Monday 29 October 2018

அணு உலைகள்

இந்திய அணுசக்தி திட்டம் மூன்று வகை அணு உலைகளை அடிப்படையாகக் கொண்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் முதல்வகை அணுஉலை, அழுத்த கனநீ்ர் உலை எனப்படும். இந்த உலைகள் நரோரா, கெய்கா உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.

இரண்டாம் வகை புளுடோனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவது. இந்த உலை கல்பாக்கத்தில் உள்ளது. இவை ஈனுலை எனப்படும். தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் மூன்றாம் வகை அணுஉலைகள் 2020-ல் பெருமளவு பயன்பாட்டுக்கு வரும் என்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் மாதிரி அணுஉலை காமினி மற்றும் கல்பாக்கத்தில் இயங்கி வருகிறது. மூன்று வகை அணு உலைகளையும் கொண்ட அணுமின் நிலையம் என்ற சிறப்பை கல்பாக்கம் பெறுகிறது.

No comments: