Thursday 11 July 2019

தேசிய மலர் எது? அரசு விளக்கம்

எந்த மலருக்கும் தேசிய மலர் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில் கூறியதாவது: சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2011-ம் ஆண்டில் புலிக்கு தேசிய விலங்கு அந்தஸ்து அளிக்கப் பட்டு அறிவிக்கை வெளியிடப் பட்டது. அதேபோல, தேசிய பறவையாக மயில் அங்கீகரிக்கப் பட்டு அறிவிக்கை வெளியானது. ஆனால், அந்த அமைச்சகத்தின் சார்பில் தேசிய மலர் என்ற அந்தஸ்து எந்த மலருக்கும் அளிக்கப்படவில்லை. அவ்வாறு எந்த அறிவிக்கையும் வெளியிடப் படவில்லை. இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் கூறினார்.

No comments: