தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்துவதாகத் தமிழக அரசு செப்டம்பர் 17 அன்று அறிவித்தது. இதன்மூலம், ஏழு சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது ஒன்பது சதவீதமாகியுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, 2018, ஜூலை 1 முதல் கணக்கிடப்படும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்த அகவிலைப்படி உயர்வால், 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 1,157 கோடி கூடுதலாகச் செலவாகும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.news.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||