Saturday 29 June 2019

CURRENT AFFAIRS IN TAMIL | கடந்து வந்த பாதை - ஜூன் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை

CURRENT AFFAIRS IN TAMIL | கடந்து வந்த பாதை - ஜூன் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை | போட்டித் தேர்வுக்கு பயன்படும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. 2019 ஜூன் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

  • ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு : பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போரிடுவோம் என்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். (ஜூன் 14) 
  • சபரிநாதன், தேவி நாச்சியப்பனுக்கு சாகித்ய அகாடமியின் விருதுகள் : இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கவிஞர் சபரி நாதனுக்கும், பால சாகித்ய புரஸ்கார் விருது தேவி நாச்சியப்ப னுக்கும் வழங்கப்படுவதாக சாகித்ய அகாடமி அறிவித்தது. (ஜூன் 14) 
  • டாக்டர்கள் வேலைநிறுத்தத்தால் மருத்துவப் பணிகள் பாதிப்பு : மேற்கு வங்காளத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மருத்துவப் பணிகள் பாதிக்கப் பட்டன. அதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். (ஜூன் 14) 
  • மொத்த விலை பணவீக்கம் குறைந்தது : மே மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 2.45 சதவீதமா கக் குறைந்தது. இது 2 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும். முந்தைய மாதத்தில் அது 3.07 சதவீதமாக இருந்தது. (ஜூன் 14) 
  • ஈரான் மீது அமெரிக்கா நேரடிக் குற்றச்சாட்டு : ஒமன் வளைகுடாவில் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்தான் என அமெரிக்கா நேரடியாகக் குற்றஞ்சாட்டியது. இதுதொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றை அமெரிக்க ராணுவம் வெளியிட்டது. (ஜூன் 14) 
  • முதல்-மந்திரிகளுக்கு மோடி வேண்டுகோள் : டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வறட்சியைச் சமாளிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்-மந்திரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். (ஜூன் 15) 
  • ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய மசோதா நிறுத்திவைப்பு : ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதா, மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. (ஜூன் 15) 
  • உலக ஆக்கி தொடர்: இந்தியா சாம்பியன் : ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த உலக ஆக்கி தொடர் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-1கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. பட்டம் வென்ற இந்தியா, 2-வது இடம் பிடித்த தென்ஆப்பி ரிக்கா அணிகள் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடத் தேர்வாகின. (ஜூன் 15) 
  • தமிழக, கர்நாடக முதல்வர்கள் மத்திய நீர்வள மந்திரியுடன் சந்திப்பு : மேகதாது அணை பிரச்சினை மற்றும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் டெல்லியில் மத்திய நீர்வள மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். (ஜூன் 15) 
  • பாகிஸ்தானை எளிதாக வென்றது இந்தியா : உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் மழை பாதிப்புக்கு இடையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வென் றது. (ஜூன் 16) 
  • பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர் : டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உறுப்பினர்கள் புதிய எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். (ஜூன் 17) 
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகக் குறையும் : நடப்பு 2019-2020-ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாகக் குறையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்தது. (ஜூன் 17) 
  • ஆவடி மாநகராட்சி உதயம் : மாநகராட்சியாக ஆவடி நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. (ஜூன் 18) 
  • சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தால் 12 பேர் பலியானார்கள். 122 பேர் படுகாயம் அடைந்தனர். (ஜூன் 18) 
  • அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு : நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியுமா என்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று டெல்லியில் அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். (ஜூன் 19) 
  • நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பு ஏற்றார் : நாடாளுமன்ற சபாநாயகராக ஓம் பிர்லா பொறுப்பு ஏற்றார். அவருக்கு பிரதமர் மோடியும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். (ஜூன் 19) 
  • உலகக் கோப்பையில் இருந்து தவான் விலகல் : கைவிரலில் காயமடைந்த இந்திய வீரர் ஷிகர் தவான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டார். (ஜூன்19)
  • நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், எதிர்கால தலைமுறையினருக்காக தண்ணீரைப் பாதுகாப்போம் என்று கூறினார். (ஜூன் 20) 
  • அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது: தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. (ஜூன் 20)


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday 26 June 2019

அமெரிக்காவில் 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு.

10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் 4 நாட்கள் நடக்கிறது. தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 32-வது வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை தமிழ் விழா, சிகாகோ 50-வது தமிழ் சங்க ஆண்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாடு ஏற்கனவே மலேசியா, இந்தியாவில் தலா 3 முறையும், இலங்கை, மொரீஷியஸ், பிரான்சில் தலா ஒரு முறையும் நடந்துள்ளது. கீழடியில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சி குறித்தும் அமெரிக்க மாநாட்டில் சிறப்பிக்கப்பட இருக்கிறது. ‘கீழடியில் தாய்மொழி’ என்ற தலைப்பில் நடக்கும் இந்த அமர்வில் தமிழர்களின் தொன்மை குறித்து பேசப்படும். தமிழின் ஆய்வு, மொழி, கலை, பண்பாடு ஆகியவை குறித்த 1,150-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்திருந்தன. அதில் 82 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. தமிழ் அறிஞர்கள் ஜி.யு.போப், வா.செ.குழந்தைசாமி ஆகியோரை மாநாட்டில் நினைவுபடுத்த உள்ளனர். மாநாட்டின் முதல் நாளில் (4-ந் தேதி) சிறப்பு பட்டிமன்றம், ஈழத்தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை- சிம்பொனி, இளைஞர் போட்டிகள், குறும்பட போட்டிகள், ராஜேந்திர சோழன் பற்றிய நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 5-ந் தேதி காலை தமிழ் இசை, கல்வியரங்கம், இலக்கிய வினாடி வினா, தமிழ் சங்கங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும், மாலையில் வி.ஜி.பி. தமிழ் சங்கம் சார்பில் சிகாகோவில் திருவள்ளுவர் சிலை திறப்பு, இயற்கையில் பிறந்த தமிழ் என்ற தலைப்பில் நாட்டிய நாடகமும் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளும், மாலையில் பெருவிருந்துடன், நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந் தேதி இரண்டாம் நாள் அமர்வுகளுடன் மாநாடு முடிவடைகிறது. இதில் மொத்தம் 35 இணை அமர்வுகளும் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளித்து இருக்கிறது. உலக தமிழ் சங்கங்களின் மாநாட்டுக்கு ஒதுக்கிய நிதியில் ஒரு பங்கை கொடுக்க முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார். அரசு சார்பில் நானும் கலந்து கொள்ள இருக்கிறேன். மேலும் 25 பேர் பங்கு பெற இருக்கிறார்கள். தமிழினம், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம் குறித்து புதுவரலாற்றின் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மையப்பொருளாக வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற துணைத்தலைவர் மு.பொன்னவைக்கோ, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ச.பார்த்தசாரதி உள்பட பலர் உடன் இருந்தனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 25 June 2019

முதல் இந்திய சுதந்திரப்போர்


  • இந்திய வரலாற்றில் 1857ஆம் ஆண்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கருதப்படுகிறது. 
  • இப்புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் படைவீரர்கள் கிளர்ச்சி' அல்லது 'சிப்பாய் கலகம்”என்றும் இந்திய வரலாற்று அறிஞர்கள் முதல் இந்திய சுதந்திரப்போர்” என்றும் வர்ணிக்கின்றனர். 
  • மக்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பும், பல காலமாக தேக்கி வைக்கப்பட்டிருந்த துயரங்களின் வெளிப்பாடுமே, 1857 ஆம் ஆண்டு புரட்சியாக வெடித்தது எனலாம், 
  • 1857 ஆம் ஆண்டு படைவீரர்கள் கிளர்ச்சியின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக
  • இருந்தவர் கானிங் பிரபு. 
  • இந்திய மக்களின் ஆழ்மனதில் ஊறிக்கிடந்த தேசியத்திற்கான விதைகளை 1857 ஆம் ஆண்டு கலகம் ஊன்றியது. 
  • 1947ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இடைவிடாத போராட்டத்தின் துவக்கமாக இக்கலகம் இருந்தது.
பெரும் புரட்சியின் மதிப்பீடு :
  • 1857 ஆம் ஆண்டு கலகத்தின் பண்பினை பிரிட்டிஷ் அறிஞர்களுடைய வரலாற்று ஏடுகள்
  • குறைத்தே மதிப்பிடுகின்றன. 
  • சர் ஜான் இக்கலகத்தை வெறும் ராணுவப் புரட்சி என்றும், பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிய நடத்தப்பட்ட சதி அல்ல என்றும் கருதுகின்றார். 
  • ஆனால், இந்திய அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு கலகத்தை புகழ்ந்து எழுதியுள்ளனர். வீர சவார்க்கர் இதனை முதல் இந்திய விடுதலைப் போர் என்று குறிப்பிட்டுள்ளார். 
  • எஸ். என். சென் 1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி என்று கருதுகிறார். 
  • ஆர்.சி. மஜும்தார் 1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றவை என்றும், பின்னர் அவை 1857 ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்சவடிவம் பெற்றது என்றும் குறிப்பிடுகிறார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 22 June 2019

நாடுகளின் சிறப்புப் பெயர்கள்

தோட்ட நாடு - சிங்கப்பூர்

கேக் நாடு - ஸ்காட்லாந்து

புன்னகை நாடு - தாய்லாந்து

மரகதத்தீவு - அயர்லாந்து

தங்க நிலம் - கானா

வெண்மேகங்களின் நாடு - நியூசிலாந்து

-சஜிபிரபு மாறச்சன், சரவணந்தேரி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 18 June 2019

சமீபத்திய நிகழ்வுகள் ஜூன் 13, 2019 வரை

கிரிஷ் கர்னாட் காலமானார்
ஜூன் 10: நாடக எழுத்தாளர், நடிகர், இயக்குநர், ஆசிரியர், செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆளுமையாக அறியப்பட்ட கிரிஷ் கர்னாட் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 81. கன்னட மொழியில் அவரது இலக்கிய பங்களிப்புகளுக்காக ஞானபீட விருது, சாகித்ய அகாடமி விருதுகளைப் பெற்றவர். ‘துக்ளக்’, ‘ஹயவதனா’, ‘நாகமண்டலா’ போன்றவை அவரது முக்கியமான படைப்புகள்.

போக்குவரத்து நெரிசல்: மும்பை முதலிடம்
ஜூன் 10: உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களில் மும்பை முதல் இடத்திலும், டெல்லி நான்காவது இடத்திலும் இருக்கின்றன. ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த ‘டாம்டாம்’ நிறுவனம் வெளியிட்ட ‘போக்குவரத்து 2018’ பட்டியலில் 56 நாடுகளைச் சேர்ந்த 403 நகரங்கள் இடம்பெற்றிருந்தன. இதில், மும்பை (இந்தியா), போகோட்டா (கொலாம்பியா), லிமா (பெரு) ஆகியவை உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

கிரிக்கெட் வீரர் யவுராஜ் சிங் ஓய்வு
ஜூன் 10: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். யுவராஜ் சிங் தன் 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 58 ‘ட்வென்டி20’ சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடியிருக்கிறார்.

2018: கார்பன் உமிழ்வு 2% அதிகரிப்பு
ஜூன் 11: 2018-ம் ஆண்டில், உலகளாவிய கார்பன் உமிழ்வு 2 சதவீதம் அதிகரித்திருப்பதாக பிரிட்டனைச் சேர்ந்த ‘பிபி’ (BP) ஆற்றல் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. உலகின் ஆற்றல் தேவையும் கார்பன் உமிழ்வும் அதிவேகமாக வளர்ந்துவருவதால், உலகம் நிலையற்ற பாதையில் பயணிப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமிதவ் கோஷுக்கு ஞானபீட விருது
ஜூன் 12: இந்திய ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷுக்கு 54-வது ஞானபீட விருது வழங்கப்பட்டது. அவரது இந்திய இலக்கிய பங்களிப்புக்காக நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது டெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி இந்த விருதை அவருக்கு வழங்கினார். 1990-ம் ஆண்டு, அவரது ‘தி ஷேடோ லைன்ஸ்’ புத்தகத்துக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

கஜகஸ்தான்: புதிய அதிபர் பதவியேற்பு
ஜூன் 12: கஜகஸ்தானின் புதிய அதிபராக காசிம்-யோமர்ட் டோக்யேவ் பதவியேற்றார். ஜூன் 9 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பெற்று அவர் வெற்றிபெற்றார். 30 ஆண்டுகள் கஜகஸ்தான் அதிபராக இருந்த நுர்சுல்தான் நஸர்பயேவ் பதவி விலகியதால், புதிய அதிபராக காசிம்-யோமர்ட் டோக்யேவ் பதவியேற்றிருக்கிறார்.

இந்தியாவுக்கான விண்வெளி நிலையம்
ஜூன் 13: இந்தியாவுக்கான பிரத்யேகமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்துக்கான பணிகள், 2022 ஆகஸ்ட்டில் ‘ககன்யான்’ திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, தொடங்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார். பூமிக்கு மேல் 400 கிலோமீட்டர் சுற்றுவட்டப்பாதையில் இந்தியாவின் விண்வெளி நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. இந்த விண்வெளி நிலையம் 2030-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 8 June 2019

இந்தியாவின் முதல் பெண்மணிகள்

ஜனாதிபதி - பிரதீபா பாட்டில்

பிரதமர் - இந்திரா காந்தி

முதல்-மந்திரி - சுசேதா கிருபளானி

கவர்னர் - சரோஜினி நாயுடு

சட்டசபை சபாநாயகர் - ஷாேனா தேவி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி - பாத்திமா பீவி

மாநில தலைமைச் செயலாளர் - லட்சுமி பிரானேஷ்

வக்கீல் - ரெஜினா குகா

மருத்துவர் - ஆனந்திபாய் ஜோஷி

பொறியாளர் - லலிதா

ஐ.ஏ.எஸ். - அன்னா ஜார்ஜ்

ஐ.பி.எஸ். - கிரண் பெடி

நீதிபதி - அன்னா சாண்டி

-சஜிபிரபு மாறச்சன், சரவணந்தேரி.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 2 June 2019

நாளந்தா பல்கலைக்கழகம்

  • நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசியைச் சேர்ந்த பேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது
  • நாளந்தாவில் பௌத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது. யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன
  • அப்பல்கலைக்கழகத்தில் யுவான்-சுவாங் பௌத்த தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்
  • அந்த வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன
  • நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார்கில்ஜி என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது
  • நாளந்தா யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரியச் சின்னமாகும்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE