Monday 18 June 2018

சீக்கியர்கள் - சில தகவல்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
சீக்கிய மதம் பற்றிய முக்கிய குறிப்புகள் சில...

* சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குரு நானக், இவரே முதல் குரு.

* குருநானக் பிறந்த ஊர் பஞ்சாபில் உள்ள தால்வண்டி.

* குருநானக், சீக்கியர்கள் ஒன்றாக உணவருந்தும் ‘லங்கர்’ முறையை உருவாக்கினார்.

* கருமுகி எழுத்து முறையை உருவாக்கியவர் 2-ம் சீக்கிய குரு அங்கத்.

* சீக்கியர்களின் உலகப் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலுள்ள பொற்கோவில்.

* அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டுவதற்கான நிலம் அக்பரால், 4-வது சீக்கிய குருவான ராம்தாஸுக்கு கொடுக்கப்பட்டது.

* பொற்கோவிலை கட்டியவர் 5-வது சீக்கிய குருவான அர்ஜூன் சிங்.

* சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்தை தொகுத்தவர் 5-ம் குருவான அர்ஜூன் சிங்.

* கல்சா எனும் ராணுவ அமைப்பை ஏற்படுத்தியவர், 10-வது குருவான கோவிந்த் சிங்.

* குருகோவிந்த சிங் ஆதிகிரந்தத்தை, ‘குரு கிரந்த சாஹிப்’ என்று பெயர் மாற்றி அதுவே ‘சீக்கியர்களின் நிரந்தர குரு’ என்று அறிவித்தார்.

* நீளமான முடி (கேஷ்), மரச்சீப்பு (காங்கா), இரும்புக் காப்பு (காரா), நீண்ட கால் சட்டை (காச்சா), குறுவாள் (கிர்பான்) ஆகிய ஐந்தையும் ஒவ்வொரு சீக்கியரும் கொண்டிருப்பார்கள்.

No comments: