- இடர் – இன்னல், துன்பம
- இடிக்கும் - கடிந்துரைக்கும்
- இடித்தல் - கடிந்துரைத்தல்
- இடிப்பார் - கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
- இடுக்கண் - துன்பம்
- இடும்பை - துன்பம்
- இடையல் - துகில்
- இட்டீடு - விவாதம்
- இணக்கவரும்படி - அவர்கள் மனம் கனியும்படி
- இதனி - வெற்றிலை
- இந்தனம் - விறகு
- இந்து - சந்திரன்இ நிலவு
- இமயன் - கூற்றுவன்
- இமையவர் - தேவர்
- இம்மை – இப்பிறவி
- இயைந்தக்கால் - கிடைத்தபொழுது
- இரட்சகர் - காப்பவர்
- இரட்சித்தானா? - காப்பாற்றினானா?
- இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
- இரவி - சூரியன்
- இருத்தி – இருப்பாயாக
- இருநிலம் - பெரிய உலகம்இ பெரிய நிலம்இ பெரியழகு
- இருநிறம் - அகன்ற நெஞ்சு
- இருப்பாணி - இரும்பு ஆணி
- இருப்புமுளை - ஆணியின் நுனி
- இரும்பனை - பெரிய பனை
- இரும்பொறை - பெரும்பொறுமை
- இருள் - பகை
- இல் - இல்லை
- இல்லார் - ஏழை
- இவண்நெறியில் - இவ்வழியில்
- இவுளி - குதிரை
- இழுக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்
- இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து
- இளவல் - தம்பி
- இளிவன்று - இழிவானதன்று
- இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்
- இறந்தார் - வரம்பு கடந்தவர்
- இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை
- இறுவரை - முடிவுக்காலம்
- இறை - தலைவன்
- இறைச்சி - வணங்கி
- இறைஞ்சி - பணிந்து. வணங்கி
- இனிதின் - இனிமையானது
- இனிய - நன்மை
- இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்
- இன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே
- இன்சொல் - இனியசொல்
- இன்புறூஉம் - இன்பம் தரும்
- இன்மை - வறுமை
- இன்னல் - துன்பம்
- இன்னா - தீங்கு
- இன்னா - தீய
- இன்னாச்சொல் - தீய சொல்
- ஈகம் - சந்தனமரம்
- ஈங்கதிர் - சந்திரன்
- ஈஞ்சு - ஈச்சமரம்
- ஈட்டம் - கூட்டம்
- ஈட்டம் - தொகுதி
- ஈண்டிய - ஆய்ந்தறிந்த
- ஈண்டு - இவ்விடம்
- ஈதல் - கொடுத்தல்
- ஈம் - தண்ணீர்
- ஈயப்படும் - அளிக்கப்படும்
- ஈயும் - அளிக்கும்
- ஈரிருவர் - நால்வர்
- ஈர்கிலா - எடுக்க இயலாத
- ஈர்த்து - அறுத்து
- ஈறிலி - கடவுள்
- ஈறு - அழிவுஇ எல்லை
- ஈனல் - கதிர்
- ஈனும் - தரும்
- ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்
- உகந்த - விரும்பிய
- உகு - சொரிந்த
- உசா - ஆராய்தல்
- உடற்சி - கோபம்
- உடையார் - செல்வர்
- உணர்வு - அறிவியல் சிந்தனை
- உணர்வு - நல்லெண்ணம்
- உணா - உணவு
- உண்டனெம் – உண்டோம் என்பதற்குச் சமமானது
- உண்பொழுது - உண்ணும்பொழுது
- உதயம் - கதிரவன்
- உதிரம் - குருதி
- உபகாரத்தான் - பயன்கருதாதுஉதவுபவன்
- உபாயம் - வழிவகை
- உம்பரார் பதி -தேவர்தலைவன்
- உயர்ந்தன்று - உயர்ந்தது
- உய்த்து - செலுத்தி
- உய்ம்மின் -பிழைத்துக்கொள்ளுங்கள்
- உய்ய - பிழைக்க
- உரவோர் - மனவலிமையுடையோர்
- உரன் - திண்ணிய அறிவு
- உரு - வடிவம்
- உருகுவார் – வருந்துவார்
- உரும் - இடி
- உலகம் - உயர்ந்தோர்
- உலையா உடம்பு - தளராத உடல்
- உல்குபொருள் - வரியாகு வரும் பொருள்
- உவணி - வாள்
- உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்
- உவப்ப - மகிழ
- உழுபடை - வேளாண்மை செய்யப் பயன்படும்;
- உழுவை - புலி (ஆண்புலி)
- உழை - ஒருவகை மான்இ மீன்
- உளவாக்கல் - உண்டாக்குதல்
- உள்ளி - வெங்காயம்
- உறுதி - உளஉறுதி
- உறுபொருள் - அரசு உரிமையால் வரும்பொருள்
- உறைதல் - தங்குதல்
- உற்றுழி - தேவையான பொழுது
- உன்னி - நினைத்து
- உன்னேல் - நினைக்காதே
Tag : Tamil literature refers to the literature in the Tamil language. Tamil literature has a rich and long literary tradition spanning more than two thousand years
No comments:
Post a Comment