Monday, 22 October 2018

காப்பியங்கள்

சோழர்கள் ஆட்சிக்காலம் காப்பிய காலம் என போற்றப்படுகிறது.

ஐம்பெருங்காப்பியங்களாவன: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

நாக குமார காவியம், யசோதர காவியம், உதயண குமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகியவை ஐஞ்சிறுகாப்பியங்கள்.

திருத்தக்க தேவர் எழுதிய விருத்தக் காப்பியம், சீவகசிந்தாமணி.

கம்பர் எழுதிய விருத்தக் காப்பியம் கம்பராமாயணம்.

கம்பர் தான் எழுதிய ராமாயணத்திற்கு இட்டபெயர் ராமாவதாரம்.

கம்பராமாயணம் 6 காண்டங்களைக் கொண்டது.

கம்பரின் பிறநூல்கள், சடகோபரந்தாதி, ஏர் எழுபது, திருக்கை வழக்கம்.

புகழேந்திப்புலவரின் வெண்பாக் காப்பியம் நளவெண்பா.

குண்டலகேசியை எழுதியவர் நாதகுத்தனார்.

திருத்தொண்டர் புராணம் எழுதியவர் சேக்கிழார்.

திருத்தொண்டர் புராணத்தி்ன் வேறுபெயர் பெரிய புராணம்.

பெரிய புராணத்தின் கதைத் தலைவர் சுந்தரர்.

63 நாயன்மார்களின் வரலாறு பெரிய புராணம்.

No comments: