Hot Posts

Ad Code

பாண்டியர்கள்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
பாண்டியர்கள்
  1. பாண்டியர்களின் தலைநகரம் மதுரை. அவர்களின் துறைமுகம் கொற்கை.
  2. பாண்டியர்களின் சின்னம், மீன் கொடியாகும், வேம்புவை அடையாளப் பூவாக அணிவார்கள்.
  3. பாண்டிய அரசர்களின் தலைசிறந்தவன் நெடுஞ்செழியன்.
  4. முதல் தமிழ்ச் சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர்.
  5. இடைச் சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 59 பேர்.
  6. கடைச்சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 49 பேர்.
  7. தொல்காப்பியம், நிலந்திரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேறியது.
  8. நற்றிணைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன்.
  9. அகநாநூறைத் தொகுத்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
  10. ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலை இயற்றியவன் கடலுள் மாய்ந்த பெருவழுதி.
  11. சேர, சோழர் மற்றும் ஐந்து சிற்றரசர்கள் கொண்ட கூட்டுப்படையை தோற்கடித்த பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
  12. மதுரைக்காஞ்சி, நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code