தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (SAARC - South Asian Association for Regional Cooperation) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையே பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.
சார்க் அமைப்பின் தோற்றம் மற்றும் வளர்ச்சி:
தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனை 1940களில் இருந்தே தொடங்கிவிட்டது. 1947 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவுகள் தொடர்பான மாநாடு, 1950 இல் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற பாகியோ மாநாடு, 1954 இல் இலங்கையில் நடைபெற்ற கொழும்பு அதிகாரங்கள் மாநாடு போன்ற மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன. 1970களின் பிற்பகுதியில், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகள் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் கூட்டாகச் செயல்படுவது போன்ற யோசனைகளை இந்த நாடுகள் முன்வைத்தன.
1981 இல் இலங்கையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட ஆறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்று இதுகுறித்து விவாதித்தார்கள். ஆரம்பத்தில், இந்தக் கூட்டமைப்பில் சேர இந்தியாவும் பாகிஸ்தானும் தயக்கம் காட்டின. தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தனக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு இருந்தது. அதேபோல், இந்த நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளின் வர்த்தகம் பரவுவதன் மூலம் தனக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானிடம் இருந்தது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.
1983 இல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இறுதியாக, 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வங்கதேசத் தலைநகர் டாக்காவில் சார்க் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
சார்க் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள்:
சார்க் அமைப்பில் தற்போது எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன:
- ஆப்கானிஸ்தான்
- வங்கதேசம்
- பூட்டான்
- இந்தியா
- மாலத்தீவுகள்
- நேபாளம்
- பாகிஸ்தான்
- இலங்கை
சார்க் தொடங்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தான் உறுப்பினராக இல்லை. 2005 ஆம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற 13வது சார்க் மாநாட்டில், தெற்காசிய நாடுகளைத் தவிர பிற நாடுகளையும் பார்வையாளர்களாக ஏற்க முடிவு செய்யப்பட்டது. 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பின் எட்டாவது உறுப்பினர் நாடாகச் சேர்க்கப்பட்டது.
தற்போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், ஈரான், மொரீசியஸ், மியான்மர், தென் கொரியா ஆகிய ஒன்பது நாடுகள் சார்க் அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன.
சார்க் அமைப்பின் நோக்கம் மற்றும் தலைமையகம்:
சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் தெற்காசிய நாடுகளுக்கிடையே பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும். மேலும், இந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நல்லுறவைப் பேணுவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
சார்க் அமைப்பின் தலைமையகம் நேபாளத்தில் உள்ள காத்மண்டு நகரில் அமைந்துள்ளது. சார்க் அமைப்பின் தற்போதைய தலைவர் முகமது ஹாசன் மானிக் மற்றும் செயலாளர் அகமது சலீம் ஆவர்.
சார்க் மாநாடுகள் நடைபெற்ற நாடுகள் பற்றிய விவரங்கள்:
சார்க் மாநாடுகள் நடைபெற்ற நாள்/வருடம் நடைபெற்ற இடம் / நாடு
முதல் மாநாடு டிசம்பர் 7-8 /1985 தாகா / வங்காள தேசம்
இரண்டாம் மாநாடு நவம்பர் 16-17/1986 பெங்களூரு/இந்தியா
மூன்றாம் மாநாடு நவம்பர் 2-4/1987 காத்மண்டு/நேபாளம்
நான்காம் மாநாடு டிசம்பர் 29-31 /1988 இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்
ஐந்தாம் மாநாடு நவம்பர் 21-23/1990 மேல்(Male)/மாலத்தீவு
ஆறாம் மாநாடு டிசம்பர் 21 /1991 கொழும்பு/இலங்கை
ஏழாம் மாநாடு ஏப்ரல் 10-11/1993 தாகா / வங்காள தேசம்
எட்டாம் மாநாடு மே 2-4/1995 புது டெல்லி /இந்தியா
ஒன்பதாம் மாநாடு மே 12-14/1997 மேல்(Male)/மாலத்தீவு
பத்தாம் மாநாடு ஜூலை 29-31/1998 கொழும்பு/இலங்கை
பதினோராம் மாநாடு ஜனவரி 4-6/2002 காத்மண்டு/நேபாளம்
பனிரெண்டாம் மாநாடு ஜனவரி 2-6/2004 இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்
பதின்மூன்றாம் மாநாடு நவம்பர் 12-13/2005 தாகா / வங்காள தேசம்
பதினான்காம் மாநாடு ஏப்ரல் 3-4/2007 புது டெல்லி /இந்தியா
பதினைந்தாம் மாநாடு ஆகஸ்ட் 1-3/2008 கொழும்பு/இலங்கை
பதினாறாம் மாநாடு ஏப்ரல் 28-29/2010 மேல்(Male)/மாலத்தீவு
பதினேழாம் மாநாடு நவம்பர் 10-11/2011 அட்டு(Addu)/மாலத்தீவு
சார்க் இளைஞர் விருது (SAARC Youth Award) :
இவ்விருது தனி நபர்களுக்கு சுற்றுச்சூழல் , பேரழிவு பாதுகாப்பு
போன்ற கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வகையில் சார்க் குழு
மூலம் வழங்கப்படுகிறது.
விருது பெற்றவர்கள் :
1997-சிறந்த சமூக சேவைக்கான விருது – திரு.Md.சுகுர் சலெக்(வங்காள
தேசம்)[ Md.Sukur Salek]
1998-புதிய கண்டுபிடிப்புக்கான விருது -டாக்டர்.நஜ்முல் ஹஸ்னைன்
ஸ் ஷா (பாகிஸ்தான்)[Dr. Najmul Hasnain Shah]
2001-South Asian Diversityக்காக கிரியேடிவ் புகைப் பட விருது
பெற்றவர் -மிஷ்ஃபிகுல் ஆலம்(வங்காள தேசம்)[Mr. Mushfiqul Alam]
2002-சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது -டாக்டர் மசில் கான்
(பாகிஸ்தான்) [Dr. Masil Khan]
2003-மருத்துவ கண்டுபிடிப்பு -திரு ஹசன் ஷேர் (பாகிஸ்தான்) [Mr.
Hassan Sher]
2004-காசநோய் மற்றும் / அல்லது எச்.ஐ. வி / எய்ட்ஸ் பற்றிய
விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு-திரு அஜிஜ்
பிரசாத் பொவுட்யால்(நேபாளம்)[Ajij Prasad Poudyal]
2006-தெற்கு ஆசியாவில் சுற்றுலா ஊக்குவிப்புக்கான விருது -திரு
சையத் ஜாபர் அப்பாஸ் நக்வி(பாகிஸ்தான்)[ Syed Zafar Abbas Naqvi]
2008-தெற்கு ஆசியாவில் சுற்றுலா பாதுகாப்புக்கான விருது -திருமது
உஸ்வட்டா லியனகே தீபானி ஜெயந்தா(இலங்கை)[Uswatta Liyanage Deepani
Jayantha]
2009-இயற்கை பேரழிவுகளுக்கு பின்னர் மனிதாபிமான பணிகளில் சிறந்த
பங்களிப்பு – டாக்டர் ரவிகாந்த் சிங் (இந்தியா)[Ravikant Singh]
2010- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் பாதுகாப்புக்கான
சிறந்த பங்களிப்பு -திருமதி அனோகா ப்ரிம்ரோஸ்
அபெரத்னே(இலங்கை)[Anoka Primrose Abeyrathne]
தற்போதைய சார்க் பொதுச்செயலாளர் இலங்கையின் எசல வீரக்கோன் ஆவார். இவர் 2020 மார்ச் 1 ஆம் தேதி பதவியேற்றார். சார்க் அமைப்பின் தலைவராக ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்கப்படுவதில்லை, மாறாக, சார்க் உறுப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில், சுழற்சி முறையில் ஒரு நாடு தலைமையை ஏற்கும்.
0 Comments
||| www.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||