Ad Code

முகலாய ஆட்சியும் ஐரோப்பியர் வருகையும்

பொ.ஆ. 15-ம் நூற்றாண்டில் சீக்கிய மதகுரு குருநானக் பிறந்தது முதல் 18-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் மராத்தியர்களின் வீழ்ச்சிவரை இந்திய அளவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த காலவரிசை:

பொது ஆண்டு (பொ.ஆ.-கி.பி.)

1451-1489: டெல்லி சுல்தான் ஆட்சியை வீழ்த்திய பஹ்லுல் கான் லோடி, லோடி வம்சத்தை நிறுவினார்

1469 - 1539: முதல் சீக்கிய குரு, குருநானக்கின் காலம்

1490: குருநானக் சீக்கிய மதத்தை நிறுவினார்

1498: ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு வாஸ்கோடகாமா புதிய கடல்வழியைக் கண்டார்

1503: கொச்சி ஆட்சியை போர்த்துகீசியர்கள் கைப்பற்றினார்கள். நவீனகால இந்தியாவில் ஐரோப்பிய நாடு ஒன்று பெற்ற முதல் வெற்றி இது

1509: டையுவில் நடைபெற்ற போர், ஆசியக் கடற்கரை சார்ந்த நகரங்களில் ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தைத் தொடங்கிவைத்தது

1526: டெல்லி சுல்தான்களில் ஒருவரான இப்ராஹிம் லோடியின் ஆட்சிமுறையால் கோபமடைந்த உள்ளூர் செல்வந்தர்கள், டெல்லி - ஆக்ராவுக்குப் படையெடுத்து வருமாறு ஆப்கானிய அரசர் பாபரை அழைத்தார்கள். முதலாம் பானிபட் போரில் லோடியை வீழ்த்தி முகலாயப் பேரரசை பாபர் நிறுவினார்

1527: மேவார் பகுதியை பாபர் வென்றார்

1530: 'பாபர்நாமா' என்ற புத்தகத்தை பாபர் எழுதினார். அவர் இறந்த பிறகு, அவருடைய மகன் ஹுமாயுன் ஆட்சிப் பொறுப்பேற்றார்

1540: கன்னௌஜில் நடைபெற்ற போரில் ஆப்கனைச் சேர்ந்த ஷெர் ஷா சுர்ரால் (சூரி) ஹுமாயுன் வீழ்த்தப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேறி இருந்தார்

1555: ஷெர்ஷா சூரியை வீழ்த்தி ஹுமாயுன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். அடுத்த ஆண்டே அவர் இறக்க, அவருடைய மகன் அக்பர் அரசர் ஆனார்

1556-1605: முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக் காலம்

1556: இரண்டாம் பானிபட் போரில், ஹேமு என்ற ஹேமசந்திர விக்கிரமாதித்யனை அக்பர் வீழ்த்தினார்

1562: ஜோதாபாயை அக்பர் மணந்தார்

1564: ஜிஸ்யா (இஸ்லாத்தைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றுவதற்குச் செலுத்த வேண்டிய வரி) வரியை அக்பர் நீக்கினார்

1571: ஃபதேபூர் சிக்ரி நகரை அக்பர் கட்டத் தொடங்கினார்

1572: குஜராத், வங்கம் (1574), காஷ்மீர் (1586) பகுதிகளை அக்பர் வென்றார்

1600: பிரிட்டனில் கிழக்கு இந்திய கம்பெனி நிறுவப்பட்டது

1605-1627: ஜஹாங்கிர், நூர்ஜஹானின் ஆட்சிக் காலம்

1612: இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடங்குவதற்கான அனுமதியை ஆங்கிலேயத் தூதர் சர் தாமஸ் ரோ பெற்றதையடுத்து, கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வர்த்தகத்தைத் தொடங்கியது

1628-1657: ஷாஜஹானின் ஆட்சிக் காலம்

1648: ஷாஜஹானாபாத் (பழைய டெல்லி) நகர் கட்டத் தொடங்கப்பட்டது

1658: தாஜ்மகால், ஜும்மா மசூதி, செங்கோட்டை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஷாஜஹான் நிறைவுசெய்தார்

1658 - 1707: ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலம்

1630 - 1680: மராத்திய மன்னர் சிவாஜியின் ஆட்சிக் காலம்

1674: ஔரங்கசீப்பின் படைகளை வீழ்த்திய சத்ரபதி சிவாஜி மராத்திய ஆட்சியை நிறுவினார்

1675: ஔரங்கசீப்பின் ஆணைக்கு இணங்க சீக்கியர்களின் ஒன்பதாம் குருவான குரு தேக் பஹதுர் தூக்கிலிடப்பட்டார்

1679: ஜிஸ்யா வரி மீண்டும் கொண்டுவரப்பட்டது

1681: தக்காணப் பகுதி மீது ஔரங்கசீப் படையெடுத்தார்

1699: சீக்கியர்களின் 10-ம் மத குருவான குரு கோவிந்த் சிங், 'தள் கால்சா' என்ற ராணுவப் படையை நிறுவினார்

1707 - 1712: ஔரங்கசீப் இறந்த பிறகு, முகலாய ஆட்சி ஆட்டம் கண்டது. அவருடைய மகன் முதலாம் பகதூர் ஷா ஆட்சிக்கு வந்தார்

1708: மகாராஷ்டிரத்தில் குரு கோவிந்த் சிங்கைக் கொல்வதற்கு முயற்சி நடைபெற்றது

1719: ஐந்தாம் மராத்தியப் பேரரசர் சாஹு, முதலாம் பாஜிராவை பேஷ்வாவாக (பிரதமர் பதவிக்கு இணையானது) நியமித்தார்

1735: பேஷ்வா முதலாம் பாஜிராவ் ராஜபுதனத்தை (இன்றைய ராஜஸ்தான்) இணைத்துக்கொண்டார்

1737: டெல்லியையும் முதலாம் பாஜிராவ் கைப்பற்றினார். முகலாயப் பேரரசர் கொல்லப்படாமல், அடையாளத் தலைவராக்கப்பட்டார்

1739: பாரசீகத்தை (இன்றைய ஈரான்) சேர்ந்த நாதிர் ஷா டெல்லியைக் கொள்ளையடித்தார்

1740: பங்கேற்ற அனைத்துப் போர்களிலும் வெற்றிபெற்ற பெருமையைக் கொண்ட முதலாம் பாஜிராவ் இறந்தார். பாலாஜி பாஜிராவ் ஆட்சிக்கு வந்தார்

1760: ஹைதராபாத் நிஸாமை மராத்தியர்கள் வீழ்த்தினார்கள். வட இந்தியாவின் பெரும்பகுதியை மராத்தியர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்

1761: மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களை ஆப்கனைச் சேர்ந்த அகமதுஷா அப்தலி வீழ்த்தினார். மராத்தியர்களின் ஆட்சி வீழ்ந்தது

1766: அகமதுஷா அப்தலியைச் சீக்கியர்கள் வீழ்த்தினார்கள். பஞ்சாப்பில் சீக்கிய ஆட்சி நிறுவப்பட்டது

Post a Comment

0 Comments

Ad Code