Tuesday 26 December 2017

பாரதிதாசன்

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும். பிறப்பு: ஏப்ரல் 29, 1891 பிறப்பிடம்: புதுவை இறப்பு: ஏப்ரல் 21, 1964 பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி நாட்டுரிமை: இந்தியன் பிறப்பு பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார். ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார். பாரதியார் மீது பற்று தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார். படைப்புகள் எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். மிகச்சிறந்த படைப்புகளில் சில: ‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல. விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது. 1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார். 1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது. இறப்பு எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
TAG: After his death, he was awarded the Sahitya Akademi Award for his 'Bisiriyanthaar' Drama. On October 9, 2001, a memorandum was published by the Chennai Post Department. Bharatidasan, who died as a death writer, filmmaker, poet and politician, was born on April 21, 1964.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழில் உள்ள எழுத்துக்கள்

க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னானினீனுனூனெனேனைனொனோனௌ
TAG:Tamil is a Dravidian language spoken mainly in southern India and Sri Lanka, and also in Malaysia, the UK, South Africa, Canada, the USA, Singapore, France, Mauritius, and many other countries.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அன்புடைமை

குறள்:71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
குறள் விளக்கம்:
அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்பாள் உண்டோ? அன்புடையார்க்கு ஏற்பட்ட துன்பம் கண்டவிடத்துத் தம்மையறியாமல் வெளிப்படும் சிறு கண்ணீரே அன்பைத் தெரியப்படுத்திவிடும்.

குறள்:72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
குறள் விளக்கம்:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்: அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

குறள்:73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
குறள் விளக்கம்:
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்திவாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

குறள்:74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
குறள் விளக்கம்:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

குறள்:75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
குறள் விளக்கம்:
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று அறிந்தோர் கூறுவர்.

குறள்:76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
குறள் விளக்கம்:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

குறள்:77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
குறள் விளக்கம்:
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

குறள்:78
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
குறள் விளக்கம்:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

குறள்:79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
குறள் விளக்கம்:
அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?.

குறள்:80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
குறள் விளக்கம்:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
TAG: REUTERS: 80 Love is the way of life Sick to wear. Description: The body that lives in the way of love is a living soul; The bone that has no love is the bone of the bone.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அகநானூறு

அகநானூறு சங்க காலத்தைச் சேர்ந்த எட்டுத்தொகை எனப்படும் தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இது ஓர் அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. நெடுந்தொகை என்ற பெயரும் இதற்கு உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் ஒரே புலவராலோ அல்லது ஒரே காலத்திலேயோ இயற்றப்பட்டவை அல்ல. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

நூலமைப்பு:
இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

பாடியோர்
இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.


அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளது.

களிற்றியானைநிரை 
மணிமிடை பவளம்
நித்திலக் கோவை

அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை 'நெடுந்தொகை அகவல்' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான். 

களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும், செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை
 301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஒரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது
TAG: Coordinates   The album contains 100 songs from 301 to 400. The songs in it are like a pearl, and are like a giraffe. This is like a kiss
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர்


தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19 -ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா. தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு."வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும்" - என்பது வள்ளுவம். அவ்வகையில் தமது 87 வயது வரையிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள். வயதால் மட்டுமின்றி தமிழ்ப் பணியிலும் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இவர் 19.02.1855 ஆம் ஆண்டு நாகை மாவட்டம் சூரியமலை என்ற ஊரில் திரு. வேங்கட சுப்பையர் அவர்களுக்கும் திருமதி சரசுவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு வேங்கட ரத்தினம் என்று பெயரிட்டனர். இப்பெயரை மாற்றி இவருக்கு சாமிநாதன் என்று பெயரிட்டவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள். கல்விஇவர் தொடக்கக் கல்வியை உத்தமதானபுரம் திண்ணைப் பள்ளியிலும், அரியலூர் சடகோப ஐயங்காரிடமும், முத்து வேலாயுதம் பண்டாரத்தாரிடமும், குன்னம் சிதம்பரம் பிள்ளை அவர்களிடமும், கார்குடி கஸ்தூரி ஐயங்காரிடமும், செங்ஙனம் விருத்தாசல ரெட்டியாரிடமும் கல்வி கற்ற உ.வே.சா தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் பயின்று தமது கல்வி அறிவைப் பட்டை தீட்டிக் கொண்டார். ஆசிரியப் பணி தமது 25வது வயதில் அதாவது 1880 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ந் தேதி முதல் 1903 ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1903 முதல் 1919 ஆம் ஆண்டு வரை 16 ஆண்டுகள் சென்னை மாகாணக் கல்லூரியிலும், 1924 இல் சிதம்பரம் மீனாட்சித் தமிழ்க் கல்லூரியிலும் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏறக்குறைய 40 ஆண்டுக் காலம் இவர் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். பதிப்பித்தல் பணிஅக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. ஒரு நூலைத் தேடிக் கண்டுபிடிப்பதும், படிப்பதும், அதனைப் பதிப்பிப்பதும் மிக எளிய செயலன்று. அனைத்து வசதிகளும் நிரம்பிய இக்காலத்திலேயே இது சவால் நிறைந்ததாக இருக்கும்பொழுது அக்காலத்தில் இப்பணி எத்துனைத் துன்பம் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார். உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம். அதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது. இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார். அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் "சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அடுத்து "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர்பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை. பதிப்புச் சிக்கல் ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை) ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும்முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம். அவை: 1. வேணு வனலிங்க விலாசச் சிறப்பு (1878) - தமது 23-வது வயதில் பதிப்பித்தார். காப்பிய வரிசையில்,2. சீவகசிந்தாமணி (1887) 3. சிலப்பதிகாரம் (1892) 4. மணிமேகலை (1898) 5. பெருங்கதை (1924) 6. உதயகுமார காவியம் (1935) சங்க இலக்கிய வரிசையில், 7. பத்துப்பாட்டு (1889) 8. புறநானூறு ( 1894) 9. ஐங்குறுநூறு (1903) 10. பதிற்றுப்பத்து (1904) 11. பரிபாடல் ( 1918) 12. குறுந்தொகை ( 1937) இலக்கண வரிசையில், 13. புறப்பொருள் வெண்பாமாலை (1895) 14. நன்னூல் மயிலைநாதர் உரை (1925) 15. நன்னூல் சங்கர நமசிவாயர் உரை (1928) 16. தமிழ் நெறி விளக்கம் (1937) பிரபந்தங்கள் வரிசையில், 17. மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு 18. சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு19. குமரகுரபரர் பிரபந்தத் திரட்டு20. தக்கயாகப் பரணி21. பாசவதைப் பரணி22. மூவருலா23. கப்பற் கோவை24. தென்றல் விடு தூதுஆகியவற்றைப் பதிப்பித்துள்ளார். மேலும் 1883 முதல் 1940 வரை 14 புராணங்களைப் பதிப்பித்துள்ளார். இவர் ஏறக்குறைய 84 நூல்களைப் பதிப்பித்துள்ளார். (மேலும் ஆய்விற்குரியது) இதனைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம். · சங்க இலக்கியங்கள் - 18 · காப்பியங்கள் - 05 · புராணங்கள் - 14 · உலா - 09 · கோவை - 06 · தூது - 06 · வெண்பா நூல்கள் - 13 · அந்தாதி - 03 · பரணி - 02 · மும்மணிக்கோவை - 02 · இரட்டை மணிமாலை - 02 · இதர பிரபந்தங்கள் - 04 பட்டமும் விருதுகளும்இவ்வாறு தமிழ்ப் பணியைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட உ.வே.சா அவர்கள் பெற்ற பட்டங்களும் சிறப்புகளும் ஏராளம். அவை:§ 1905 இல் அரசாங்கம் 1000 ரூபாய் பரிசு.§ 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாய' (பெரும் பேராசிரியர்) என்ற பட்டத்தை வழங்கியது.§ ஜி.யு.போப், சூலியஸ் வின்கோன் ஆகியோரின் பாராட்டு.§ 1917 திராவிட வித்தியா பூஷணம் பட்டம்.§ 1925 இல் தாஷிணாத்ய கலாநிதி.§ 1925 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் 5000 ரூபாய் பரிசு.§ 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.§ பாண்டித்துரை தேவரின் 4வது தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் புலவர்.§ பெசன்ட் நகரில் 1942 இல் உ.வே.சா. நூல் நிலையம். 2006 இல் அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டது.1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார்.இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் "தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.மறைவு:இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28 ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.உ.வே.சா. அவர்களின் தமிழ்ப்பணி தமிழின் பெருமையை உலகறியச் செய்வித்தது. அவர்தம் பணியால் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது எனில் மிகையன்று. இன்றைய இளைஞர்களும் மாணவர் சமுதாயமும் அறிஞர் பெருமக்களும் அவரது பணியைப் பாராட்டுகின்ற வகையில் தமிழைக் காத்து நிற்பதோடு அகிலமெங்கும் தழைத்தோங்க சபதம் மேற்கொள்ள வேண்டும்.
TAG: uveca Their Tamilnadu made the world proud of the world. If their work gets Tamil classical qualifications, Today's youth, student community and scholar mentors will appreciate his work and have to wait for Tamils to wake up all the way.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீரமாமுனிவர்

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே.
தோற்றம்: 08.11.1680
மறைவு: 04.02.1747
இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் பிறந்தார்.இயற்பெயர் கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி.1709 - கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இயேசுசபை குருவானார்.1710 - தமிழகம் வந்தார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக் கொண்ட இவர். தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.இவர் தமிழகம் வந்தபின், சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.இலக்கியச் சுவடிகைளைப் பல இடங்களுக்குச் சென்று தேடி எடுத்ததால், சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.தமிழ் கற்க எதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் "திருக்காவலூர் கலம்பகம்" பாடியுள்ளார்.பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் 'பெயரகராதி' எனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து 'பொருளகராதி' எனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் 'தொகையராதி' எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! 'சதுரகராதி' கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் 'சதுரகராதி'.ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்பட்டார்.சதுரகாதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.அக்காலத்தில் சுவடிகளில் தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல்  குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.
திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.
தமிழ் படைப்புகள்:
· தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார் .
· கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தார்.
· திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
·உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
·திருக்காவலூர்க் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
·1728 - புதுவையில் இவரின் பரமார்த்த குருவின் கதை என்ற நூல் முதல் முறையாக இவரால் அச்சியிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
·  காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது.
· தேம்பாவணி மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது.
· முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822 இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840 இல் வெளியிட்டார்.
·தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
·         23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக் கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
·         'தேம்பாவணி' காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.
TAG: Veeramumunivare who was a versatile scholar of Tamil poetry! Grammar Knowledge, Literary Scholarship, Linguistic Feelings, Devotional Literature, Research, and Ethics The heroic work of Tamil Nadu with his talent will remain in the history of Tamil Nadu. Veeramamuni, who lived and lived for Tamils, died on 04.02.1747 on the occasion of the exterior of the shrine.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல்

  1. தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..
  2. திருக்குறள்  அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற மூன்று பால்களை உடையது.
  3. அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.
  4. திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.
  5. திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  6. திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.
  7. திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் : குறிப்பறிதல - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)
  8. "தொடிற்கடின் அல்லது காமநோய் போல விடிற்கடின் ஆற்றுமோ தீ" (1159) என்ற குறள் ஒரே எழுத்தில் முடிந்துள்ளது.என்ற இந்தக் கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன.
  9. 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
  10. அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.
  11. "ஒருமையுள் ஆமைபோ லைந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து" - என்ற குறளில் 1.5.7 என்ற பகா எண்கள் குறிபிடப்பட்டுள்ளன. 
  12. அன்னம்,கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள்(பறவை), மயில், ஆமை, கயல் மீன். மீன் (விண்மீன்), முதலை, நத்தம்(சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது(புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.
  13. பலோடு தேன்கலந் த்ற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர் (112) - என்ற குறளில் பால், தேன், நீர் என்ற மூன்று நீமங்கள் இடம் பெற்றுள்ளன.
  14. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
  15. பற்றுக பற்று விடற்கு" - என்ற குறளில் ஒரே சொல் 6முறை இடம் பெற்றுள்ளது.
  16. ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே 4முறை 22 குறட்பாக்களிலும், ஒறே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
  17. "துணை எழுத்தே இல்லாத குறள் "கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக". (391)
  18. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு" என்ற குறளில் ஒரே சொல் 6 முறை இடம் பெற்றுள்ளது.
  19. ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4 முறை 22 குறட்பாக்களிலும், ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
  20. திருக்குறளில் தமிழ் என்ற சொல் இடம் பெறவில்லை.
  21. முதன் முதலில் 1812 ஆம் ஆண்டு ஓலைச்சுவடியிலிருந்து அச்சிடப்பட்டதே திருக்குறளின் முதற்பதிப்பாகும்.
  22. திருக்குறளில் ஒரு முறை மட்டுமே இடம் பெற்றுள்ள எழுத்துகள் '"வீ, ங".
  23. 1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் கடவுள் என்ற சொல் இடம் பெறவில்லை.
  24. திருக்குறளில் 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
  25. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
  26. திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  27. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
  28. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
  29. திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
  30. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
  31. திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
  32. திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  33. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
  34. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  35. திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  36. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
  37. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
  38. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
  39. திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
  40. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
  41. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
  42. திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
  43. திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
  44. திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
  45. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
  46. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
  47. திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
  48. திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
  49. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
  50. திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  51. எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
  52. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  53. திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  54. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  55. திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
TAG: The word crocodile contains seven words. The word "seventy crore" is only one point. The word seven is made in eight motifs. Thirukkural has been published in 26 languages. Thirukkural has translated 40 in English Thirukkural is translated into the Vakboli language spoken by the Narikurava.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேதியியல் முக்கிய வினா விடைகள்-1

  1. காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
  2. இரும்பின் தாது - மாக்னடைட்
  3. பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
  4. அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
  5. அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது -  கிரிக்கெட் மட்டை
  6. நீரில் கரையாத பொருள் - கந்தகம்
  7. நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
  8. நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
  9. பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
  10. நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
  11. மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
  12. வெப்ப கடத்தாப் பொருள் - மரம்
  13. திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
  14. ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
  15. இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
  16. ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
  17. கலவைப் பொருள் என்பது - பால்
  18. கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
  19. கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் -  சோடியம் கார்பனேட்
  20. தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு
  21. போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து
  22. அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்
  23. கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்
  24. 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்
  25. 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி
  26. 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
  27. பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்
  28. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்
  29. எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்
  30. செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்
  31. கேண்டி திரவம் என்பது -  பொட்டாசியம் பெர்மாங்கனேட்
  32. மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்
  33. அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்
  34. பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.
  35. சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி  -   -SO3- Na+
  36. சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
  37. ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
  38. எரிசோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
  39. எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  40. நீரில் கரையும் காரங்கள் -  அல்கலிகள்
  41. பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
  42. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
  43. தூய்மையான நீரின் PH மதிப்பு -  7
  44. அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
  45. இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
  46. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
  47. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
  48. வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4
  49. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
  50. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
  51. காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
  52. அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
  53. காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
  54. குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0
  55. சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்
  56. குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
  57. சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்
  58. கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு
  59. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்
  60. நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை - தேனிரும்பு
  61. நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்
  62. பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்
  63. சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்
  64. இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்
  65. வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்
  66. ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்
  67. அறை வெப்ப நிலையில் நீர்மமாக உள்ள உலோகம் ஒன்றின் பெயர் - புரோமின்
  68. இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
  69. எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
  70. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
  71. ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்
  72. இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்
  73. வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்
  74. பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்
  75. யூரியாவின் உருகு நிலை - 135o C
  76. இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்
  77. இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை -  நடுநிலையாக்கல்
  78. இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு
  79. புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்
  80. நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்
  81. எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C
  82. கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்
  83. நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்
  84. ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு
  85. நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை
  86. கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்
  87. மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
  88. ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
  89. துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
TAG: Ethyl alcohol boiling - 78o C Method to remove Umbrella from the wheat Method of separation of mixture of water and sand - tightening Hydrochloric acid reacts with the production of sodium chloride - sodium hydroxide Nitrogen and hydrogen combined with ammonia formation can also be used to determine the canopy - high temperatures The process to convert sea water into the water - distillation The name of the peacock is the name - copper sulphate The method of extraction of iron in the coil is a magnetic method Chemical name of rust - iron oxide
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரலாறு முக்கிய வினா விடைகள்-3


41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு

ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு

இ. பண்டைய இந்தியாவின் எடை முறை

ஈ. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது

ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது

இ. நமது வேதங்களைப் பற்றியது

ஈ. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம்

ஆ. பிராக்கிருதம்

இ. தெலுங்கு

ஈ. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர்

ஆ. கீர்த்திவர்மன்

இ. யசோதவர்மன்

ஈ. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க

ஆ. விலங்குகளை வளர்க்க

இ. சக்கரங்களை செய்ய

ஈ. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம்

ஆ. அறியாமை அகற்றுதல்

இ. நோம்பு

ஈ. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து

ஆ. சாரநாத்

இ. கோசலம்

ஈ. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர்

ஆ. பாணர்

இ. ஹரிசேனர்

ஈ. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல்

ஆ. புத்த இலக்கியம்

இ. மருத்துவ நூல்

ஈ. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம்

ஆ. பெஷாவர்

இ. கனிஷ்கபுரம்

ஈ. கோட்டான்

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல்

ஆ. நடுகல்

இ. வீரக்கல்

ஈ. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம்

ஆ. சுமேரிய நாகரீகம்

இ. சிந்து சமவெளி நாகரீகம்

ஈ. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன்

ஆ. குத்புதீன்

இ. ஜலாலுதீன்

ஈ. நசுருதீன்

54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர்

ஆ. அவுரங்கசீப்

இ. அக்பர்

ஈ. ஷாஜகான்

55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக்

2. ஜலாலுதீன் கில்ஜி

3. பகலால் லோடி

4. சிக்கந்தர் லோடி

அ. 1, 2, 3, 4

ஆ. 2, 1, 3, 4

இ. 1, 2, 4, 3

ஈ. 2, 1, 4, 3

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம்

ஆ. புத்த மதம்

இ. இந்து மதம்

ஈ. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர்

ஆ. கணித மேதை

இ. தத்துவஞானி

ஈ. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319

ஆ. 1327

இ. 1339

ஈ. 1345

59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை

ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை

இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள்

ஈ. இவை எதுவும் இல்லை

60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர்

ஆ. ஜஹாங்கீர்

இ. அவுரங்கசீப்

ஈ. அலாவுதீன் கில்ஜி

விடைகள்

41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ

51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ

TAG: 60. Who introduced the jaziya line imposed by non-Muslims? A. Akbar B. Jahangir e. Aurangzeb D. Alauddin Khilji
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரலாறு முக்கிய வினா விடைகள்-2

21. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்

அ. கோரி முகமது

ஆ. கஜினி முகமது

இ. பிரிதிவிராசன்

ஈ. மகேந்திர பல்லவன்

22. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்

அ. குத்புதீன் அய்பெக்

ஆ. முகமதுபின் துக்ளக்

இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி

ஈ. ஜெயசந்திரன்

23. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

அ. புத்த மதம்

ஆ. சமண மதம்

இ. இந்து மதம்

ஈ. பார்சி

24. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

அ. இல்ட்டுட் மிஷ்

ஆ. அலிமர்த்தன்

இ. ஆராம்ஷா

ஈ. எவருமில்லை

25. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

அ. சாந்த் பீவி

ஆ. நூர்ஜஹான்

இ. மும்தாஜ் மகால்

ஈ. ரசியா பேகம்

26. மகாவீரர் இறந்த போது அவரது வயது

அ. 42

ஆ. 57

இ. 62

ஈ. 72

27 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

அ. மதம்

ஆ. யோகா

இ. தத்துவம்

ஈ. சட்டம்

28. நந்த வம்சத்தை தொடங்கியவர்

அ. மகாபத்ம நந்தர்

ஆ. தன நந்தர்

இ. ஜாத நந்தன்

ஈ. ரிசாதனன்

29. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

அ. சந்திர குப்த மவுரியர்

ஆ. அசோகர்

இ. கனிஷ்கர்

ஈ. ஹர்ஷர்

30. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

அ. ஜீலம்

ஆ. கோதாவரி

இ. நர்மதை

ஈ. தபதி

31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்

அ. அய்ஹோலி

ஆ. ஹம்பி

இ. காஞ்சி

ஈ. வாதாபி

32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?

அ. பிம்பிசாரர்

ஆ. சந்திரகுப்த மவுரியர்

இ. அசோகர்

ஈ. புஷ்யமித்ர சுங்கர்

33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன்

ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான்

இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப்

ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங்

34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

அ. வாஷிங்டன்

ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின்

இ. தாமஸ் ஜெபர்சன்

ஈ. கால்வின் கூலிட்ஜ்

35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

அ. ஒரியா

ஆ. சமஸ்கிருதம்

இ. உருது

ஈ. பாலி

36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

அ. ராமானுஜர்

ஆ. ஆதிசங்கரர்

இ. சங்கராச்சாரியார்

ஈ. சுவாமி விவேகானந்தர்

37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

அ. 2

ஆ. 3

இ. 5

ஈ. 19

38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

அ. இமயமலை

ஆ. அரபிக் கடல்

இ. இந்தியப் பெருங்கடல்

ஈ. இவை எதுவும் இல்லை

39. ரத்னாவளியை இயற்றியவர்

அ. கனிஷ்கர்

ஆ. வால்மீகி

இ. ஹர்ஷர்

ஈ. ஹரிஹரபுக்கர்

40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி

ஆ. சதியால் கொல்லப்பட்டவர்

இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார்

ஈ. இவை அனைத்தும் சரி

விடைகள்

21. இ 22. இ 23. அ 24. ஆ 25. ஈ 26. ஈ 27. இ 28. அ 29. இ 30. இ

31. அ 32. ஆ 33. ஆ 34. இ 35. ஈ 36. அ 37. இ 38. ஆ 39. இ 40. ஈ
TAG: 39. Written by Ratnavali A. Kaniskar B. Valmiki e. Harsar D. Hariharapukkar 40. Which of the following information about the Sultan of Sultan is correct? A. The only Muslim woman who ruled Delhi B. Killed by conspiracy e. He was killed in a cemetery in 1240 D. All right
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வரலாறு முக்கிய வினா விடைகள்-1


1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை

ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை

இ. பாரிசு உடன்படிக்கை

ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை

2. கனிஷ்கரின் தலைநகர்

அ. காஷ்கர்

ஆ. யார்கண்டு

இ. பெஷாவர்

ஈ. எதுவுமில்லை

3. பொருத்துக:

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்

II. சுங்க வம்சம் - 2. காரவேலர்

III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்

IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

அ. I-3 II-4 III-1 IV-2

ஆ. I-4 II-3 III-1 IV-2

இ. I-3 II-4 III-2 IV-1

ஈ. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

அ. மதுரை

ஆ. தொண்டி

இ. சித்தன்னவாசல்

ஈ. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

அ. ஹரிதத்தர்

ஆ. ஜெயசேனர்

இ. தர்மபாலர்

ஈ. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

அ. கிரேக்கம்

ஆ. பாரசீகம்

இ. இந்தியா

ஈ. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

அ. வில்லியம் பெண்டிங்

ஆ. காரன் வாலிஸ்

இ. வாரன் ஹேஸ்டிங்ஸ்

ஈ. டல்கௌசி

8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

அ. கரிகாலன்

ஆ. இளஞ்சேரலாதன்

இ. அச்சுத களப்பாளன்

ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

அ. அல்பருனி

ஆ. மார்க்கோ போலோ

இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம்

ஈ. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

அ. பரமேஸ்வரவர்மன்

ஆ. விஷ்ணுகோபன்

இ. சிம்ம விஷ்ணு

ஈ. எவருமில்லை

11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

அ. ஸ்ரீ சதகர்னி

ஆ. கௌதமிபுத்திர சதகர்னி

இ. வஷிஷ்டபுத்திர புலுமயி

ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி

12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

அ. புனே

ஆ. கார்வார்

இ. புரந்தர்

ஈ. ராய்கார்

13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்?

அ. அஜாதசத்ரு

ஆ. பிந்துசாரர்

இ. காரவேலர்

ஈ. மயூரசரோனர்

14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

அ. சமுத்திரகுப்தர்

ஆ. அசோகர்

இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா

ஈ. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்?

அ. கஜினி முகமது

ஆ. குத்புதீன் ஐபெக்

இ. கோரி முகமது

ஈ. அலாவுதீன் கில்ஜி

16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

அ. நேபாளம்

ஆ. திபெத்

இ. இந்தியா

ஈ. பர்மா

17. டெல்லியின் பழங்காலப் பெயர்

அ. தேவகிரி

ஆ. தட்ச சீலம்

இ. இந்திர பிரஸ்தம்

ஈ. சித்துபரம்

18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

அ. ஜெயசந்திரன்

ஆ. ஜெயசேனர்

இ. ஹரிசேனர்

ஈ. எவருமில்லை

19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

அ. குமார குப்தர்

ஆ. ஸ்கந்த குப்தர்

இ. ஹர்ஷர்

ஈ. யுவான் சுவாங்

20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

அ. பல்லவர் ஓவியம்

ஆ. வீணை

இ. பல்லவர் கால நாடகம்

ஈ. மாமல்லபுரம் சிற்பம்

விடைகள் 

1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ

11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ
TAG: 19. He started the University of Nalanda A. Kumar Gupta B. Skanda Gupta e. Harsar D. Yuan Chong 20. The 'Parivartan' relates to the following: A. Pallava painting B. Lute e. Pallava period play D. Mamallapuram sculpture
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இயற்பியல் முக்கிய வினா விடைகள்-5

  1. அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
  2. ஒரியான் என்பது - விண்மீன் குழு
  3. புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
  4. எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
  5. புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
  6. புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
  7. திட்ட அலகு என்பது - SI  முறை
  8. அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
  9. நிலவு இல்லாத கோள் - வெள்ளி
  10. கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
  11. பில்லயன் விண்மீன் கதிர்களின் தொகுப்பு - அண்டம்
  12. உர்சாமேஜர் என்பது -  ஒரு விண்மீன் குழு
  13. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
  14. வேலையின் அலகு - ஜூல்
  15. 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
  16. தங்க நகைக் கடையில் பயன்படும் தராசு - மின்னணு தராசு
  17. டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
  18. அணு என்பது - நடுநிலையானது
  19. எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்
  20. நியூட்ரானின் நிறை - 1.00867 amu
  21. பொருளின் கட்டுமான அலகு - அணு
  22. வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு -  விசை X நகர்ந்த தொலைவு
  23. கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
  24. ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
  25. பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
  26. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
  27. தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
  28. கார்களில் உள்ள ஸ்டியரிங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
  29. பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
  30. நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
  31. எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
  32. *ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
  33. இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
  34. கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
  35. பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
  36. விண்வெளி ஆய்வு நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
  37. *தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
  38. வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram 
Tag: Machines are very simple - lever * If a key is activated on an object and moving it to the job - work It has a twin tile system - wedge Rubbing the rubbed sheets of wool in the wool - the power of the charge Used as a liquid in a barrene - mercury Help to build electricity in space stations - Solar Cell (Solar) * Energy stored in plants during lightning - chemical energy A diagram showing the direction and duration of the wind wind - Star diagram

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE