பொது அறிவு களஞ்சியம் - G.K

தேசிய அடையாளங்கள் : 

தேசிய சின்னம் 
  • நம் தேசியச் சின்னம் அசோகரின் சாரநாத் சிம்மத் தூணிலிருந்து பெறப்பட்டது. 
  • சாரநாத் சிம்மத் தூணில் ஒன்றுக்கொன்று முதுகுப்புறமாக அமைந்த நான்கு சிங்கங்கள் ஒரு பீடத்தில் அமைந்துள்ளன. 
  • சிம்மத் தூணின் பீடத்தில் ஒரு யானை, ஒரு எருது, ஒரு குதிரை ஆகியவை அமைந்தள்ளன. 
  • பீடத்திலுள்ள மிருகங்களுக்கு இடையே 24 ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரங்கள் உள்ளன. 
  • சிம்மத் தூண் பீடம், ஒரு தாமரை மேல் அமைந்துள்ளது. 
  • 1950 ஜனவரி 26-ல் நம் தேசியச் சின்னம் அங்கீகரிக்கப்பட்டது. 
  • நமது தேசிய சின்னத்தில் மூன்று சிங்கங்கள் மட்டுமே பார்வைக்குத் தெரிகின்றன. 
  • சிங்க பீடத்தில் எருது வலது பக்கத்திலும், ஓடும் குதிரை இடது பக்கத்திலும் இருக்க, நடுவே தர்ம சக்கரம் உள்ளது. 
  • சிங்க பீடத்தின் வலது, இடது நுனிகளில் தர்ம சக்கரங்களின் சிறு பகுதி தென்படுகிறது. தேசியச் சின்னத்தில் முண்டக உபநிஷதத்திலிருந்து எடுக்கப்பட்ட சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்ற வாசகம் தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. 
  • சாரநாத் சிம்மத் தூணில் இருக்கும் யானை, தாமரை நம் தேசியச் சின்னத்தில் இடம்பெறவில்லை. 
  • தேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுத் தாள்களில் (Lettet Head) நீல வண்ணத்தில் இம்பெறும். 
  • அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுத் தாள்களில் தேசியச் சின்னம் சிவப்பு வண்ணத்தில் இடம்பெறும். மக்களவை உறுப்பினர்கள் பச்சை நிறத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு நிறத்திலும் தேசியச் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும். 
  • வெளிநாட்டு அரசுகளுடனான கடிதத் தொடர்புக்கு நீல நிறத்தில் தேசியச் சின்னம் அச்சிடப்பட்ட எழுது தாள்களையே பயன்படுத்த வேண்டும். 
தேசியக் கொடி 

  • இந்திய தேசியக் கொடி செவ்வக வடிவில் மூவண்ணத்தில் அமைந்துள்ளது.
  • தேசியக் கொடியின் நீள, அகலம் 3:2 என்ற விகிதத்தில் இருக்கவேண்டும்.
  • தேசியக் கொடியில் உள்ள காவி நிறம், தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
  • தேசியக் கொடியின் வெண்மை நிறம் உண்மையையும் அமைதியையும் குறிக்கிறது. 
  • தேசியக் கொடியின் பச்சை நிறம் நம்பிக்கையையும் வீரத்தையும் குறிக்கிறது.
  • தேசியக் கொடியின் நடுவில் உள்ள தர்ம சக்கரம் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
  • தர்ம சக்கரத்தின் வடிவம் சாரநாத் தூணின் பீடத்தில் உள்ளது போன்ற வடிவம் கொண்டுள்ளது.
  • நம் தேசியக் கொடி 1947, ஜூலை 22-ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 2002-ல் கொண்டுவரப்பட்ட இந்திய தேசியக் கொடி சட்டத்தின்படி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொடியேற்ற தடை ஏதுமில்லை.
  • தேசியக் கொடியின் மரியாதை, சின்னங்கள், மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டுத் தடுப்புச் சட்டம்(1950) தேசிய கௌரவ அவமரியாதை தடுப்பு சட்டம்(1971) ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகிறது.
  • தேசியக் கொடி இந்திய பெண்கள் சார்பாக 1947, ஆகஸ்ட் 14-ம் தேதி நாட்டுக்கு வழங்கப்பட்டது.
தேசிய கீதம் :
  • ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழில் இயற்றிய ஜன கண மன என்ற பாடலின் இந்தி வடிவம் நம் தேசிய கீதமாக 1950, ஜனவரி 24-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • தேசிய கீதம் தாகூர் நடத்திய தத்வபோதினி பத்ரிகா என்ற பத்திரிக்கையில், பாரத் விதாதா என்ற தலைப்பில் 1912-ல் வெளியானது.
  • ஜன கண மன பாடல் முதன்முதலாக 1911, டிசம்பர் 27-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது.
  • ஐந்து பத்திகள் (13 வரிகள்) கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிக்குள் பாடவேண்டும்.
  • முதல், கடைசி பத்திகளை மட்டும் கொண்ட தேசிய கீதத்தின் குறுகிய வடிவத்தை பாடுவதற்கான நேரம் 20 நொடிகள்.
  • நம் தேசிய கீதத்தில் இரு நதிகள், இரு மலைகள், ஏழு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
  • தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் திராவிட என்ற ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன.
  • உத்கல் என்ற சொல் ஒரிசாவைக் குறிக்கிறது.
  • தேசிய கீதத்தில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் பஞ்சாபின் ஒரு பகுதியும் சிந்து மாநிலம் முழுமையும் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளன.
  • நம் தேசிய கீதத்துக்கு இசை அமைத்தவர் ஹஃபீஸ் ஜலந்தாரி.
  • ரவீந்திரநாத் தாகூரே Morning Song of India என்ற தலைப்பில் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தேசியப் பாடல்
  • பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் என்ற பாடலே நம் தேசியப் பாடல்.
  • தேசிய கீதத்தைப் போன்றே தேசிய பாடலும் மரியாதைக்கு உரியது.
  • பங்கிம் சந்திரர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.
  • வந்தே மாதரம் பாடல் முதன் முதலாக 1896-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூரால் பாடப்பட்டது.
  • மகாகவி பாரதியார் வந்தே மாதரம் பாடலை இரண்டு விதங்களில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
  • அரவிந்த கோஷ் வந்தே மாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தேசியக் காலண்டர் :
  • நமது தேசியக் காலண்டரின் பெயர் சக காலண்டர்.
  • கனிஷ்கர் பதவியேற்ற கி.பி.78-ல் சக ஆண்டு தொடங்குகிறது.
  • சக காலண்டர் 1957 மார்ச் முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது.
  • தேசிய நாட்காட்டி சக ஆண்டு 1879-ல் சைத்ரா முதல் நாளில் (கி.பி.1957, மார்ச் 22) தொடங்கியது.
  • 'சைத்ரா' என்பது சக ஆண்டின் முதல் மாதம்.
  • 'பல்குனா' சக ஆண்டின் கடைசி மாதம்.
  • சாதாரண ஆண்டில் சக ஆண்டில் முதல் தேதி மார்ச் 22.
  • லீப் வருடத்தில் சக ஆண்டின் முதல் தேதி மார்ச் 21.
  • மத்திய கெஸட்டுகள், மத்திய அரசு அறிவிப்புகள், ஆகாஷவாணி ஒலிபரப்பு ஆகியவற்றில் சக காலண்டர் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய விலங்கு :
  • இந்தியாவின் தேசிய விலங்கு - ராயல் பெங்கால் புலி.
  • வலிமையின் அடையாளமாகபங புலி விளங்குகிறது.
  • 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது - சிங்கம்.
  • Project Tiger  எனும் திட்டம் 1973 ஏப்ரலில் புலிகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்டது.
  • இந்தியாவில் வடமேற்குப் பகுதி தவிர மற்ற காடுகளில் பெங்கால் புலி காணப்படுகிறது.
பிற தேசிய அடையாளங்கள் :
  • தேசியப் பறவை - மயில் (பாவோ கிரிஸ்டேட்டஸ்)
  • தேசிய மலர் - தாமரை (நெலும்போ நூஸிபெரா)
  • தேசியக் கனி - மாங்கனி (மாங்கிபெரா இண்டிகா)
  • தேசிய மொழி - இந்தி
  • தேசிய விளையாட்டு - ஹாக்கி
  • தேசிய மரம் - ஆல மரம்
  • தேசிய நதி - கங்கை
  • தேசிய நீர்நிலை விலங்கு - டால்ஃபின்
  • தேசிய பாரம்பரிய விலங்கு - யானை
  • தேசிய நுண்ணுயிரி - லாக்டோ பாசில்லஸ் டெல்புருக்கி
தேசிய விடுமுறை நாட்கள்:
  • சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15
  • குடியரசு தினம் - ஜனவரி 26
  • காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2
ஐ.நா. சபை
  • ஐ.நா.சபை என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக நாடுகளுக்கு இடையே சமாதானம், பாதுகாப்பு, அரசியல், பொருளாதார, சமூக ஒத்துழைப்பு ஆகிய காரணங்களுக்காக 1945, அக்டோபர் 24-ம் நாள் (ஐ.நா நாள்) தொடங்கப்பட்டது.
  • தொடக்கத்தில் 51 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஐ.நா-வில் இன்று 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தெற்கு சூடான் -193வது உறுப்பினர் (2012).
  • அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கும், பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கும் இடையே 1941-ல் கையெழுத்தான அட்லாண்டிக் சாசனமே ஐ.நா. சபை உருவாக்கத்துக்கான அடிப்படை.
  • அமெரிக்க அதிபர், பிரிட்டிஷ் பிரதமர், ரஷ்ய அதிபர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற யால்டா மாநாடு, ஐ.நா உறுப்பு நாடுகள் கையெழுத்திட்ட  சான் ஃபிரான்சிஸ்கோ மாநாடு ஆகியவை ஐ.நா. உருவாக்கத்துக்கு காரணங்கள்.
  • ஐ.நா-வின் முதல் கூட்டம் 1946, ஜனவரியில் லண்டனில் நடைபெற்றது.
  • ஐ.நா-வின் முதல் பொதுச் செயலாளர் டிரைக்வீ லீ (நார்வே).
  • ஐ.நா-வின் அலுவல் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், அரபி, சீனம்.
  • ஐ.நா. கொடி வடதுருவ உலக வரைபடத்தை இரண்டு ஆலிவ் மரக் கிளைகள் சூழ்ந்திருப்பதாக அமைந்துள்ளது.
  • ஐ.நா-வின் ஆறு அங்கங்கள், செயலகம், பொதுச்சபை, பாதுகாப்பு சபை, பொருளாதார சமூக சபை, பொறுப்பாண்மை சபை, பன்னாட்டு நீதி மன்றம்.
  • ஐ.நா-வின் ஆறு அங்கங்களில் பன்னாட்டு நீதி மன்றம் மட்டும் நெதர்லாந்தில், தி ஹேக் நகரில் அமைந்துள்ளது. மற்றவை அனைத்தும் நியூயார்க்கில் உள்ளன.
  • ஐ.நா.உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் ஐ.நா-வின் பொதுச் சபைக்கு ஐந்து உறுப்பினர்களை அனுப்பலாம். ஆனால், ஒரு வாக்குரிமை மட்டுமே உண்டு.
  • பொதுச் சபையின் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.
  • ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் செவ்வாய்க்கிழமை பொதுச் சபையின் மாநாடு நடைபெறுகிறது.
  • பன்னாட்டு அமைதிக்குப் பொறுப்பு வகிக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபை பதினைந்து உறுப்பினர்களைக் கொண்டது.
  • ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகள் (ட-5).
  • பாதுகாப்பு சபையில், தற்காலிக உறுப்பினர்களான பத்து நாடுகளில் ஐந்து ஆஃப்ரோ ஆசிய நாடுகளும், இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளும், இரண்டு மேற்கு ஐரோப்பிய நாடுகளும், ஒரு கிழக்கு ஐரோப்பிய நாடும் அடங்கும்.
  • ஐ.நா-வின் நிரந்தர உறுப்பு நாடுகள் மறுப்பு அதிகாரம் (யங்ற்ர் டர்ஜ்ங்ழ்) கொண்டவை. 
  • மறுப்பு அதிகாரத்தின்படி ஐ.நா.பாதுகாப்பு சபையில் கொண்டுவரும் தீர்மானத்தை நிரந்தர உறுப்பினர்கள் ஏதாவது ஒரு உறுப்பினர் மறுத்தாலும் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது.
  • தற்போது ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்கள் தகுதி கோரி வரும் நான்கு நாடுகள் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் (எ-4).
  • ஐ.நா. பொறுப்பாண்மை சபையின் முக்கிய நோக்கம் சுதந்திரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாப்பது.
  • பன்னாட்டு நீதி மன்றம் பதினைந்து நீதிபதிகளைக் கொண்டது. நீதிபதிகளின் பதவி காலம் ஒன்பது ஆண்டுகள்.
  • இந்தியாவுக்காக ஐ.நா. சபையில் கையெழுத்திட்டவர் சர் ராமசாமி முதலியார்.
  • ஐ.நா-வில் எட்டு மணி நேரம் உரையாற்றியவர் வி.பி.கிருஷ்ண மேனன்.
  • ஐ.நா.சபையில் முதலில் பாடியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
ஐ.நா. அமைப்புகளும் பிற பன்னாட்டு அமைப்புகளும் அவற்றின் தலைமையிடங்களும்.
  • ஐ.நா.சபை தலைமையகம் - நியூயார்க்
  • ஐ.நா. பொதுச் சபை - நியூயார்க்
  • பன்னாட்டு நீதிமன்றம் - தி ஹேக்
  • ஐ.நா.வளர்ச்சித் திட்டம் - நியூயார்க்
  • யுனெஸ்கோ (UNESCO) -பாரிஸ்
  • ஜீனிசெஃப் (UNICEF) - நியூயார்க்
  • ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) - நைரோபி
  • உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO) - ரோம் 
  • உலக வர்த்தக நிறுவனம் (WTO) - ஜெனிவா
  • பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம் (ILO) - ஜெனிவா
  • உலக வங்கி - வாஷிங்டன்
  • பன்னாட்டு நிதி அமைப்பு (I.M.F) - வாஷிங்டன்
  • பன்னாட்டு அணு சக்தி கழகம் (IAEA) - வியன்னா
  • பன்னாட்டு கடல் நிறுவனம் -  லண்டன்
  • ஐ.நா. தொழில் வளர்ச்சித் திட்டம் - வியன்னா
  • ஆசியான் (ASEAN) - ஜகார்த்தா
  • ஆசிய வளர்ச்சி வங்கி - மணிலா
  • சார்க் - காட்மண்ட்
  • செஞ்சிலுவை சங்கம் - ஜெனிவா
  • ஐரோப்பியக் கழகம் (EC) - புருசெல்ஸ்
  • நேட்டோ (NATO) - புருசெல்ஸ்
நூல்களும் ஆசிரியர்களும் - சுயசரிதைகள்
  • The Story of My Experiments with Truth  -   மகாத்மா காந்தி
  • An Autobiography  - ஜவஹர்லால் நேரு
  • Prison Diary  - ஜெயப்ரகாஸ் நாராயண்
  • Mein Kampf  - அடால்ஃப் ஹிட்லர்
  • My Reminiscences  - ரவீந்திரநாத் தாகூர்
  • Wings of Fire  - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
  • The Insider  - பி.வி.நரசிம்மராவ்
  • My Presidential Years  - ஆர்.வெங்கட்ராமன்
  • I Dare  - கிரண் பேடி
  • My Music My Life  - பண்டிட் ரவிசங்கர்
  • Autobiography of an Unknown Indian  - நிராத் சி.சௌத்ரி
  • Friends not Masters- அயூப் பான்
  • Daughter of the East  - பெனாசீர் பூட்டோ
  • My Life  - பில் கிளின்டன்
  • Long Walk to Freedom  - நெல்சன் மன்டேலா
  • Freedom in Exile  - தலாய் லாமா
  • Son of My Father  - டாம் மோரிஸ்
  • Revenue Stamp  - அம்ரிதா ப்ரிதம்
  • My Days  - ஆர்.கே.நாராயண்
  • என் சரிதம் - உ.வே.சாமிநாத ஐயர்
  • என் வாழ்க்கைக் குறிப்புகள் -  திரு.வி.க
  • நெஞ்சுக்கு நீதி - மு.கருணாநிதி
  • வனவாசம், மனவாசம் - கண்ணதாசன்
  • இது வரை நான் - வைரமுத்து
அரசியல், பொருளாதார நூல்கள்
  • Republic - பிளாட்டோ
  • Das Kapital - காரல் மார்க்ஸ்
  • The Prince - மாக்கியவல்லி
  • Politics - அரிஸ்டாட்டில்
  • Emilie - ரூஸோ
  • The Social Contract - ரூஸோ
  • Communist Manifesto - காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ்
  • Gethering Stom - வின்ஸ்டன் சர்ச்சில்
  • The Wealth of Nations - ஆடம் ஸ்மித்
  • Asian Drama - குன்னார் மிர்தால்
ரஷ்ய எழுத்தாளர்களின் நூல்கள்
  • War and Peace - லியோ டால்ஸ்டாய்
  • Resurrection - லியோ டால்ஸ்டாய்
  • Anna Karenina - லியோ டால்ஸ்டாய்
  • Crime and Punishment - தாஸ்தோவ்ஸ்கி
  • Mother - மாக்சிம் கார்க்கி
  • Dr.Zhivago - போரிஸ் பெஸ்டர்நெக்
  • August 1914 - அலெக்ஸாண்டர் ஸோல்நிட்சின்
இந்திய எழுத்தாளர்களின் ஆங்கில நூல்கள்
  • Glimpses of World History - ஜவஹர்லால் நேரு
  • A Bunch of Old Letters - ஜவஹர்லால் நேரு
  • Gitanjali - ரவீந்திரநாத் தாகூர்
  • Golden Threshold - சரோஜினி நாயுடு
  • Life Divine - அரவிந்த கோஷ்
  • Savitri - அரவிந்த கோஷ்
  • A passage to England - நிராத் சி.சௌத்ரி
  • The Cat and Shakespeare - ராஜா ராவ்
  • The Serpent and the Rope - ராஜா ராவ்
  • Kanthapura - ராஜா ராவ்
  • Broken Wing - சரோஜினி நாயுடு
  • A Beginning - டாம் மோரிஸ்
  • Malgudi Days - ஆர்.கே.நாராயண்
  • Guide - ஆர்.கே.நாராயண்
  • Swami and Friends - ஆர்.கே.நாராயண்
  • Waiting for the Mahatma - ஆர்.கே.நாராயண்
  • The Unfurnished Man - நிஸிம் இசெக்ல்
  • Coolie - முல்க்ராஜ் ஆனந்த்
  • Untouchable - முல்க்ராஜ் ஆனந்த்
  • The Women and the Cow - முல்க்ராஜ் ஆனந்த்
  • A Passage to England - நிராத் சி.சௌத்ரி
  • A Train to Pakistan - குஷ்வந்த் சிங்
  • The Satanic Verses - சல்மான் ருஷ்டி
  • Midnight’s Children - சல்மான் ருஷ்டி
  • The  Fury - சல்மான் ருஷ்டி
  • Ground beneath Her Feet - சல்மான் ருஷ்டி
  • The God of Small Things - அருந்ததி ராய்
  • A Bend in the River - வி.எஸ்.நைபால்
  • A Suitable Boy - விக்ரம் சேத்
  • An Equal Music - விக்ரம் சேத்
  • A Million Mutiness Now  - வி.எஸ்.நைபால்
  • A House for Mr.Biswas - வி.எஸ்.நைபால்
  • Fasting, Feasting - அனிதா தேசாய்
  • Clear Light of a Day - அனிதா தேசாய்
  • The Hungry Tide - அமிதவ் கோஷ்
  • Circle of Reason - அமிதவ் கோஷ்
  • Show Business - ஷஷி தரூர்
  • The Great Indian Novel - ஷஷி தரூர்
  • Red Earth and Pouring Rain - விக்ரம் சந்திரா
  • English August - உபமான்ய சட்டர்ஜி
  • Memoirs of a Welfare State  - உபமான்ய சட்டர்ஜி
  • Interpreter of Maladies  - ஜூம்பா லஹரி
  • A House of Blue mangoes  - டேவிட் டேவிதர்
இந்தியத் தலைவர்கள் எழுதிய நூல்கள்
  • Hindu Swara  - மகாத்மா காந்தி
  • Discovery of India  - ஜவஹர்லால் நேரு
  • Indian Struggle  - சுபாஷ் சந்திர போஸ்
  • Indian Divided  - இராஜேந்திர பிரசாத்
  • Un Happy India  - லாலா லஜபதி ராய்
  • Wake up India  - அன்னி பெசன்ட்
  • India in Transition  - என்.எம்.ராய்
  • India wins Freedom  - மௌலான அபுல்கலாம் ஆஸாத்
  • War of Indian Independence  - வி.டி.சாவர்க்கர்
  • An Idealist View of Life  - டாக்டர் இராதாகிருஷ்ணன்
  • My Truth  - இந்திராகாந்தி
  • My Life and Times  - வி.வி.கிரி
  • India 2020  - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
  • Ignited Minds  - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
ஆங்கில இலக்கியம்
  • Paradise lost  - ஜான் மில்டன்
  • Paradise Regained - ஜான் மில்டன்
  • The Tale of Two Cities  - சார்லஸ் டிக்கன்ஸ்
  • David Copperfield  - சார்லஸ் டிக்கன்ஸ்
  • Oliver Twist  - சார்லஸ் டிக்கன்ஸ்
  • Great Expectations  - சார்லஸ் டிக்கன்ஸ்
  • Conterbury Tales  - ஜியோஃபரி சாஸர்
  • Romeo and Juliet  - வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • Antony and Cleopatra  - வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • The Tempest   - வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • Macbeth  - வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • King Lear  - வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • A Mid Summer Night’s Dream  - வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • Pygmalion  - பெர்னார்ட்ஷா
  • Doctor’s Dilemma  - பெர்னார்ட்ஷா
  • Isabella  - ஜான் கீட்ஸ்
  • The Wasteland  - டி.எஸ்.இலியட்
  • Leaves of Grass  - வால்ட் விட்மன்
  • An Ideal Husband  - ஆஸ்கார் ஒயில்ட்
  • Animal Farm  - ஜார்ஜ் ஆர்வெல்
  • Farewell to Arms  - எர்னஸ்ட் ஹெமிங்வே
  • Unto The Last  - ஜான் ரஸ்கின்
  • A Passage to India  - இ.எம்.ஃபாஸ்டர்
  • Invisible Man  - ஹெச்.ஜி.வெல்ஸ்
  • Time Machine  - ஹெச்.ஜி.வெல்ஸ்
  • Ben Hur  - லூயிஸ் வாலஸ்
  • Jurassic Park  - மைக்கேல் கிறிஸ்டன்
  • The Godfather  - மரிய புஸோ
  • Gone With The Wind  - மார்கிரேட் மிட்சல்
ஆங்கில இலக்கிய உலகம்
  • தொழிற்சாலையில் வேலைபார்த்த பிரபல எழுத்தாளர் - சார்லஸ் டிக்கன்ஸ்
  • All Children’s Except one Grow up ….  எனத் தொடங்கும் குழந்தைகள் நாவல் - பீட்டர்பேன்.
  • ஜேம்ஸ் பாண்ட் முதன் முதலில் தோன்றிய நாவல் - Casino Royal  
  • ஷெர்லாக் ஹோம்ஸ் தோன்றிய முதல் புத்தகம் - A  Study in Scarlet 
  • ஆலிஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் - லூயிஸ் கேரோல்.
  • பி.ஜி.வுட்ஹவுஸ் உருவாக்கிய புத்திசாலியான கதாபாத்திரம் - ரெஜினால்ட் ஜீவ்ஸ்.
  • ஜாஸ் திரைப்படத்தை இயக்கியவர் - ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
  • ஷெர்லக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் - ஆர்தர் கானன் டாயில்.
  • ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் - இயான் ஃப்ளமிங்
நோபல் பரிசு!
  • நோபல் பரிசை ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த ஆல்ஃபிரட் நோபல் 1901-ல் நிருவினார். இவர் டைனமைட் என்ற வெடிபொருளை கண்டுபிடித்தவர்.
  • அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாட்டு கமிட்டி முடிவு செய்கிறது.
  • அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் நார்வே நாட்டுத் தலைநகரான ஆஸ்லோவில் வழங்கப்படுகிறது.
  • பிற நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 
  • 10-ம் தேதி ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப்படுகிறது.
  • பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1969 முதல் வழங்கப்படுகிறது.
  • பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 2009-ல் பெற்ற எலினார் ஆஸ்ட்ரம் என்ற அமெரிக்கப் பெண்மணியே பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.
  • முதல் நோபல் பரிசு (1901) பெற்றவர்களின் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஹென்றி டுனன்டும் (அமைதி), எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்த ராண்ட்ஜனும் (இயற்பியல்) அடங்குவர்.
  • மேரி க்யூரி, இயற்பியல், வேதியியல் துறைகளில் இருமுறை நோபல் பரிசு பெற்றுள்ளார்.
  • அமைதிக்காகவும், வேதியியலுக்காகவும் இருமுறை நோபல் பரிசு பெற்றவர் லினஸ் பாலிங்.
  • இயற்பியலில் மட்டுமே இருமுறை நோபல் பரிசு பெற்றவர் ஜான் பார்டீன்.
  • இதுவரை மொத்தம் 8 இந்தியர்கள் (வம்சா வழி இந்தியர்கள் உட்பட) நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
  • நோபல் பெற்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர் - 1913 ல் இலக்கியத்துக்காக.
  • இயற்பியலுக்காக சர் சிவி.ராமனும் (1930), விண்வெளி இயற்பியலுக்காக அவர் மருமகன் சுப்பரமணிய சந்திரசேகரும் (1983) நோபல் பரிசு பெற்றனர்.
  • மரபணுவை செயற்கை முறையில் தயாரித்ததற்காக, ஹர்கோவிந்த் குரானா நோபல் பரிசு பெற்றார் (1968).
  • அமைதிக்கான நோபல் பரிசை முதன் முதலாக 1979-ல் அன்னை தெரசா இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார்.
  • பொருளாதாரத்துக்கான நோபல் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை 1998-ல் அமர்தியா சென்னுக்கு கிடைத்தது.
  • வம்சாவழி இந்தியர்களான வி.எஸ்.நைபால்- இலக்கியம் (2001), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் (2009) ஆகியோர் நோபல் பரிசு பெற்றனர்.
  • கைலாஷ் வித்யார்தி அமைதிக்கான நோபல் பரிசு (2014) பெற்றார்.
  • நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கக் காரணமாக இருந்த பியரி டி குபெர்டினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • கணிதமேதை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 1950-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 1959-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • இலக்கியத்துக்காகத் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசைப் பெற மறுத்துவிட்ட எழுத்தாளர்கள்: போரிஸ் பாஸ்டர்நாக் (ரஷ்யா), ழான் பால் சார்த்தர் (ஃபிரான்ஸ்).
  • 2009-ல் அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.
  • மகாத்மா காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டது.
  • மகாத்மா காந்தி மறைந்த ஆண்டில் (1948), அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.
  • ஸ்வீடன் நாட்டில் ஆண்டுதோறும் வழங்கப்படுகிற (Right Livelihood Award) எனும் விருது மாற்று நோபல் பரிசு (Alternative Nobel Prize) எனப்படும்.
ராமன் மகசேசே விருது
  • ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது - ராமன் மகசேசே விருது.
  • விமான விபத்து ஒன்றில் மறைந்த முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் ராமன் மகசேசே நினைவாக, 1958 முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
  • ராமன் மகசேசே விருது ஆசியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
  • இந்த விருது, அரசு சேவை, பொதுச் சேவை, சமூகத் தலைமை, சர்வதேச உறவு, பத்திரிக்கையியல்-இலக்கியம்-படைப்புக் கலை, எழும் தலைமை ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
  • ராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர், வினோபா பாவே (1958).
  • ஜே.எம்.லிங்டோ, கிரண் பேடி, டி.என்.சேஷன் போன்றோர் சிறந்த அரசாங்க சேவைக்காக ராமன் மகசேசே விருது பெற்றுள்ளனர்.
  • பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், வெண்மை புரட்சிக்குக் காரணமான வர்கீஸ் குரியன், இசைக் குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத் தலைவர் வி.சாந்தா போன்றோர் ராமன் மகசேசே விருது பெற்ற சில இந்தியர்கள்.
  • அர்விந்த் கெஜ்ரிவால் - எழும் தலைமை (2006), பிரகாஷ் ஆம்டே மற்றும் மந்தாகினி ஆம்டே ஆகியோர்-சமூகத் தலைமை (2008), தீப் ஜோஷி (2009), தொடூர் மதுபூஷி கிருஷ்ணா (டி.எம்.கிருஷ்ணா)- எழும் தலைமை (2016), பரத் வத்வானி - மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சேவை, மற்றும் சோனம் வாங்சுக் - வட இந்திய ஊரகப் பகுதிகளில் கல்விப் பணி (2018) ஆகியோர் மகசேசே விருது பெற்றனர்.
இந்திய சிவிலியன் விருதுகள்:
  • இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த சிவிலியன் விருது: பாரத ரத்னா.
  • 1954-ல் முதன்முதலாக பாரத ரத்னா விருது பெற்ற மூவர்: ராஜாஜி, சர்.சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்.
  • இறப்புக்குக் பின் பாரத ரத்னா விருது பெற்ற முதல் மனிதர் லால் பகதூர் சாஸ்திரி (1966).
  • இறப்புக்குப் பின் சுபாஷ் சந்திர போஸøக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவருடைய குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
  • பாரத ரத்னா விருது பெற்ற மூன்று தமிழக முதல்வர்கள்: ராஜாஜி (1954), காமராஜர் (1976) மற்றும் எம்.ஜி.ஆர் (1988).
  • எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.சுப்பிரமணியம், அப்துல் கலாம் ஆகியோர் 1998-ல் பாரத ரத்னா விருது பெற்றனர்.
  • பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ - இதுவே இந்திய சிவிலியன் விருதுகளின் சரியான வரிசை முறை.
  • பாரத ரத்னா விருது பெற்ற இரு வெளிநாட்டவர்கள்: கான் அப்துல் கஃபார்கான் (பாகிஸ்தான், 1987), நெல்சன் மண்டேலா ( தென் ஆப்பிரிக்கா, 1990).
  • பாரத ரத்னா (1992). பத்ம விபூஷண் (1976), பத்ம பூஷண் (1965), பத்ம ஸ்ரீ (1958) ஆகிய நான்கு விருதுகளையும் பெற்ற முதல் இந்தியர்: சத்யாஜித் ரே.
  • 2013-ல் சச்சின் டெண்டுல்கர், சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது முன்னாள் பிரதமர் அல்ல் பிகாரி வாஜ்பாய் மற்றும் விடுதலை போராட்ட வீரர் மதன் úôகன் மாளவியா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இளம் வயதில் பத்ம ஸ்ரீ பெற்றவர்: விஸ்வநாதன் ஆனந்த்.
  • பத்ம ஸ்ரீ பெற்ற முதல் திரைப்பட நடிகை: நர்கீஸ் தத்.
இந்திய ராணுவ விருதுகள்:
  • இந்திய ராணுவ விருதுகளில் மிக உயர்ந்தது: பரம்வீர் சக்ரா.
  • போரில் வீர சாகசம் நிகழ்த்தும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே பரம்வீர் சக்ரா, மஹாவீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • அமைதி காலங்களில் செய்யப்படும் சாகசங்களுக்கான ராணுவ விருதுகளின் வரிசை: அசோக் சக்ரா, கீர்த்தி சக்ரா, சூரிய சக்ரா.
  • வீர சாகசம் புரியும் சிறுமிக்கு கீதா சோப்ரா விருதும், வீர சாகசம் புரியும் சிறுவனுக்கு சஞ்சய் சோப்ரா விருதும் வழங்கப்படுகின்றன.
இந்திய விளையாட்டு விருதுகள்:
  • இந்தியாவில் விளையாட்டுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது : ராஜீவ் காந்தி கேல் ரத்னா.
  • ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற முதல் வீரர் : விஸ்வநாதன் ஆனந்த் (1991).
  • சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
  • வாழ்நாள் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கப்படுகிறது.
  • சாகச விளையாட்டு வீரர்களுக்கு டென்சிங் நார்கே விருது வழங்கப்படுகிறது.
  • சிறந்த விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யர் விருது வழங்கப்படுகிறது.
  • 2017-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை சர்தார் சிங் (ஹாக்கி), தேவேந்திர ஜஜ்ஜாரியா (ஈட்டி எறிதல்) பெற்றனர்.
மொழி, இலக்கியம், பத்திகை விருதுகள்:
தமிழ் மொழி ஆய்வு விருதுகள்!

  • சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு மத்திய அரசால் தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.
  • 2009-10 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது ஐராவதம் மகாதேவனுக்கும், 2010-11 க்கான தொல்காப்பியர் தமிழண்ணல் ராம பெரிய கருப்பன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
  • சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசு கணியன் பூங்குன்றனார் விருது வழங்கப்படுகிறது.
  • கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
  • முதல் கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் (2010) இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.
  • கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது பெற்ற முதல் அறிஞர் ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பார்போலோ.
புக்கர் பரிசு:
  • இலக்கியத்துக்கான சிறந்த பரிசுகளில் முக்கியமானது: புக்கர் பரிசு
  • இது காமன்வெல்த் நாடுகள் மற்றும் அயர்லாந்து நாட்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • புக்கர் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர்கள்: சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய் மற்றும் கிரண் தேசாய் மற்றும் அரவிந்த் அடிகா.
  • புக்கர் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்: வி.எஸ்.நைபால்.
  • வி.எஸ்.நைபால் In a Free State (1971)
  • சல்மான் ருஷ்டி- Midnight’s Children (1981)
  • அருந்ததி ராய்- God of Small Things (1997)
  • கிரண் தேசாய்- Inheritance of Loss (2006)
  • அரவிந்த் அடிகா- White Tiger (2008)
  • ஜார்ஜ் சாண்டர்ஸ்- Lincoin in the Bardo (2017)
  • ஓல்கா டக்கரஸ் (Olga Tokarczuk) - Flights (2018)
ஞானபீட விருது:
  • இலக்கியத்துக்காக இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த விருது: ஞானபீட விருது.
  • அங்கீகரிக்கப்பட்ட 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி எழுத்தாளருக்கு மட்டும் ஞானபீட விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • ஞானபீட விருது முதன்முதலாக 1965-ல் மலையாள எழுத்தாளரான சங்கர குரூப்புக்கு ஓடக்குழல் நூலுக்காக வழங்கப்பட்டது.
  • ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்: அகிலன் (1975-ல் சித்திரப்பாவை, நாவலுக்காக).
  • 1982 முதல் ஞானபீட விருது ஒரு குறிப்பிட்ட படைப்புக்காக என்றில்லாமல், இந்திய இலக்கிய வளர்ச்சிக்கு ஓர் எழுத்தாளரின் பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.
  • தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் 2002-ல் ஞானபீட விருது பெற்றார்.
  • 2017-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது கிருஷ்ண ஷோப்தி (Krishna Sopti)  அவர்களுக்கு வழங்கப்பட்டது. 
சாகித்ய அகாடமி விருது:
  • சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
  • எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளோடு ராஜஸ்தானி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து 24 இந்திய எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • முதன்முதலாக சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழர்: ரா.பி.சேதுபிள்ளை (தமிழின்பம் என்ற நூலுக்காக, 1955-ல்)
சாகித்ய அகாடமி விருது பெற்ற சில தமிழ் எழுத்தாளர்கள்:
  • கல்கி - அலை ஓசை, நாவல் (1956).
  • மு.வரதராசனார் - அகல் விளக்கு, நாவல் (1961).
  • பாரதிதாசன்- பிசிராந்தையார், நாடகம் (1969).
  • வல்லிக்கண்ணன்- புதுக் கவிதை தோற்றமும் வளர்ச்சியும், உரைநடை (1978).
  • கண்ணதாசன்- சேரமான் காதலி, நாவல் (1980).
  • அப்துல் ரஹ்மான்- ஆலாபனை, கவிதை (1999).
  • வைரமுத்து- கள்ளிக்காட்டு இதிகாசம், நாவல் (2003).
  • ஈரோடு தமிழன்பன்- வணக்கம் வள்ளுவ, கவிதை (2004).
  • திலகவதி- கல்மரம், நாவல் (2005).
  • மு.மேத்தா- ஆகாயத்துக்கு அடுத்த வீடு, கவிதை (2006).
  • நீல பத்மநாபன்- இலையுதிர்காலம், நாவல் (2007).
  • மேலாண்மை பொன்னுசாமி- மின்சாரப்பூ, சிறுகதை (2008).
  • புவியரசு - கையொப்பம், கவிதை (2009).
  • நாஞ்சில் நாடன் - சூடிய பூ சூடற்க, நாவல் (2010).
  • சு.வெங்கடேசன்- காவல் கோட்டம், நாவல் (2011).
  • செல்வராஜ்- தோல், நாவல் (2012).
  • ஜே.டி.குரூஸ்- கொற்கை, நாவல் (2013).
  • பூமணி - அஞ்ஞாடி, நாவல் (2014).
  • மாதவன்- இலக்கியச் சுவடுகள் (2015).
  • வண்ணதாசன்- ஒரு சிறு இசை (2016).
  • கவிஞர் இன்குலாப்- காந்தள் நாட்கள் (2017).
இலக்கிய விருது - பத்திரிகைத் துறை சார்ந்த விருது:
  • சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ராஜராஜன் விருது வழங்குகிறது.
  • தென்பாண்டி சிங்கம் என்ற புதினத்துக்காக கலைஞர் கருணாநிதி ராஜராஜன் விருது பெற்றார்.
  • எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சுந்தர காண்டம் நாவலுக்காக ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.
  • சிறந்த இலக்கியத்துக்கு பிர்லா ஃபவுண்டேஷன் வழங்கும் விருது: சரஸ்வதி சம்மான்.
  • சரஸ்வதி சம்மான் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி (ராமானுஜர், நாடகம்), மற்றும் ஏ.ஏ.மணவாளன் (இராம கதையும் இராமாயணங்களும்).
  • சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இலக்கிய விருது: ஆரஞ்சு பரிசு.
  • பத்திரிக்கைத் துறைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் உயர்ந்த விருது: புலிட்சர்.
  • இந்திய வம்சாவளியினரான ஜøம்பா லஹரி, (Interpreter of Maladies)  என்ற நூலுக்காக புலிட்சர் விருது பெற்றுள்ளார்.
  • இந்தியாவில் பத்திரிக்கைத் துறைக்காக வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானது: பி.டி.கோயங்கா விருது.
திரைப்பட விருதுகள்:
சர்வதேசத் திரைப்பட விருதுகள்:

  • இந்தியாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது : Golden Peacock Award.
  • ஃபிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது : Golden Palm Award.
  • இத்தாலியில் நடைபெறும் வெனிஸ் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது : Golden Lion Award.
  • ஜெர்மனியில் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் வழங்கப்படுவது : Golden Bear Award.
ஆஸ்கர் விருது:
  • ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அமைப்பின் பெயர்: Academy of Motion Pictures Arts and Sciences.
  • ஆஸ்கர் விருதுக்கான சிலையை வடிவமைத்த கலை இயக்குநர்: செட்ரிக் கிப்பன்ஸ். இவர் 11 முறை ஆஸ்கர் பெற்றுள்ளார்.
  • ஆஸ்கர் சிலையின் உயரம் 13.5 அங்குலம்.
  • இதுவரை அதிக (தலா 11) ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படங்கள்: பென் ஹர், டைட்டானிக், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்.
  • ஆஸ்கர் விருது பெற்ற ஒரே தம்பதியினர்: விவியன் லேய் - லாரன்ஸ் ஆலிவர் (1951).
  • ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர்: பானு அத்தையா.
  • காந்தி படத்தில் ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றவர்: பானு அத்தையா.
  • இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.
  • இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர்: ஏ.ஆர்.ரஹ்மான்.
  • ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் தயாரிக்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது 1957 முதல் வழங்கப்படுகிறது.
  • கடந்த 50 ஆண்டுகளில் இந்தியத் திரைப்படம் எதுவும் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான சிறந்த விருதைப் பெற்றதில்லை.
  • இதுவரை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மூன்று இந்திய திரைப்படங்கள்: மதர் இண்டியா, சலாம் பாம்பே, லகான்.
  • ஆண்டுதோறும் ஓர் இந்தியத் திரைப்படம் அதிகாரபூர்வமாக இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படுகிறது.
  • இதுவரை இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்: தெய்வமகன், நாயகன், பேசும் படம், அஞ்சலி, தேவர்மகன், இந்தியன், ஜீன்ஸ், ஹே ராம், விசாரணை.
  • 2017-ல் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம்: Moonlight.
  • 2018 (90-வது ஆஸ்கர் விருதுகள்): சிறந்த படம்: The Shape of Water, சிறந்த இயக்குநர்: குலிர்மோ டில் டொரோ கொமக்ஸ் (The Shape of Water),, சிறந்த நடிகர்: கிரே ஒல்ட்மன் (Darkest hour), சிறந்த நடிகை: பிரான்ஸிஸ் மெக்டோர்மன்ட் (Three Billboards Outside Ebbing).

1 comment:

Anonymous said...

In a on line casino, gamers who win at roulette are simply having a fortunate day. There are some methods which may 온라인 카지노 help decrease your losses, but successful numbers are at all times random. By knowing about odds and rules, gamers may be at a slight benefit after they place their bets. European Roulette is the variation which provides one of the best player odds. There’s no double “0” on the European wheel, decreasing the house edge in comparison to|compared to} its American counterpart.