Sunday 23 February 2020

குப்த பேரரசு விரிவான தகவல்கள்


🩸1. குப்த வம்சத்தின் முதல் அரசர் : ஸ்ரீகுப்தர்
🩸2. பின் இவரது மகன் கடோதகஜ குப்தா ஆட்சி செய்தார். இவர்கள் இருவரும் ‘மகாராஜா’ என்று அழைக்கப்பட்டனர்.
🩸3. இவருக்குப்பின் இவரது மகன் முதலாம் சந்திர குப்தர் ஆட்சி செய்தார்
4. தலைநகரம்: பாடலிபுத்திரம்

முதலாம் சந்திரகுப்தர் (கி.பி 320-330)
1. குப்த சகாப்தத்தை கி. பி. 320ல் தோற்றுவித்தவர்.
2. மகாராஜாதிராஜா என்ற பட்டம் முதன் முதலாக பெற்றவர்
3. மனைவி: சைவாலியைச் சார்ந்த லிச்சாவி இளவரசியான குமாரதேவி
4. மனைவியுடன் இணைந்து தங்க நாணயங்களை வெளியிட்டார்
5. மெஹ்ருளி இரும்புத்தூண் கல்வெட்டு இவரது பரவலான போர் வெற்றிகள் பற்றி குறிப்பிடுகிறது.

🩸 சமுத்திரகுப்தர் (கி.பி 330- 380)
1. குப்த மரபிலேயே மிகச் சிறந்த அரசராக விளங்கியவர்.
2. இவரது ஆட்சிப்பற்றி அலகாபாத் தூண் கல்வெட்ட குறிப்பிடுகிறது
3. தென்னிந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான புகழ்மிக்க தட்சிணபாதா படையெடுப்பு முக்கியமானது.
4. காஞ்சியைச் சேர்ந்த விஷ்ணுகோபனைத் தோற்கடித்தார்

5. டாக்டர் வின்செண்ட ஸ்மித் இவரை இந்திய நெப்போலியன் என்று கூறியுள்ளார்.
6. பாடல்களை இயற்றும் திறனைப் பெற்றிருந்த இவரை கவிராஜன் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
7. அவரது நாணயங்களில் வீணையு;டன் அமர்ந்திருக்கும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது இது இசையில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது.
8. நாணயங்களில் இவர் ஆயுதங்களுடனும், புலியுடனும் போராடுவது போன்று வெளியிட்டார்.
9. இவரது சபையினை அரிசேனர் மற்றும் வசுபந்து அலங்கரித்தனர்
10. வசுபந்து இவரின் ஆசிரியர் ஆவார்

11. விக்கிரமாங்கா என்ற பட்டத்தினை பெற்றார்
12. ஈழ மன்ன் மேகவர்ணன் கேட்டவாறு கயையில் புத்த மடாலயம் கட்டினார். இதனால் அனுகம்பவன் என்று அழைக்கப்பட்டார்.
13. கவிராசா என்று அழைக்கப்பட்டார்;
14. குப்தர் கால இலக்கியம் இந்தியாவின் எலிசபெத் காலம் என்று கூறுவர். குப்தர்களின் காலம் பிராமணர்களின் காலம் என்றும் இந்து மத மறுமலர்ச்சி காலம் என்றும் இந்து மத மறுமலர்ச்சி காலம் என்பதால் இதனை பொற்காலம் என்று கூறுவர்.

🩸 இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி 380-415)
1. சமுத்திரகுப்தருக்குப் பின் அவரது புதல்;வர் இரண்;டாம் சந்திரகுப்த விக்ரமாதித்தர் ஆட்சிக்கு வந்தார்.
2. இவர் விக்கிரமாதித்தியன் என்ற பெயருடன் அரியணை ஏறினார்
3. ஐரோப்பிய வரலாற்றில் டீழரசடிழரள மற்றும் ர்யிளடிரசஙள போன்று திருமணங்கள் மூலம் உறவை வளர்த்துக் கொண்டார். லிச்சாவி குலத்தில் கொண்ட தொடர்பு, நாகர்களின் மகள் குபேர் நாகையுடன் திருமணம், தனது மகள் பிரபாவதியை இரண்டாம் உருத்திரசேனனுக்கு திருமணம் செய்து வைத்தல் ஆகியவை முக்கிய நிகழ்ச்சியாகும்
4. சாகர்களை அழித்தவர் என்ற பொருள் கொண்ட சாகரி என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்.
5. குதுப்மினாருக்கு அருகில் உள்ள இரும்புத் தூண் இவர் நிறுவியது ஆகும்

6. சீனப்பயணி பாஹியான் இவரது அவைக்கு வந்தார்.
7. பாஹியான் புத்தர் பிறந்து வாழ்ந்த இடத்தை தரிசித்து புத்தசமய சுவடிகளை சேகரித்து எடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே பாஹியான் இந்தியாவிற்கு பாடலிபுத்திரத்தில் 3 ஆண்டுகள் கல்வி பயின்றார்.
8. கங்கைச் சமவெளியை அவர் ‘ பிராமணர்களின் பூமி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
9. அக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி காரணமாகத்தான் குப்தர் காலம் பொற்காலம் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.

🩸 குமாரகுப்தர் (கி.பி 415-456)
1. இவர் ‘ மஹேந்திராதித்யா’ என்னும் பட்டத்தைச் சேர்த்துக் கொண்டார்.
2. நாளந்தா பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்
3. இவர் கார்த்திகேயக் கடவுளை வழிபட்டார்.
4. இவரின் இறுதிக்காலங்களில் துருக்கிய மங்கோலியப் பழங்குடிகளான ஹீணர்களால் நாட்டின் அமைதி பாதிக்கப்பட்டது. அவர்களுடனானப் போரின் போது குமாரகுப்தர் இறந்தார்.

🩸 ஸ்கந்த குப்தர் (கி.பி 456-468)
1. ஹீனர்கள் எனப்படும் முரட்டு இனத்தை வென்று விக்கிரமாதித்யன் என்ற பெயரை சூட்டிக்கொண்டார். இவரைப் பற்றிய தகவல்கள் கதாசரிசாகரம் என்ற நூலில் காணப்படுகிறது.
2. கடைசி அரசர் புத்தகுப்தா ஆவார்.
3. ஸ்கந்தகுப்தரைத் தொடர்ந்து அரியணை ஏறிய பல குப்த வம்சத்தினால் ஹீணர்களின் பலம் பெருகுவதைத் தடுக்க இயலவில்லை.

இலக்கியம்:
புகழ்மிக்க ‘நவரத்தினங்கள்’ இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்தனர். அவர்களில் முதன்மையானவர் காளிதாசர் . இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்பட்டார்
காளிதாசர் எழுதிய நாடகங்கள்:
1. மாளவிகாக்கினி மித்திரம் – சுங்க அரசர் வரலாறு
2. சாகுந்தலம் – நாடகம்
3. விக்ரம ஊர்வசி – நாடகம்

காளிதாசர் எழுதிய காப்பியங்கள்:
1. ரகுவம்சம் – ராமர் வரலாறு
2. குமாரசம்பவம் – முருகன் வரலாறு

காளிதாசர் எழுதிய பாடல்கள்:
1. மேக தூதம்
2. ரிது சம்சாரம் – பருவ கால மாற்றம்

 ஆரியபட்டர் ;-
1. ஆரியப்பைட்டியம் (அவை சூரிய மற்றும் சந்திரகிரகணம் ஏற்படுவதை விளக்குகிறது.) பூமி உருண்டை வடிவிலானது என்றும் அது தன்னைத்தானே சுற்றி வருகிறது என்றும் முதன் முதலில் அறிவித்தார்.

No comments: