- ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருதான, 'புக்கர் பரிசு' இம் முறை இரு பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்ட மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நாவல்களுக்கு ஆண்டுதோ றும் உயரிய, புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
- இந்தாண்டுக்கான புக்கர் விருது, கனடா எழுத்தாளர் மார்க்ரெட் அட்வுட் மற்றும் இங்கிலாந்து எழுத்தாளர் பெர்னார்டைன் எவ ரிஸ்டோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
- பொதுவாக இவ்விருது ஒரு எழுத்தாளருக்கு மட்டுமே வழங்கப்படும்.
- கடைசியாக 1992ல் இரு எழுத்தாளர்களுக்கு இவ் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு, இந்த விதி முறை மாற்றப்பட்டு, ஒருவருக்கு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டது.
- இந்தாண்டு பரிசுப் போட்டியில் அட்வுட் எழுதிய 'தி டெஸ்டாமென்ட்' நாவலுக்கும்.
- எவரிஸ்டோ எழுதிய 'கேர்ள், உமன், அதர்' நாவலுக்கும் கடும் போட்டி ஏற்பட்டது.
- இரண்டையும் விட்டுத்தர மனமில்லாத தேர்வுக்குழு, 5 மணிநேர விவாதத்திற்குப் பிறகு புக்கர் பரிசு விதிமுறையை மீண்டும் உடைத்து, இரு எழுத்தாளர்களுக்கும் பரிசை பகிர்ந்தளிக்க முடிவு செய்தனர்.
- இதன்படி பரிசுத் தொகையான 145 லட்சம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
- 1969ம் ஆண்டு புக்கர் பரிசு உருவாக்கப்பட்ட பின் இவ்விருது பெறும் முதல் கறுப்பின பெண் என்ற சாதனையையும் எவரிஸ்டோ படைத்துள்ளார்.
Wednesday 23 October 2019
ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருது இரு எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment