Ad Code

தமிழகம் (Tamil Nadu 100% literate by 2025-26) இந்த ஆண்டே 100% எழுத்தறிவு எட்டி 2027 இலக்கை முன்கூட்டியே அடைய உள்ளது.

தமிழகம் (Tamil Nadu 100% literate by 2025-26) இந்த ஆண்டே 100% எழுத்தறிவு எட்டி 2027 இலக்கை முன்கூட்டியே அடைய உள்ளது.

2027-க்குள் இந்தியா முழுவதும் 100% எழுத்தறிவு என்ற மத்திய அரசின் இலக்கை, தமிழ்நாடு இந்த ஆண்டே எட்ட உள்ளது. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 

முழுமையான எழுத்தறிவு நோக்கிய பயணம்

பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாத நிலை, மாணவர்களுக்குக் கிடைக்கப் பெறும் தரமான கல்வி ஆகியவை எழுத்தறிவு மேம்பாட்டிற்கான அடிப்படைகளை உருவாக்குகின்றன. இது தவிர, 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் எழுத்தறிவுத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலங்களில் எழுத்தறிவு பெறாதவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு எழுத்தறிவு பெறச் செய்யப்படுகின்றனர். கோவா, லடாக், மிசோரம் போன்ற சிறிய மாநிலங்கள் ஏற்கனவே 100% எழுத்தறிவு பெற்றுவிட்டாலும், பெரிய மாநிலங்களில் இந்தச் சாதனையை எட்டியது தமிழ்நாடு மட்டுமே. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இலக்கை தமிழ்நாடு பூர்த்தி செய்ய இருக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவியுடன், மாநிலம் முழுவதும் 30,190 மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலக்கை நோக்கிய தமிழகத்தின் செயல்பாடுகள்

100% எழுத்தறிவு என்பதில், மத்திய அரசு 5% தளர்வு அளித்துள்ளது. மிக வயதானவர்கள், தன்னிச்சையாகச் செயல்பட முடியாதவர்கள் போன்றோர்க்கு எழுத்தறிவு சாத்தியமில்லை என்பதால், 95% எழுத்தறிவு பெற்ற மாநிலத்தை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாகவே கருதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை தமிழ்நாடு ஏற்கனவே கடந்துவிட்ட போதிலும், முழுமையான 100% இலக்கை எட்டுவதற்கான பயணத்தில் உள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள் ஏற்கனவே 100% எழுத்தறிவை எட்டிவிட்டன.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் நாகராஜமுருகன் இது குறித்து தெரிவிக்கையில், மீதமுள்ள மாவட்டங்களிலும் வருகிற நவம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ள எழுத்தறிவுத் தேர்வு மூலம் 100% இலக்கு பூர்த்தியாகி விடும் என்றார். கடந்த ஜூன் 15 அன்று நடத்தப்பட்ட எழுத்தறிவுத் தேர்வில், 50 வயதுக்கு மேற்பட்ட 1,09,738 ஆண்களும், 4,28,131 பெண்களும் என மொத்தம் 5,37,869 பேர் கலந்துகொண்டு சான்றிதழ்கள் பெற்று எழுத்தறிவு பெற்றவர்களாக மாறியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 20,56,719 பேர் எழுத்தறிவுச் சான்றிதழ் பெற்றுள்ளனர். முதலமைச்சரின் சீரிய முயற்சியால் இது சாத்தியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாதனை சிகரம் நோக்கி

நவம்பர் மாதத்தில் 10 லட்சம் பேருக்கு எழுத்தறிவுத் தேர்வை தமிழ்நாடு அரசின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது. 2027-க்குள் அனைத்து மாநிலங்களிலும் 100% எழுத்தறிவை எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்த நிலையில், தமிழ்நாடு அதற்கு முன்னதாகவே இந்தச் சாதனையை எட்டி, ஒரு முன்மாதிரியாகத் திகழ உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code