Monday 10 December 2018

சாஸ்திரங்கள்

சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் 14 ஆகும்.

திருவுந்தியார் சாஸ்திரம் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனாரால் பாடப்பட்டது.

திருகளிற்றுப்படியார் சாஸ்த்திரம் திருகடவூர் உய்ய வந்த தேவநாயனாரால் பாடப்பட்டது.

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவ நாயனார்.

சிவஞான சித்தியார் - அருணந்தி சிவாசாரியார்

இருபா இருபது - அருணந்தி சிவாசாரியார்

உண்மை விளக்கம் - மனவாசம் கடந்தார்

சிவப்பிரகாசம், திருவட்பயன், வினா வெண்பா, போற்றி பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற 8 சாஸ்திர நூல்கள் உமாபதி சிவம் எழுதியது. இவரது 8 நூல்களும் அஷ்டசாஸ்திரங்கள் எனப்படும்.

மெய்கண்டாின் சிவஞானபோதம் பதி,பசு, பாசம் எனும் சைவ சித்தாந்த கொள்கையை விளக்குகிறது.

சிவஞான போதம் 12 சூத்திரங்கள் கொண்டது.

சிவஞான போதத்துக்கு சிவஞான முனிவர் எழுதிய உரை திராவிட மகாபாடியம் எனப்படுகிறது.

சிவஞானசித்தியார் சுபக்கம், பரபக்கம் என இரு பிரிவுகள் கொண்டது.

இருபா இருபது உரையாடல் முறையில் சைவ சித்தாந்த கருத்துகளை விளக்குகிறது.

வினாவிடை வடிவில் சைவ சித்தாந்த கருத்துகளை விளக்குவது வினா வெண்பா.

திருவருட்பயன் குறள் வடிவில் அமைந்த நூறு பாக்கள் கொண்டது.

ஏறாத தில்லைக்கொடியை ஏற்றி வைக்க பாடப்பட்டது கொடிக்கவி.

No comments: