Tuesday 9 July 2019

17-வது மக்களவை தேர்தல்


  • இந்தியாவில் 17-வது மக்களவைக்கான கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட தேர்தல், மே 19-ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 20- ஆம் தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்தது.
  • நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 8039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
  • மக்களவைத் தேர்தலில் பாஜக 435, காங்கிரஸ் 420 தொகுதிகளில் வேட்பாளர் களை களமிறக்கியது. 
  • தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதி தவிர நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 
  • மக்களவைத் தேர்தலில் பாஜக-காங்கிரஸ் 273 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன. 
  • மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 7,928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 
  • மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர் களில் 724 பேர் பெண்கள் ஆவர். 
  • வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸை விட ஒரு கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டது இதுவே முதல்முறையாகும். 
  • மொத்தம் உள்ள 96 கோடி வாக்காளர் களில் பதிவான சுமார் 60 கோடி வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 
  • மகத் தான் இந்த தேர் தல் முடிவை இந்தியர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். 
  • நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 
  • சென்னையில் 3 உள்பட தமிழகத்தில் 45 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடை பெற்றது. 
  • வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளுமே முன்னணியில் இருந்தன. 
  • இந்த முன்னணி தொடர்ந்து நீடித்தது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. 
  • இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. 
  • மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு அதைவிட கூடுதல் இடங்கள் கிடைத்து உள்ளன குஐராத், இமாச்சல பிரதேசம். 
  • உத்தர காண்ட், அரியானா மாநிலங் களிலும் மற்றும் தலைநகர் டெல்லி யிலும் பாரதீய ஜனதா அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியது. 
  • உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்த ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதி களையும் பாஜக கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது 
  • உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொ கு தி யில் 2- வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். 
  • மோடி மீண்டும் வெற்றி பெற்றதற்கு உலக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.) 
  • குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராம்நாத் சிங் (லக்னோ ), நிதின் கட்காரி நாக்பூர்) உள் ளிட்ட தலைவர்களும் வெற்றி வாகை சூடினார்கள். 
  • தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாரதீய ஜனதா கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தன, அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளன. எனவே மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். 
  • முழு பெரும்பான்மையுடன், தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதலாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
  • மத்தியில் அவரது தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி 2-வது முறையாக அரியணை ஏறுகிறது. 
  • இதுபோல், சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பு 2 பிரதமர்கள்தான் இத்தகைய சாதனை படைத்துள்ளனர். 
  • ஜவகர்லால் நேரு, 1952, 1957, 1962 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார். 
  • அதன் பின்னர், அவருடைய மகள் இந்திரா காந்தி, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார். 
  • அவர்களுக்கு பின்னர் மன்மோகன் சிங், அடுத்து தொடர்ந்து 2-வது தடவையாக முழு பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். 
  • கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்றே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. 
  • இதில் காங்கிரஸ் மட்டும் 51 தொகுதிகளில் வெற்றிப் பெற்று இருக்கிறது. 
  • கடந்த தேர்தலில் வெறும் 44 தொகுதி களில் மட்டுமே வெற்றிப் பெற்ற தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் இருந்த காங் கிரசால் இந்த தடவையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போய்விட்டது. 
  • காங்கிரஸ் கூட்டணிக்கு கேரளா, தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே கைகொடுத்து உள் ளன. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. 
  • அங்கு ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை. 
  • உத்தர பிரதேச மாநிலம் அமேதி,. கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். 
  • ஆனால் அமேதி தொகுதியில் அவர், பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி பின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார்: 
  • தேசிய அளவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளையும் சாராத பிற கட்சிகள் 95 தொகுதிகளில் வெற்றிப் பெற்று உள்ளன, இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மே 26- ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல் வெளியாது. 
  • மேலும் அன்றைய தினமே. நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. 
  • இந்த அணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக. 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோல் 10 இடங்களில் போட்டி.ட்ெட காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்தன. 
  • இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூ னி ஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்ட ணியில் 20 தொகுதிகளில் களம் இறங்கிய அ.தி.மு.க, தேனி தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற பாரதீய ஜனதா, பாட்டாளி முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிப் பெற்றுள்ளார்
  • 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற ராமநாத புரம் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் எஸ்.எம். சரிப் களம் இறக்கப்பட்டார், தராசு சின்னத்தில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
  • 1 4 மாநில சட்டசபை தேர்தல் மக்களவை தேர்தலுடன் சேர்ந்து நடந்த 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது. 
  • அவற்றின் விவரம் வருமாறு: ஆந்திர பிரதேசம் ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 
  • அங்கு மெஜாரிட்டி. பெற 88 இடங்களில் வெல்ல வேண்டும் இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை இழந்துள்ளது. 
  • அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றுள்ளது. இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். 
  • அருணாச்சல பிரதேசம் அருணாச்சலப் பிரதேசத்தில்) மொத்தம் 60 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது பாஜக கட்சி 33 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 
  • அங்கு காங்கிரஸ் 3 இடங்களிலும், என் பிபி 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் வென்றது. 
  • சிக்கிம் • சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு சிக்கிம் குடியரசு முன்னணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் அக்கட்சி தற்போது 15 இடங்களை வென்று ஆட்சியை இழந் துள் ள து. மாறாக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. ஒடிசா 
  • ஒடிசாவில் மொத்தம் 147 இடங்களில் தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி. பெற 74 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. 
  • இந்த தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 113 இடங்களில் வென்று மீண்டும் 5-வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது. 
  • அங்கு காங்கிரஸ் 9 இடங்களையும், பா ஜ க 2 2 இடங்களையும் வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் வென்றுள்ளது. 
தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தல்
  • தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக மொத்தம் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. 13 இடங்களில் வென்றதன் மூலம் சட்டசபையில் திமுக புதிய பலம் பெற்றுள்ளது.

No comments: