Tuesday, 25 September 2018

சட்டப்படி முத்தலாக் குற்றம்

முத்தலாக் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை செப்டம்பர் 19 அன்று ஒப்புதல் வழங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கினார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, எந்தவித முன்னறிவிப்புமின்றி முத்தலாக் வழங்கினால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்க முடியும். 2017 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் முத்தலாக்குக்குத் தடைவிதித்ததிலிருந்து நாடு முழுவதும் இதுதொடர்பாக 201 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகச் சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.

No comments: