மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் ஃபெரைரா, வெர்னோன் கொன்ஸால்வஸ், கவிஞரும், மாவோயிசச் சிந்தனையாளருமான வரவர ராவ் ஆகியோர் புனே காவல்துறையால் ஆகஸ்ட் 28 அன்று கைதுசெய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் 31 அன்று நடைபெற்ற பீமா-கோரேகாவ் வன்முறை வழக்குத் தொடர்பாக இவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இவர்கள் ஐவரையும் செப்டம்பர் 6 வரை வீட்டுக்காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன், வன்முறை நடைபெற்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இவர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது. இந்த வழக்குத் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில அரசையும் மத்திய அரசையும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
No comments:
Post a Comment