Pages

Tuesday, 25 September 2018

சைபர் பல்கலைக்கழகம் தொடக்கம்

மகாராஷ்ட்ர இணையத் தாக்குதல்களைக் கையாள்வதற்காகப் புதிய சைபர் பல்கலைக்கழகம் தொடங்கப்படவிருப்பதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகம் இணையத் தாக்குதல்கள், குற்றங்கள் போன்றவற்றைக் கையாள்வதற்காக முதற்கட்டமாக 3,000 பேருக்குப் பயிற்சி அளிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான முன்மொழிவு வரும் அக்டோபர் முதல்வாரத்தில் மாநில அமைச்சரவை முன் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக முதற்கட்டமாக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

No comments: