5.1 பொருளிலக்கணம்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உலகில் உள்ள பல மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் கண்டனர். ஆனால், தமிழ்மொழியில் மட்டுமே மக்கள் வாழ்க்கை முறைக்கும் உரியதான இலக்கியம் படைப்பதற்குரிய இலக்கணமாகப் பொருளிலக்கணத்தை இயற்றியுள்ளனர்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருளாக அமைந்தது இப்பொருள்தான்.பொருளை, அகப் பொருள், புறப் பொருள் என இருவகைப்படுத்துவர்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
'ஒத்த அன்புடைய - தலைவன் தலைவியின் உள்ளத்திற்கு மட்டுமே புலன் ஆகும் இன்ப நிகழ்வை' அகப் பொருள் என்பர். (அகம் - உள்ளம்).
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறருக்குக் கூறக்கூடியதாய் அமைந்த அறம், பொருள், அவற்றின் நிலையின்மை, வீடுபேறு ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது புறப்பொருள் ஆகும்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சுருக்கமாகக் கூறின், அகப்பொருள் என்பது 'தாமே மகிழ்வது'; புறப்பொருள் என்பது 'பகிர்ந்து மகிழ்வது'.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அகப்பொருள் பற்றி நிகழும் ஒழுக்கத்தை அகத்திணை (திணை-ஒழுக்கம்) என்பர். அகத்திணையைக் குறிஞ்சித் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, பாலைத் திணை என ஐந்து வகையாகப் பகுத்துக் கூறுவர். இவற்றையே அன்பின் ஐந்திணை என்பர்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இவை ஐந்தினோடு, கைக்கிளை, பெருந்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். பெருந்திணை என்பது பொருந்தாக் காதல். ஆதலின் அவை இரண்டும் சிறப்புடையன ஆகா.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அன்பின் ஐந்திணை சிறப்புற நடத்தற்பொருட்டு ஒவ்வொன்றுக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று பொருள்கள் வகுத்துள்ளனர். அவற்றைக் காண்போம்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதற்பொருள் நிலம், பொழுது என இரு வகைப்படும். நிலமாவன, குறிஞ்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அகப்பொருள் நிகழ்வதற்கு ஏற்ற பொழுதைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும்பொழுது
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும்பொழுது என்பது, ஓர் ஆண்டின் கூறுபாடு. ஓர் ஆண்டுக்கு உரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது எனப்படும். ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள் கால அளவினை உடையதாம்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
(வேனிற்காலம் - வெயிற்காலம் ; கார்காலம் - மழைக்காலம் ; முன்பனிக்காலம் - மாலைக்குப் பின் பனி விழும் காலம்; பின்பனிக்காலம் - காலையில் பனி விழும் காலம்).
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிறுபொழுது
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சிறுபொழுது என்பது நாளின் கூறுபாடு. ஒரு நாளை, 1. வைகறை, 2. காலை, 3. நண்பகல், 4. எற்பாடு, 5. மாலை, 6. யாமம் என்பனவாக, ஆறு கூறுகளாக்கி, அவற்றைச் சிறுபொழுது என வழங்குவர்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது. எனவே, ஆறு சிறுபொழுதும் சேர்ந்து, இருபத்து நான்கு மணி நேரம் ஆகும்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இனி, ஒவ்வொரு பொழுதுக்கும் உரிய நேரத்தை அறிந்துகொள்வோம்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
('எற்பாடு' என்பது எல்-படு நேரம்; அதாவது சூரியன் மறையும் நேரம். 'எல்' என்பதற்குச் சூரியன் என்பது பொருள்).
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஐவகை நிலங்களுக்கும் உரிய, தெய்வம், மக்கள், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் ஆகியவற்றைக் கருப்பொருள் என வழங்குவர். சான்றாக, குறிஞ்சி நிலத்துக்கு உரிய கருப்பொருளைக் காண்போம்:-
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இவை போன்றே, பிற நான்கு வகை நிலங்களுக்கும் கருப்பொருள் உண்டு.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒவ்வொரு திணைக்கும் உரிய அக ஒழுக்கத்தை உரிப்பொருள் என்பர்.உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும் உரிய உரிப்பொருள் பின்வருமாறு.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள், கருப்பொருள்,
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எல்லா நிலங்களுக்கும் சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவை பொதுவானவையே. ஆயினும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாகச் சொல்லப்பட்டவை அந்தந்தத் திணைக்குச் சிறப்பானவை ஆகும்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பறவைகளும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் மற்ற நிலங்களிலும் இருக்கக்கூடும். எனினும், அந்தந்த நிலங்களுக்கு அவை சிறப்பு வாய்ந்தவை என்பதால் ஒரு திணைக்கு உரியதாக அவை சொல்லப்பட்டுள்ளன. உரிப்பொருள்களும் அவ்வாறே சிறப்புக் கருதிச் சொல்லப்பட்டுள்ளன.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறரிடம் கூறத்தக்க அறம், பொருள், வீடு பற்றியும் கல்வி, வீரம், கொடை, புகழ் பற்றியும் கூறுவது புறப்பொருள் ஆகும்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
புறத் திணைகள் பன்னிரண்டு வகைப்படும். அவையாவன, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்பனவாகும்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பண்டைத் தமிழர் மறத்திலும் அறம் கண்ட பாங்கினை இத்திணைகளால் அறியலாம்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்காட்டிய புறத்திணைகளுள், வெட்சி முதல் வாகை வரை, அவ்வகைப் பூக்களை அடையாளமாக அணிந்து, அவ்வீரர்கள் வருவர் என்பதை அறிக. இவை யாவும் பூக்களால் பெற்ற பெயர்கள்.
|