான சலிமுல்லா கான் தலைமையில் முஸ்லிம் லீக் உருவாகியது. முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாது காப்பதை நோக்கமாகக் கொண்டு ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நிடந்து கொண்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மின்டோமார்லி சீர்திருத்தங்கள் 1909 :

இந்தியாவின் அரசப்பிரதிநதியான மின்டோ பிரபுவும் இந்திய அரசுச் செயலர் மார்லியும் இணைந்து இந்திய சட்டமன்றங்களைச் சீர்திருத்த திட்டம் வகுத்தனர். அதன்படி 1909ஆம் ஆண்டு இந்தியச் சட்ட மன்றங்கள் சட்டம், அல்லது மின்டோமார்லி சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இந்திய சட்டமன்றங்களின் செயல் பாடுகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. அச்சட்டத்தின்படி சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. முஸ்லிம்களுக்கென தனித் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை காங்கிரசு கடுமையாக எதிர்த்தது. பால், லால், பால் (Bal, Lal, Pal) அடங்கிய ­மூவர் தலைமையிலான அணி தங்கள் பேச்சினாலும், எழுத்தினாலும், இந்தியா முழுவதும் மக்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டியது. மாசினியின் "வாளை எடுத்து அரசை வீழ்த்து. ஏனெனில் அது அத்துமீறிய அன்னிய அரசு'' என்ற சொற்கள் இந்தியரின் மனதில் எதிரொலித்தது. உண்மையில் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையானது மிதவாதிகளை அரசிடம் மெத்தப் போக்குடையவர்களாக்கி, 1916ஆம் ஆண்டு நிடந்த லக்னோ மாநாட்டில் அவர்களைத் தீவிரவாதிகளுடன் மீண்டும் ஒன்று சேர வழி வகுத்தது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சூரத் பிளவு 1907 :

காங்கிரசில் மிதவாதிகளுக்கும் தீவிர தேசியவாதி களுக்கும் இடையே நலவிய கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டு வந்தன. காங்கிரசு, சுயராஜ்யம் அடைவதே தனது நோக்கமென அறிவிக்க வேண்டும், என்று தீவிர தேசியவாதிகள் விரும்பினர். ஆனால், அத்தகைய தீவிர வழிகளில் ஈடுபட்டு ஆங்கில அரசுடன் நேரடியாக மோதுவதற்கு மிதவாதிகள் தயாராக இல்லை. 1907ஆம் ஆண்டு நிடந்த சூரத் மாநாட்டில் காங்கிரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இரு பிரிவினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அதனால் காங்கிரசு இரண்டாகப் பிரிந்து அதிலிருந்து தீவிர தேசியவாதிகள் வெளியேறினர். இந்நகழ்ச்சி சூரத் பிளவு எனப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 25 February 2019

அளவிகள்

சில அடிப்படை அளவி கருவிகளை அறிவோம்

வளிமண்டல அழுத்தத்தை அறிய - பாரா மீட்டர்

பாலின் அடர்த்தி, தூய்மை அறிய - லாக்டோ மீட்டர்

காற்றின் வேகம், திசை அறிய - அனிமா மீட்டர்

காற்றின் ஈரப்பதத்தை அறிய - ஹைக்ரோ மீட்டர்

உணவுப் பொருட்களின் வெப்ப ஆற்றலை அறிய - கலோரி மீட்டர்

திரவங்களின் அடர்த்தியை அறிய - ஹைட்ரோமீட்டர்

சூரிய கதிர்வீச்சை அளவிட - பிரிஹிலியோ மீட்டர்

உப்புக்கரைசலின் அடர்த்தியை அறிய - சலைனோ மீட்டர்.

காற்றின் வேகத்தை அளக்க - போபர்ட்ஸ் ஸ்கேல்

புவி அதிர்ச்சி அளவை அறிய - ரிக்டர் ஸ்கேல்

புவி அதிர்ச்சியின் செறிவை அளவிட - மெர்காலி ஸ்கேல்

பொருட்களின் கடின, மென் தன்மைகளை அறிய - மோஸ் ஸ்கேல்




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சுயசரிதைகள்

உலக பிரபலங்களின் சுயசரிதைகளை அறிவோம்...

மகாத்மா காந்தி - The Story of My Experiments with Truth

ஜவகர்லால் நேரு - An Autobiography

அடால்ப் ஹிட்லர் - Mein kampf

பெனாசிர் பூட்டோ - Daughter of the East

பில் கிளின்டன் - My Life

நெல்சன் மண்டேலா - Long Walk to Freedom

தலாய் லாமா - Freedom in Exile

ரவீந்திரநாத் தாகூர் - My Reminiscences

அப்துல்கலாம் - Wings of Fire

நரசிம்மராவ் - The insider

ஆர்.கே.நாராயண் - My days

வெங்கட்ராமன் - My Presidential Years

கிரண்பேடி - I Dare

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. 1972-க்கு முன்பு இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது எது?

2. ஆண்களைப் பற்றிய மருத்துவ படிப்பு எப்படி அழைக்கப்படுகிறது?

3. கண்ட நகர்வுக்கு முன்பு இமயமலை பகுதியில் இருந்த கடலின் பெயர் என்ன?

4. பிதர் கனிகா தேசிய பூங்கா எங்குள்ளது?

5. நமது நாட்டின் முக்கியமான ஆற்றுத் துறைமுகம் எது?

6. இந்திய கூட்டாட்சி முறை எந்த நாட்டின் கூட்டாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டது?

7. குதிரைகளைப் பற்றிய படிப்பு எது?

8. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ விதத்தை உயர்த்துமா? குறைக்குமா?

9. உலக வனவாழ் நிதி அமைப்பின் சின்னத்தில் இடம் பெறும் உயிரினம் எது?

10. நிறையை ஈர்ப்பு விசையால் பெருக்கக் கிடைப்பது என்ன?

விடைகள்

1. சிங்கம், 2. ஆன்ட்ராலஜி, 3. டெத்திஸ், 4. ஒரிசா, 5. ஹால்தியா, ஹூக்ளி ஆற்றுத் துறைமுகம் (கொல்கத்தா), 6. கனடா, 7. ஹிப்பாலஜி, 8. உயர்த்தும், 9. பாண்டா, 10. எடை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விலங்கு நோய்கள்


  • விலங்கு - மனிதர்களுக்கு இடையே பரஸ்பரம் பரவும் நோய்கள் ஷூனோசெஸ் எனப்படுகிறது. ஆந்த்ராக்ஸ், புரூஸெல்லோசிஸ், ரேபிஸ் போன்றவை இந்த வகை நோய்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
  • மாடுகளைத் தாக்கும் நோய்கள் : ஆந்த்ராக்ஸ், புரூஸெல்லோசிஸ், கோமாரி
  • ஆடுகளைத் தாக்கும் நோய்கள் : நீலநாக்கு நோய், துள்ளுமாரி
  • கோழிகளைத் தாக்கும் நோய்கள் : ராணிகெட், இன் புளூயன்ஸா, பறவைக் காய்ச்சல்
  • பன்றிக் கறியிலிருக்கும் நாடாப்புழு மனிதர்களைப் பாதிக்கும்.
  • வெறிநாய்க்கடியின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் ரேபிஸ்.
  • ரேபிஸ் நோய் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும்.
  • பி.எஸ்.இ. நோய் மாட்டிறைச்சி மூலம் மனிதருக்குப் பரவும்.
  • எலியின் சிறுநீர் வழி பரவும் நோய் லெப்டோஸ் பைரோசிஸ்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விளையாட்டு விருதுகள்


  • இந்தியாவில் விளையாட்டுகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது.
  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் (1991-1992)
  • சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
  • அர்ஜூனா விருது 1961 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
  • வாழ்நாள் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு தயான்சந்த் விருது வழங்கப்படுகிறது.
  • சாகச விளையாட்டு வீரர்களுக்கு டென்சிங் நார்கே விருது.
  • சிறந்த விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது.
  • 2018-ம் ஆண்டு விராட்கோலி மற்றும் மீராபாய் சானு ஆகியோா் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றனர்.
  • நீரஜ் சோப்ரா உள்பட 20 வீரர்கள் அர்ஜூனா விருது பெற்றனர்.
  • சி.ஏ. கட்டப்பா, விஜய்சர்மா உள்பட 8 போ் துரோணாச்சார்யா விருதும்,
  • சத்யதேவ் பிராசாத், பரத்குமார் சேத்ரி, பாபி அலோசியஸ், சவுகலே தத்து தத்தாத்ரேய் ஆகியோர் தயான்சந்த் விருதும் பெற்றனர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 24 February 2019

Statue of Unity

  • Facts about Sardar Vallabhbhai Patel statue that dwarfs the world’s tallest structures. Here are some facts about the "Statue of Unity" that is much taller than the Statue of Liberty and Christ the Redeemer statue in Rio de Janeiro.
  • The ‘Statue of Unity’ constructed as a tribute to Sardar Vallabhbhai Patel will be inaugurated by Prime Minister Narendra Modi on October 31. Situated on Sadhu Bet island (சாது பெட் தீவு) on Narmada river 200 km from Ahmedabad, the memorial has been constructed as a reminder of India's freedom struggle and Patel's visionary ideologies of unity, patriotism, inclusive growth and good governance. Here are some facts about the world's tallest statue.
  • The project was announced by Prime Minister Narendra Modi in 2010, while he was serving as the Chief Minister of Gujarat. The foundation stone for the memorial was laid in 2013. 
  • The statue costs Rs 2,389 crore and nearly 3,400 labourers and 250 engineers worked round the clock for 42 months to complete the project. No escalation of labour, fuel and material used was allowed to construct the statue. 
  • The 182-metre statue is the tallest in the world and is twice the size that of Statue of Liberty in New York City, which stands at 93-metres and four times the size of Christ the Redeemer in Rio de Janeiro. It is built from 90,000 tonnes of cement and 25,000 tonnes of iron. 
  • The structure comprises of the Shrestha Bharat Bhavan, which is a 3-star lodging facility consisting 52 rooms. 
  • The engineering marvel is vibration and earthquake proof and can withstand wind velocity of up to 60 metres/second. 
  • The three-story base of the structure has a 153-meter viewing gallery, which can accommodate up to 200 visitors. It will offer visitors an expansive view of the Sardar Sarovar Dam which is situated approximately 3.2 kilometres from the memorial. The base will also have a memorial garden and a large exhibition hall. 
  • குஜராத் மாநிலம் வதோதரா அருகே சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.2 கிலோ மீட்டர் தூரத்தில் 12 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் செயற்கையாக அமைக்கப்பட்ட சாது பெட் என்ற தீவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 
  • தற்போது வரை உலகில் இருக்கும் உயரமான சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை தான். அதன் உயரம் 419 அடி. 
  • இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலை என்றால், அது சுதந்திரப் போராட்ட வீரர், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலை தான்.  
  • ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி.
  • சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி. 
  • கால் பகுதியில் இருந்து தலை வரை உள்ள சிலையின் உயரம் 597 அடி. 
  • அதாவது கன்னிகுமரியில் கடலில் கம்பீரமாக இருக்கும் திருவள்ளுவரின் சிலையே 133 அடி என்றால் இதன் பிரமாண்டம் என்ன என்பதை உணர முடியும். 
  • இந்த படேல் சிலையின் தயாரிப்பிற்கு 90,000 டன் சிமென்ட், 25,000  டன் இரும்பு, 1,700 டன் பித்தளை பயன்படுத்தப்பட்டு இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • சிலையின் உள்பகுதி காங்கிரீட் கலவையிலான கட்டுமானம் கொண்டது. சிலையின் வெளிப்பகுதி பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • சிலையின் உள்பகுதி வழியாக மேலே செல்வதற்கு இரண்டு லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 லிப்டுகள் மூலம் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் தலா 40 பேர் வரை செல்ல முடியும். 
  • சுமார் 220 கிமீ வேக காற்றையும், 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் சிலையின் மார்பு பகுதியில், அதாவது 501 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கபட்டுள்ளது. அந்த 501 அடி உயரத்தில் 200 பேர் வரை நின்று இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். 
  • சிலையின் அடித்தளம் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அடித்தளத்தில் 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. 
  • மேலும் அடித்தளத்தில் கண்காட்சி அரங்கம், நினைவுப் பூங்கா, உணவுக் கூடங்கள் என பல அமைக்கப்படுகின்றன. 
  • விண்ணை முட்டும் அளவில் காட்சியளிக்கும் இந்த சிலையின் மொத்த செலவு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். 
  • ஒற்றுமையின் சிலை என்று பெயரிடப்பட்டுள்ள படேல் சிலை, உலகிலேயே மிக உயரமானதாக ஆகும். 
  • பல ஆச்சரியங்கள் நிறைந்த படேலின் சிலை தற்போது சிகரமாக காட்சியளிக்கிறது. 
  • இனிமேல் உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்டமான சிலையை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.
  • சர்தார் வல்லபாய் படேல் சிலை இது "ஒற்றுமை சிலை" . உள்ளன, 
  • இது லிபர்ட்டி சிலை மற்றும் கிறிஸ்டி ரிடீயர் சிலை ஆகியவற்றில் மிகவும் உயரமானது.
  • குஜராத் முதலமைச்சராக பணியாற்றும் போது, பிரதமர் நரேந்திர மோடி 2010 ம் ஆண்டு இந்த திட்டத்தை அறிவித்தார். 
  • இந்த நினைவுச்சின்னத்திற்கான அடித்தள கல் 2013 ல் அமைக்கப்பட்டது.
  • சிலை ரூ 2,389 கோடி மற்றும் கிட்டத்தட்ட 3,400 தொழிலாளர்கள் மற்றும் 250 பொறியாளர்கள் திட்டத்தை முடிக்க 42 மாதங்களுக்கு கடிகாரத்தை சுற்றி வேலை. 
  • 182 மீட்டர் சிலை உலகிலேயே மிக உயரமானது மற்றும் நியூயார்க் நகரில் லிபர்ட்டி சிலைக்கு இரண்டு மடங்கு அளவு உள்ளது, இது 93 மீட்டர் மற்றும் ரியோ டி ஜெனிரோவில் கிறிஸ்துவின் மீட்பின் நான்கு மடங்கு அளவு ஆகும். 
  • ஷெஸ்தா பாரத் பவன், 52 அறைகள் கொண்ட 3-நட்சத்திர உறைவிடம் கொண்ட அமைப்பு ஆகும்.
  • பொறியியல் வியப்பு அதிர்வு மற்றும் நிலநடுக்க ஆதாரம் மற்றும் 60 மீட்டர் / வினாடி காற்றின் வேகத்தை தடுக்க முடியும்.
  • ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 
  • 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
  • `இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர். 
  • பல்வேறு மாகாணங்களாக இருந்த இந்தியாவை, சுதந்திரம் பெற்ற பிறகு ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். 
  • இந்தநிலையில் சர்தார் படேலுக்கு குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்’ என்ற இடத்தில் 182 மீட்டரில் பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 
  • மேலும், இதற்கு `ஒருமைப்பாட்டு சிலை' எனப் பெயர் வைக்கப்பட்டது. சிலையுடன் இந்த வளாகத்திலேயே பெரிய பூங்கா, ஹோட்டல், மாநாடு மையம், பொழுதுபோக்கு பூங்கா, ஆராய்ச்சி நிலையம், கண்காட்சி மையம் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 
  • மேலும், உலகிலேயே உயரமான சிலையாக இது அமையும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி அதற்கான பணிகளைச் செய்து வந்தது. 
  • இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் இரும்பில் அவருக்கு சிலை அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் இருந்து இரும்பு சேகரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 
  • சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி அவரது சிலையைத் திறக்கப்பட்டுள்ளது



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆஸ்கர் விருதுகள் 2018

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழு விவரத்தை கீழே பார்ப்போம்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது.கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

  • சிறந்த படம் - த ஷேப் ஆப் வாட்டர் 
  • சிறந்த நடிகர் - கேரி ஓல்டுமேன் (டார்க்ஸ்ட் ஹார்)
  • சிறந்த நடிகை - பிரான்சஸ் மிக்டார்மண்ட் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
  • சிறந்த இயக்கம் - கில்லர்மோ டெல் டோரோ (த ஷேப் ஆப் வாட்டர்)
  • சிறந்த பாடல் - கோகோ (ரிமம்பர் மி)
  • சிறந்த இசை - த ஷேப் ஆப் வாட்டர் (அலெக்சாண்ட்ரே டெஸ்ப்லெட்)
  • சிறந்த ஒளிப்பதிவு - பிளேட் ரன்னர் 2049 (ரோஜர் ஏ.டெக்கின்ஸ்)
  • சிறந்த திரைக்கதை - கெட் அவுட் (ஜோர்டன் பீல்)
  • சிறந்த தழுவல் திரைக்கதை - கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் இவோரி)
  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் திரைப்படம் - த சைலன்ட் சைல்ட் (கிறிஸ் ஓவர்டன், ராச்சல் ஷென்டன்)
  • சிறந்த ஆவண குறும்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் த 405 (ப்ராங்க் ஸ்டிப்பெல்)
  • சிறந்த படத்தொகுப்பு - டங்கிர்க் (லீ ஸ்மித்)
  • சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - பிளேட் ரன்னர் 2049 (ஜான் நெல்சன், கெர்டு நெஃப்சர், பால் லாம்பர்ட் மற்றும் ரிச்சர்ட் ஆர்.ஹுவர்)
  • சிறந்த துணை நடிகர் - சாம் ராக்வெல் (த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி)
  • சிறந்த துணை நடிகை - ஆலிசன் ஜேனி (ஐ, டோன்யா)
  • சிறந்த வெளிநாட்டு படம் - எ பென்டாஸ்டிக் வுமன் (சிலி)
  • சிறந்த அனிமேஷன் படம் - கோகோ (லீ அன்கிர்ச், டார்லா கே.ஆன்டர்சன்)
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் - டியர் பாஸ்கட்பால் (க்ளென் கீன், கோப் ப்ரயண்ட்)
  • தயாரிப்பு வடிவமைப்பு - தி ஷேப் ஆஃப் வாட்டர்
  • ஒலித்தொகுப்பு - டங்கிர்க் (ரிச்சர்டு கிங், அலெக்ஸ் கிப்சன்)
  • ஒலி இணைப்பு - டங்கிர்க் (கடரெக், க்ரே, மார்க்)
  • சிறந்த ஆவணப்படம் - ஐகரஸ் (பிரயன் போகல், டேன் கோகன்)
  • ஆடை வடிவமைப்பு - பாண்டம் த்ரெட் (மார்க் ப்ரிட்ஜஸ்)
  • ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் - டார்க்கஸ்ட் ஹார் (கசுரியோ சுஜி, டேவிட் மலினோஸ்கி, லக்கி சிபிக்)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 23 February 2019

கடந்து வந்த பாதை - பிப்ரவரி 9-15

  • சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். (பிப்ரவரி 9)
  • பாரத ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 206 கோடி டாலர் உயர்ந்து 40 ஆயிரத்து 24 கோடி டாலராக அதிகரித்தது. ஜனவரி 25ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் அது 150 கோடி டாலர் உயர்ந்து 39 ஆயிரத்து 818 கோடி டாலராக இருந்தது. (பிப்ரவரி 9)
  • ராஜஸ்தான் மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைத்த போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசிக் கலைத்தனர். (பிப்ரவரி 10)
  • ஹாமில்டனில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது. 2 1 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. (பிப்ரவரி 10)
  • காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் பலியானார்கள். அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. (பிப்ரவரி 10)
  • ககன்யான்’ திட்டம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பு வதற்காக விமானப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறினார். (பிப்ரவரி 11)
  • 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஓர் இடம் முன்னேறி 2வது இடத்தைப் பிடித்தார். (பிப்ரவரி 11)
  • தமிழகத்தின் ஒப்புதல் இன்றி முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தது. (பிப்ரவரி 11)
  • தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டது. (பிப்ரவரி 12)
  • டெல்லி சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியானார்கள். அவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். (பிப்ரவரி 12)
  • தமிழகத்தில் ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவித்தார். (பிப்ரவரி 12)
  • நாட்டில் ஜனவரி மாதத்தில் சில்லறை விற்பனை விலை பணவீக்கம் 2.05 சதவீதமாக குறைந்தது. டிசம்பர் மாத பணவீக்கம் 2.19 சதவீதத்தில் இருந்து 2.11 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டது. (பிப்ரவரி 12)
  • காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதைவிட, பாரதீய ஜனதா அரசு செய்த ஒப்பந்தப்படி ரபேல் போர் விமான விலை குறைவானது என்று தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் தகவல் வெளியானது. (பிப்ரவரி 13)
  • கிரண்பெடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவர்னர் மாளிகை முன்பு புதுச்சேரி முதல்அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். (பிப்ரவரி 13)
  • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ. 100 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. (பிப்ரவரி 13)
  • ரபேல் விவகாரத்தை முன்னிறுத்தி நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (பிப்ரவரி 13)
  • புதிதாக உருவாகும் ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகளை அமைப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. (பிப்ரவரி 13)
  • மோசடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. (பிப்ரவரி 13)
  • காஷ்மீரில் 40 வீரர்கள் பலிக்குக் காரணமான பயங்கரவாதி களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் கூறினார். (பிப்ரவரி 15)
  • ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் (2018 ஏப்ரல் 2019 ஜனவரி) ரூ. 1.59 லட்சம் கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளன. இதில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு மட்டும் 66 சதவீதமாக உள்ளது. (பிப்ரவரி 15)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார். தமிழக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர், அணியில் இடம் பிடித்தார். (பிப்ரவரி 15)



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 19 February 2019

தேசிய விளையாட்டுகள்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆக்கி என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். அதுபேல சில நாடுகளின் தேசிய விளையாட்டுகள்...

ஆஸ்திரேலியா - கிரிக்கெட் மற்றும் டென்னிஸ்

ரஷ்யா - செஸ் மற்றும் கால்பந்து

அமெரிக்கா - பேஸ்பால்

கனடா - ஐஸ்ஆக்கி

ஸ்காட்லாந்து - ரக்பி கால்பந்து

இங்கிலாந்து - கிரிக்கெட், ரக்பி கால்பந்து

பாகிஸ்தான் - ஆக்கி

ஜப்பான் - ஜுஜுட்சு

ஸ்பெயின் - காளைச் சண்டை


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. இந்தியா வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்த முதல் போர்க்கப்பல் எது?.

2. இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார்?

3. தான் கேப்டனாக பதவி வகித்த டெஸ்ட் தொடரில் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் 3 சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?.

4. ரஷியாவில் ஆட்சி அதிகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் கைப்பற்ற காரணமாக இருந்த அக்டோபர் புரட்சியை முன்னின்று நடத்தியவர் யார்?.

5. இந்தியாவில் சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலம் எது?

6. அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர் கோவிலான தர்பார் சாகிப், பேச்சு வழக்கில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

7. நமது தேசத்தந்தை காந்திக்கு மகாத்மா என்ற பட்டம் அளித்தவர் யார்?

8. இந்தியாவில் எங்கே முதல் இரும்பு உருக்கு ஆலைகள் நிறுவப்பட்டன?

9. மிக அதிக பல்லுயிர்த்தன்மை கொண்ட நிலப்பகுதி எது?

10. டெல்லி செங்கோட்டையைக் கட்டிய முகலாய அரசர் யார்?

11. சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலின் பெயர் என்ன?.

12. செவ்வாயின் சுற்றுப்பாதைக்கு இந்தியா அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?

13. சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராம கிருஷ்ணா மிஷன் அமைப்பின் தலைமை இடம் எங்கு உள்ளது?

14. கஸ்தூரிபா காந்தியின் சமாதி எங்குள்ளது?

15. படுகொலைகளுக்கு இடையே என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

விடைகள்

1. சி.ஜி.எஸ். பார்ராகுடா, 2. பால்தேவ் சிங், 3. விராட் கோலி, 4. லெனின், 5. தெலுங்கானா, 6.பொற்கோவில், 7. ரவீந்திரநாத் தாகூர், 8. ஜாம்ஷெட்பூர், 9. வெப்ப மண்டலம், 10. ஷாஜகான், 11. விவேக் எக்ஸ்பிரஸ், 12.மங்கள்யான், 13. பேலூர் மடம் (கொல்கத்தா), 14. புனே, 15. அரவிந்த் அடிகா.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

விண்வெளி துளிகள்

* விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலம் ஸ்புட்னிக்-1.

* ஸ்புட்னிக், 1957-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்டது.

* ஸ்புட்னிக் என்றால் சகபயணி என்று பொருள்.

* விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்க விண்கலம் எக்ஸ்புளோரர் - 1.

* முதன் முதலாக சந்திரனின் மறுபக்கத்தை படம் பிடித்த ரஷிய விண்கலம் லூனா-2.

* விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யுரிககாரின்.

* விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸ் லியானோவ்.

* விண்வெளி விபத்தில் மறைந்த முதல் விண்வெளி வீரர் கோமரோ.

* முதல் விண்வெளி சுற்றுலா பயணி டெனிஸ் டிடோ.

* விண்வெளிக்கு சென்ற முதல் சுற்றுலா பெண்மணி அனுஷே அன்ஸாரி.

* மனிதனோடு சென்ற முதல் விண்கலம் வாஸ்டாக்-1.

* வாஸ்டாக் என்ற ரஷ்ய வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.

* விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி வாலன்டினா தெரஸ்கோவா.

* முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா.

* விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு லைக்கா என்ற நாய்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புகழ்மிகு மேற்கோள்கள்

“உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” - பாரதியார்.

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” - பாரதியார்.

“தமிழெனன்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” - நாமக்கல் கவிஞர்.

“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” - நாமக்கல் கவிஞர்.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” - நாமக்கல் கவிஞர்.

“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல, மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”

- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

“செய்யும் தொழிலே தெய்வம்” - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.” - மனோன்மணியம் சுந்தரனார்.

“தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” - மனோன்மணியம் சுந்தரனார்.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழின்பத் தமிழ் எங்கள்

உயிருக்கு நேர்.” - பாரதிதாசன்.

“சாவில் தமிழ் படித்து சாக வேண்டும்

எந்தன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” - சச்சிதானந்தன்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 16 February 2019

சிந்துசமவெளி மக்களின் தொழில்கள்

* சிந்து சமவெளி நாகரிக மக்கள் நெல் பயிரிட்டதற்கான ஆதாரம் லோத்தல் நகரில் கிடைத்துள்ளது.

* பானை செய்யும் கலையை அவர்கள் அறிந்திருந்தனர். சிவப்பு, கருப்பு பானைகள் கண்டறியப்பட்டுள்ளன.

* பருத்தி, நெல், கோதுமை, பேரீச்சை, கடுகு, பார்லியை பயிரிட்டனர்.

* உலகிலேயே முதன் முதலாக பருத்தி பயிரிட்டவர்கள் சிந்து சமவெளி மக்களே ஆவர்.

* பருத்தி, கிரேக்கர்களால் சின்டோன் என்று குறிப்பிடப்பட்டது.

* சிந்து சமவெளி நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது.

* தாமிரம் மற்றும் வெண்கலத்தாலான கருவிகளை அவர்கள் பயன்படுத்தினர்.

* உலோகங்களில் இரும்பையும், விலங்குகளில் குதிரையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

* 1972-ல் ஜெ.பி.ஜோஷி குழுவினரால் குஜராத்திலுள்ள சூர்கோட்டா என்ற இடத்தில் சிந்து சமவெளி கால குதிரை எலும்புகள் கிடைத்துள்ளன.

* சன்குதாராவில் ஹரப்பா கால மற்றும் முந்தைய ஹரப்பா கால சான்றுகள் கிடைத்துள்ளன.

* தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் ஆகியவற்றின் பயனை இந்த மக்கள் அறிந்திருந்தனர்.

* தாயம், சூதாடுதல் இவை சிந்துசமவெளி மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்துள்ளன.

* சிந்துசமவெளி மக்கள் தாமிரத்தை பயன்படுத்தியதில் இருந்து அந்த நாகரிகம் ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது என தெரிகிறது.




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நகரங்களும், நதிகளும்...

நதிகளை ஒட்டியே நகரங்கள் உருவாகி வளர்ந்தன. உலகின் புகழ்மிக்க நகரங்களையும், அவை அமைந்துள்ள நதிக்கரைகளையும் அறிவோம்...

  • கெய்ரோ (எகிப்து) - நைல்நதி
  • லண்டன் (இங்கிலாந்து) - தேம்ஸ்
  • நியூயார்க் (அமெரிக்கா) - ஹட்சன்
  • வாஷிங்டன் (அமெரிக்கா) -போடாமாக்
  • பாரிஸ் (பிரான்ஸ்) - செய்ன்
  • பெர்லின் (ஜெர்மனி) - ஸ்பிரி
  • பாக்தாத் (ஈராக்) - டைக்ரிஸ்
  • ரோம் (இத்தாலி) - டைபர்
  • ஷாங்காய்(சீனா) - யாங்சிஹியாங்
  • வியன்னா (ஆஸ்திரியா) - டான்யூப்
  • கராச்சி (பாகிஸ்தான்) - சிந்து நதி
  • காபூர் (ஆப்கானிஸ்தான் ) - காபூல்
  • லெனிக்கிராட் (ரஷியா) - நீவா
  • மாஸ்கோ (ரஷியா) - மாஸ்கா
  • லிஸ்பன் (பேர்ச்சுக்கல்) - டேகஸ்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. ரத்த செல்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவும் கருவியின் பெயர் என்ன?

2. ஒலி மாசு எனப்படுவது எத்தனை டெசிபல் அளவுக்கு மேற்பட்ட ஒலி?

3. டி.வி. ஆன்டனா செய்ய பயன்பட்ட உலோகம் எது?

4. பாலூட்டி உயிரினங்களில் நீண்ட நாக்கு உடைய உயிரினம் எது?

5. ‘சர்கிள் ஆப் ரீசன்’ எனும் புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

6. தாவரங்களுக்கு உணவு, நீர் எடுத்து செல்லும் திசுக்கள் எவை?

7. ஒரு ஹெக்டேர் என்பது எத்தனை ஏக்கர்?

8. முழுவிடுதலை பிரகடனம் செய்யப்பட்ட காங்கிரஸ் மாநாடு எங்கு, எப்போது நடந்தது?

9. தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

10. புளியில் காணப்படும் அமிலப்பொருள் எது?

11. 2 முறை இந்திய குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர் யார்?

12. சிலப்பதிகாரத்தில் ‘நூற்றுவர் கன்னர்’ என குறிப்பிடப்படுவது யார்?

13. சிம்பன்சி, கொரில்லா, கிப்பன், உராங்உடான் குரங்கினங்களின் ஒற்றுமை என்ன?

14. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?

15. கரும்புச் சக்கையை ஈஸ்ட் மூலம் நொதித்தலுக்கு உட்படுத்தினால் இறுதியாக கிடைப்பது?

விடைகள்

1. ஹீமோசைட்டோமீட்டர், 2. 80 டெசிபல், 3. அலுமினியம், 4. ஒகாபி, 5. அமிதவ் கோஷ், 6. வாஸ்குலர், 7. 2.47 ஏக்கர், 8. 1929ல், லாகூரில், 9. 1980, 10. டார்டாரிக், 11. ராஜேந்திரபிரசாத், 12. சதகர்னி மன்னர், 13. இவை வாலில்லா குரங்கினங்கள், 14. கானிங் பிரபு, 15. ஈதல் ஆல்ஹகால்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 4 February 2019

ஒலி, ஒளி

ஒளியின் திசைவேகம் வெற்றிடத்தில் விநாடிக்கு 3X108 மீட்டர்

ஒளியின் திசைவேகம் கண்ணாடியில் விநாடிக்கு 2X108 மீட்டர்

ஒலியின் திசைவேகம், காற்றில் விநாடிக்கு 330 மீட்டர்.

ஒலி வேகம் நீரில் விநாடிக்கு 1450 மீட்டர்

ஒலிவேகம் இரும்பில் விநாடிக்கு 5 ஆயிரம் மீட்டர்.

ஒளி பரவ ஊடகம் தேவையில்லை, ஒலி பரவ ஊடகம் தேவை.

ஊடகத்தின் அடர்த்தி அதிகரித்தால் ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும்.

ஊடகத்தின் அடர்த்தி அதிகரித்தால் ஒளியின் திசை வேகம் குறையும்.

ஒளி அலைகள் குறுக்கலைகள்.

ஒலி அலைகள் நெட்டலைகள்.

தொலைக்காட்சியை ஆன் செய்தவுடன் படம் வருவதற்கு முன் ஒலி வந்துவிடுவதற்கு காரணம் படத்தை உருவாக்கும் பிக்சர்டியூப் சூடாக சிறிது நேரம் எடுத்துக்கொள்வதுதான். இப்போது வரும் நவீன டி.வி.களில் பிக்சர் டியூப் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மண்டல் கமிஷன்

மண்டல் கமிஷன் பிற்பட்டோர் நலன் குறித்து ஆராய இந்தியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது கமிஷன் ஆகும்.

மண்டல் கமிஷனை அமைத்தவர் மொரார்ஜி தேசாய். அந்த கமிஷன் தனது பரிந்துரையை இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சமர்ப்பித்தது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த முயன்றவர் வி.பி.சிங். இதர பிற்பட்ட வகுப்பினர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் 27 சதவீத ஒதுக்கீடு என்ற முக்கிய பரிந்துரைக்கு வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பாரதீய ஜனதா கட்சி, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தது. இடஒதுக்கீடு தொடர்பான இந்திரா ஷானி வழக்கில் உச்சிநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் 1992-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அப்போதைய பிரதமர் வி.பி.நரசிம்மராவ் அமல்படுத்தினார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நிலக்கரியும், தங்கமும்...

இந்தியாவில் நிலக்கரி மற்றும் தங்கம் கிடைக்கும் இடங்களை அறிவோம்...

ஹட்டி (கர்நாடகம்) - தங்கம்

கோலார் (கர்நாடகம்) - தங்கம்

ராமகிரி (ஆந்திரா) - தங்கம்

ஜாரியா (ஜார்க்கண்ட்) - நிலக்கரி

கரன்புரா (ஜார்க்கண்ட்) - நிலக்கரி

சன்டா (மத்திய பிரதேசம்) - நிலக்கரி

பேஞ்ச் பள்ளத்தாக்கு (மத்திய பிரதேசம்) - நிலக்கரி

ராணிகஞ்ச் (மேற்கு வங்காளம்) - நிலக்கரி

நெய்வேலி (தமிழ்நாடு) - பழுப்பு நிலக்கரி

சிங்கரேணி (ஆந்திரா) - நிலக்கரி

நம்சுக் நம்பக் (அருணாச்சலபிரதேசம்) - நிலக்கரி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சமணம்

சமண சமயத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.

மகாவீரர் வைசாலியில் உள்ள குந்டக் கிராமத்தில் பிறந்தார்.

24-வது கடைசி தீர்த்தங்கராக கருதப்படுபவர் மகாவீரர்.

தீர்த்தங்கரர் என்ற வார்த்தைக்கு கோட்டை கட்டுபவர் என்று பொருள்.

முதல் தீர்த்தங்கரர் ரிஷபா.

23-வது தீர்த்தங்கரர் பர்ஷவனாதா.

திருவள்ளுவரை சமணர் என்று கருதுபவர்கள் முதல் திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்பது முதல் தீர்த்தங்கரான ரிஷபதேவரை குறிப்பதாக கொள்வார்கள்.

மகாவீரர் சால் மரத்தடியில் ஞானம் பெற்றபின் ‘ஜினா’ என்ற அழைக்கப்பட்டார்.

ஜினா என்றால் வெற்றி பெற்றவர் என்று பொருள். இந்தச் சொல்லில் இருந்து ஜைனம் என்ற பெயர் உருவானது.

சமண சமயத்தில் இரு பிரிவினர் திகம்பரர் மற்றும் ஸ்வேதாம்பரர்.

ஆடை அணியாத திகம்பரர்களின் தலைவர் பத்ரபாகு.

வெண்ணிற ஆடை அணிந்த ஸ்வேதாம்பரர்களின் தலைவர் ஸ்தலபாகு.

சமண சமயம் திகம்பரர்களால் தென்னிந்தியாவிலும், ஸ்வேதாம்பரர்களால் வட இந்தியாவிலும் பரவியது.

ராஜஸ்தானில் மவுன்ட் அபுவில் உள்ள தில்வாரா ஜெயின் கோயிலும், கர்நாடகத்திலுள்ள சிரவணபெலகோலாவும் சமணர்களின் புனிதத் தலங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

வினாவங்கி


1. உலகில் முதலில் தோன்றிய பறவையாக கருதப்படுவது?

2. கோசி நதி எங்குள்ளது?

3. பெரியார் தேசியப்பூங்கா எங்குள்ளது? அங்கு எந்த உயிரினம் பராமரிக்கப்படுகிறது?

4. கடின நீரை மென்நீராக்க பயன்படும் வேதிச்சேர்மம் எது?.

5. டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?

6. மாறுதிசை மின்னோட்டத்தை நேர் திசை மின்னோட்டமாக மாற்றுவது எது?

7. Sn என்பது எந்த தனிமத்தின் குறியீடு?

8. கஸ்கியூட்டா எந்த வகை தாவரமாகும்?

9. பூமியின் சுழற்சி வேகம் எவ்வளவு?

10. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டியவர் யார்?

விடைகள்

1. ஆர்கியாப்டிரிக்ஸ், 2. பீகார், 3. கேரளா, யானைகள் பராமரிப்பு, 4. சோடியம் கார்பனேட், 5. நோபல், 6. மின் திருத்தி (ரெக்டிபயர்), 7. வெள்ளீயம், 8. ஒட்டுண்ணி தாவரம், 9. 29.8 கி.மீ./விநாடி, 10. முதலாம் ராஜேந்திரன்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE