ரிப்பன் பிரபு (Lord Ripon) - இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1880 முதல் கி.பி. 1884 வரை. இவரது ஆட்சிக் காலத்தில், 1881ல் இந்தியாவில் முதல் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இவர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் (Factory Workers) நலனில் அக்கறை காட்டினார். இவர் 1881 ஆம் ஆண்டில் தொழிற்சாலை சட்டம் (Factory Act) இயற்றினார். இச்சட்டத்தின்படி, 7 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள், ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்று சட்டம் வந்தது.
No comments:
Post a Comment