Monday 1 October 2018

ஐரோப்பியர்கள்

வணிகத்துக்காக இந்தியா வந்த முதல் ஐரோப்பியர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

போர்ச்சுக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா 1498-ல் இந்தியாவுக்கு கடல் வழி கண்டறிந்தார்.

கள்ளிக்கோட்டை வந்த வாஸ்கோடகாமாவை வரவேற்ற அரசர் சாமோரின்.

வாஸ்கோடகாமா 1501-ல் கண்ணனூர் என்னும் இடத்தில் போர்ச்சுக்கீசிய வணிகத் தலத்தை நிறுவினார்.

கோழிக்கோடு, கொச்சின், கண்ணனூர் ஆகியவை போர்ச்சுக்கீசியர்களின் வர்த்தகத் தலங்களாக இருந்தன.

பிரான்சிஸ்கோ டி.அல்மேடா இந்தியாவுக்கான முதல் போர்ச்சுக்கீசிய வைசிராய்.

இந்திய கடலைச் சுற்றி போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அல்மேடாவின் கொள்கை நீல நீர்க்கொள்கை எனப்பட்டது.

இந்தியாவின் 2-வது போர்ச்சுக்கீசிய கவர்னரான அல்புகர்க், 1510-ல் கோவாவை போர்ச்சுக்கீசியரின் தலைமை இடமாக்கினார்.

நாகப்பட்டினத்தில் வணிகம் செய்ய போர்ச்சுக்கீசியருக்கு அனுமதி அளித்த நாயக்க மன்னர் செவப்ப நாயக்கர்.

தமிழகத்தின் போர்ச்சுக்கீசிய குடியேற்றங்கள் தூத்துக்குடி, நாகப்பட்டினம், சென்னை சாந்தோம்.

டச்சுக்காரர்கள் என்போர் ஹாலந்து நாட்டினர்.

டச்சுக்காரர்கள் 1608-ல் தேவனாம்பட்டினத்தை கைப்பற்றினர்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1600-ல் நிறுவப்பட்டது.

ஆங்கிலேயர் இந்தியாவில் வணிகம் செய்ய அனுமதி தந்தவர் ஜஹாங்கிர்.

ஜஹாங்கிரிடம் அனுமதி பெற்ற ஆங்கில வணிகர்கள் சர் தாமஸ் ரோ மற்றும் ஹாக்கின்ஸ்.

தரங்கம்பாடி 1620-ல் டேனிஷ் மக்களின் குடியேற்றமானது.

மெட்ராஸ் நகரம் பிரான்சிஸ்டே என்பவரால் உருவாக்கப்பட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டுமானம் 1639-ல் தொடங்கப்பட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முதல் ஆளுநர் ஆரன் பேக்கர்.

புனித டேவிட் கோட்டையை ஆங்கிலேயர் கடலூரில் கட்டினார்கள்.

பிரெஞ்சுக் குடியேற்றங்களுள் மிக முக்கியமானது பாண்டிச்சேரி.

செயின்ட் லூயி கோட்டை பாண்டிச்சேரியில் உள்ளது.

பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆளுநர்களில் குறிப்பிடத்தக்கவர் டுயூப்ளக்ஸ்.

No comments: