Saturday 22 December 2018

நடப்பு நிகழ்வுகள் 2018

நோபல் பரிசானது இணையற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், துறை வல்லுநர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில் நுட்பங்கள், கருவிகளை கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்தில் பல அறிய தொண்டு ஆற்றியவர்களுக்கும் வழங்கப்படும் மிக உயரிய பரிசாக கருதப்படுகிறது. நோபல் பரிசை பெற்றுக்கொள்ள மறுத்தவர்களும் இந்த வரலாற்றில் உண்டு.

நோபல் பரிசு ஆனது 1895 ஆம் ஆண்டு முதல் ஆல்பர்ட் நோபலன் என்பவர் நினைவாக வழங்கப்படுகிறது. இவரது காலம் அக்டோபர் 21, 1833-ல் சுவிடனில் பிரிந்தார். இவரது வாழ்நாளில் வேதியலராகவும், பொறியாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும் விளங்கினார். இவர் 1895 ஆம் ஆண்டு  டிசம்பர் 10- இல் காலமானார். 

அனைவரும் வியக்கும் வகையில் இவர் தனது இறுதி முறையில் ‘மனித இனத்திற்க்கு பெரும் பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் பரிசு வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10, நோபலின் நினைவு நாளில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னிலையில் வழங்கப்படுகிறது.

முதல் பரிசு 1901 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நோபல் பரிசு திரும்ப பெறத்தக்கது அல்ல. நோபல் பரிசு ஆகியவற்றிற்க்கு இவரது உயில் படி வழங்கப்படுகிறது.

பொருளியலுக்கான நினைவு பரிசு 1968ல் சுவீடன் நடுவன் வங்கியினால் அதன் 300வது வருடத்தை கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்டது.

2018ல் இயற்பியல், வேதியல், மருத்துவம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல்:

வேதியலுக்கான நோபல் பரிசு:

மூன்று நபர் வேதியளுக்காக பெறுகின்றனர்.

பிரான்சிஸ் H. அர்னால்ட்(அமெரிக்கா):
கடந்த 50 வருடங்களில் ஒரு பெண் வேதியல் துறையில் பெறுகிறார். என்சைம்களின் பரிமாணம் பற்றிய ஆய்விற்க்காக பெறுகிறார்.

சர் கிரிகோரி பி.வின்டர்(இங்கிலாந்து):
இவர் வைரஸ் பற்றிய ஆய்விற்க்காக பெறுகிறார். பேஜ் வைரஸ்களை பயன்படுத்தி புதிய மருந்துகளை கண்டுபிடித்துள்ளார்.

ஜார்ஜ் பி.ஸ்மித்(அமெரிக்கா):
இவரும் பேஜ் வைரஸ்களை பான்படுத்தி மருந்து தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார். நோயை உண்டாக்கும் பாக்டீரியாவிற்க்கு பாதிப்பை ஏற்படுத்தவல்லது இந்த பேஜ் வைரஸ்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்:

மூன்று நபர் இயற்பியலுக்காக பெறுகின்றனர்.

லேசர் துறையில் சாதித்ததற்க்காக மூவர் இணைந்த குழுவிற்க்கு வழங்கப்பட்ட உள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் மிக துல்லியமாக கண் சிகிச்சை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

ஆர்தர் ஆக்ஷ்கின்(அமெரிக்கா)

ஜெரார்டு முரோ(பிரான்ஸ்):
இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறும் மூன்றாவது பெண். இவரது வயது 74.

டோனா ஸ்டிரிக்லேண்டு(கனடா).

அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்கள்:

அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.:

டென்னிஸ் முக்வேஜா(காங்கோ):
இவர் காங்கோ நாட்டைச் சேர்ந்த மருத்துவர். போரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தவர். மேலும் இவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஒரு நாளுக்கு 18 அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடியா முராத்(ஈராக்):
இவர் ஈராக்கில் யாக்ஷிதி சமுதாயத்தில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுத்துள்ளார். இவர்களுக்கு நடைபெறும் அநீதிகளை ஐநா வரை கொண்டு சென்றார். இப்பெண்களுக்காக ஐக்கிய நாடுகளின் சபையில் இவர் ஆற்றிய உரை அனைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

மருத்துவத்திற்க்கான நோபல் பரிசு பெறுபவர்கள்:

புற்றுநோய் சிகிச்சையில் ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’(நோய் எதிர்ப்பு சக்தி தடை உடைப்பு சக்தி) என்ற கண்டுபிடிப்பிற்க்காக மருத்துவத் துறையில் இருவருக்கு வழங்கப்பட உள்ளது.

ஜேம்ஸ் பி.அலீசன்(அமெரிக்கா).

தசுகோ ஹோன்ஜோ(ஜப்பான்).

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் புரோட்டின் தடையாக செயல்படுவது குறித்து கண்டுபிடித்தார். இந்த தடையை உடைத்து விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்று நோய் கட்டிகளின் மீது எதிர் தாக்குதல் நடத்தும் என்பதை கண்டுபிடித்தனர். இது புற்றுநோய் சிகிச்சையில் இதுவரை இல்லாத புதிய அணுகுமுறையாகும்.

பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசு பெறுபவர்கள்:

பொருளாதாரத்திற்க்காக நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்லியம் நார்தாஸ்(அமெரிக்கா):
மக்கள் தொகையும் அதனால் ஏற்ப்படும் பொருளாதார மற்றத்தையும் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளர்.

பால் எம் ரோமர்(அமெரிக்கா):
நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்திற்க்கு உதவும் கண்டுபிடிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளார்.

பொருளாதாரத்திற்க்கு உதவும் தொழில்நுட்பங்களை உருபவாக்கியதற்க்காகவும், பருவ நிலை மாற்றம் தொடர்பான ஆய்விற்க்காக்வும் வழங்கப்படுகிறது.

No comments: