விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், சுவையான பால்கோவாவும்தான். “கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்” என பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவுக்கு இப்படி ஓர் சிறப்பு கிடைக்க காரணம் இல்லாமல் இல்லை.
ஸ்ரீவில்லிபுத்தூரானது, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. காடு மற்றும் மலை அடிவார பகுதிகளில் மாடுகள் மேய்வதால், சுத்தமான, கெட்டியான பால் கிடைக்கிறது. அதன் மூலம் தயாராகும் பால்கோவாவுக்கு ருசியும் தனிதான். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா புகழ்பெற்று, தற்போது புவிசார் குறியீட்டையும் பெற்று, அந்த மண்ணுக்கு மணம் சேர்த்திருக்கிறது.
கடந்த 1940-ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால்பண்ணை மூலம் பால்கோவா தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளை நெருங்கும் நேரத்தில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும், இதன் மூலம் போலியாக விற்பனை செய்யப்படும் பால்கோவா தடுக்கப்படும் என கூட்டுறவு பால்பண்ணை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்தனர். நீண்ட ஆய்வுக்கு பின்னர் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் “ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பால்கோவா தொழிலானது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. தற்போது இந்த தொழிலில் ஏற்பட்ட பின்னடைவால் வாரத்தில் 3 நாள் மட்டுமே வேலை கிடைத்து வந்தது. தற்போது மத்திய அரசு வழங்கிய புவிசார் குறியீட்டால், இனி வாரம் முழுவதும் வேலை கிடைக்கும்” என தெரிவிக்கிறார்கள்.
இதுதொடர்பாக விற்பனையாளர்கள் கூறுகையில், “ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகளில் சுத்தமான பால்கோவா வாங்கிச் செல்லும் மக்கள், அதன் சுவையை அறிந்து பால்கோவாவை கூரியர் மூலம் அனுப்பவும் கேட்டுக்கொள்கிறார்கள். மத்திய அரசு பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் இனி பால்கோவா விற்பனை அதிகரிக்கும். புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருளாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மக்களிடம் சென்றடையும். இதன் மூலம் மேலும் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள்” என்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரானது, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. காடு மற்றும் மலை அடிவார பகுதிகளில் மாடுகள் மேய்வதால், சுத்தமான, கெட்டியான பால் கிடைக்கிறது. அதன் மூலம் தயாராகும் பால்கோவாவுக்கு ருசியும் தனிதான். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா புகழ்பெற்று, தற்போது புவிசார் குறியீட்டையும் பெற்று, அந்த மண்ணுக்கு மணம் சேர்த்திருக்கிறது.
கடந்த 1940-ம் ஆண்டு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால்பண்ணை மூலம் பால்கோவா தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளை நெருங்கும் நேரத்தில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும், இதன் மூலம் போலியாக விற்பனை செய்யப்படும் பால்கோவா தடுக்கப்படும் என கூட்டுறவு பால்பண்ணை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்தனர். நீண்ட ஆய்வுக்கு பின்னர் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் “ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பால்கோவா தொழிலானது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. தற்போது இந்த தொழிலில் ஏற்பட்ட பின்னடைவால் வாரத்தில் 3 நாள் மட்டுமே வேலை கிடைத்து வந்தது. தற்போது மத்திய அரசு வழங்கிய புவிசார் குறியீட்டால், இனி வாரம் முழுவதும் வேலை கிடைக்கும்” என தெரிவிக்கிறார்கள்.
இதுதொடர்பாக விற்பனையாளர்கள் கூறுகையில், “ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைகளில் சுத்தமான பால்கோவா வாங்கிச் செல்லும் மக்கள், அதன் சுவையை அறிந்து பால்கோவாவை கூரியர் மூலம் அனுப்பவும் கேட்டுக்கொள்கிறார்கள். மத்திய அரசு பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் இனி பால்கோவா விற்பனை அதிகரிக்கும். புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருளாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மக்களிடம் சென்றடையும். இதன் மூலம் மேலும் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள்” என்றனர்.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||