பாண்டியர்கள்
- பாண்டியர்களின் தலைநகரம் மதுரை. அவர்களின் துறைமுகம் கொற்கை.
- பாண்டியர்களின் சின்னம், மீன் கொடியாகும், வேம்புவை அடையாளப் பூவாக அணிவார்கள்.
- பாண்டிய அரசர்களின் தலைசிறந்தவன் நெடுஞ்செழியன்.
- முதல் தமிழ்ச் சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர்.
- இடைச் சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 59 பேர்.
- கடைச்சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 49 பேர்.
- தொல்காப்பியம், நிலந்திரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேறியது.
- நற்றிணைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன்.
- அகநாநூறைத் தொகுத்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
- ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலை இயற்றியவன் கடலுள் மாய்ந்த பெருவழுதி.
- சேர, சோழர் மற்றும் ஐந்து சிற்றரசர்கள் கொண்ட கூட்டுப்படையை தோற்கடித்த பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
- மதுரைக்காஞ்சி, நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது.
No comments:
Post a Comment