Ad Code

மே 31-ந் தேதி முதல் ஜூன் 6-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு.

ஐதராபாத்தில் நடந்த உலக அழகிப்போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஓபல் சுச்சாதா சுவாங் அழகி பட்டத்தை வென்றார்.

கடந்த வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயன்பெறும் வகையிலான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன. மே 31-ந் தேதி முதல் ஜூன் 6-ந் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் சிறு தொகுப்பு இது...

உலகம்

* ஐதராபாத்தில் நடந்த உலக அழகிப்போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஓபல் சுச்சாதா சுவாங் அழகி பட்டத்தை வென்றார். (மே 31)

* ஐ.நா. சபை 193 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ளது. இந்த அமைப்பின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 167 வாக்குகளை பெற்று ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் அமோக வெற்றி பெற்றார். (ஜூன் 3)

* தென் கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சித் தலைவர் லீ ஜே-மியூங் வெற்றி பெற்றார். (ஜூன் 3)

* அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். (ஜூன் 4)

* ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் எதிர்்பார்த்ததை விட வேகமாகக் குறைந்து வருகிறது. 2024-ம் ஆண்டில் ஜப்பானில் 6,86,061 குழந்தைகள் பிறந்தன. இது முந்தைய ஆண்டை விட 5.7 சதவீதம் குறைவு. தொடா்ச்சியாக 16-வது ஆண்டாக பிறப்பு விகிதம் சரிவைக் கண்டுள்ளது. குறையும் மக்கள்தொகையை பிரதிபலிக்கும் ஜப்பானின் இந்த தரவுகள், ‘மவுன அவசரநிலை’ என்று பிரதமா் ஷிகேரு இஷிபா எச்சரித்துள்ளாா். (ஜூன் 5)

இந்தியா

* உலக அளவில் அதிக அளவிலான பயணிகளை கையாளும் விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. விமான நிலைய உட்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விமான போக்குவரத்து துறையின் பங்கு 1.5 சதவீதமாக உள்ளது. (ஜூன் 2)

* உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம், மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் 29 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் பசுமைப் போர்வையை விரிவுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாகும். மறு காடு வளர்ப்பு மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதன் மூலம் ஆரவல்லியில் பல்லுயிர்ப் பெருக்கம் மேம்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. (ஜூன் 5)

* காஷ்மீர் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ.1,500 கோடியில் கட்டப்பட்ட உலகின் உயரமான ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். (ஜூன் 6)

* வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் `ரெப்போ ரேட்’ என அழைக்கப்படுகிறது. ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ரெப்போ ரேட் 5.50 சதவீதமாக குறைந்துள்ளது. (ஜூன் 6)

தமிழகம்

* கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் சந்தன்கவுடர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். தற்போது புதிய நீதிபதியுடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. (ஜூன் 2)

* 2025-ம் ஆண்டுக்கான மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை தாயம்மாள் அறவாணனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். (ஜூன் 3)

பொருளாதாரம்

* 2024-25-ம் நிதியாண்டில் இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. (மே 31)

* கடந்த 2024-25-ம் நிதியாண்டில் சுமாா் 1,500 கோடி டாலா் (சுமாா் ரூ.1.28 லட்சம் கோடி) முதலீட்டுடன் கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டாளராக சிங்கப்பூா் தொடா்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு கிடைத்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூா் மட்டும் சுமாா் 19 சதவீதம் பங்கு கொண்டுள்ளது. (ஜூன் 1)

* அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த மே மாதத்தில் 1.4 சதவீதம் குறைந்துள்ளது. (ஜூன் 3)

* இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் பெட்ரோல் விற்பனை 37.6 லட்சம் டன்னாக உள்ளது. இது 2024-ம் ஆண்டு மே மாதத்தில் 34.6 லட்சம் டன்னாக இருந்த விற்பனையுடன் ஒப்பிடுகையில் 8.77 சதவீதம் அதிகம். முந்தைய 2023-ம் ஆண்டு மே மாதத்தில் 33.5 லட்சம் டன்னாக இருந்த விற்பனையுடன் ஒப்பிடுகையில் 12.45 சதவீதம் உயா்வு ஆகும். (ஜூன் 4)

அறிவியல்

* மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இங்கு சோதிக்கப்பட்ட ராக்கெட் என்ஜின்கள்  ஹரிகோட்டா ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்படுகின்றன. (மே 31)

* நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ். இது சமீபத்தில் அறிமுகம் செய்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் `டி கிராசே’. 4700 டன் முதல் 5200 டன் வரை எடையுள்ள இந்த நீர்மூழ்கி கப்பல் 324 அடி நீளம் கொண்டது. எதிரி படையால் கண்டுபிடிக்க முடியாதபடி மிக நவீன தொழில்நுட்பத்துடன் பிரான்ஸ் இதை அறிமுகம் செய்துள்ளது. (ஜூன் 6)

விளையாட்டு

* ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தனதாக்கியது. (மே 31)

* ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற கோல் கணக்கில் இன்டர்மிலனை துவம்சம் செய்து பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. 70 ஆண்டுகால சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் பி.எஸ்.ஜி. அணி பட்டத்தை வென்றது இதுவே முதல் முறையாகும். (ஜூன் 1)

* நார்வே செஸ் போட்டியின் 6-வது சுற்றில் நடப்பு உலக சாம்பியன் டி.குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார். (ஜூன் 2)

* தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றது. (ஜூன் 2)

* ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணி பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஐ.பி.எல் தொடரில் அதிக ரன் குவித்த வீரராக சாய் சுதர்சனும், அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக பிரசித் கிருஷ்ணாவும் திகழ்ந்தனர். (ஜூன் 3)

Post a Comment

0 Comments

Ad Code