Monday 8 October 2018

வேதங்களும், ஆகமங்களும்...!

சம்கிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம் என 4 வகை நூல்களால் வேதம் விளக்கப்படுகிறது.

சம்கிதை துதிப்பாடல்கள் கொண்டது.

பிரமாணங்கள் கர்ம மார்க்கத்தை போதிக்கின்றன.

பிரமாணங்களின் நிறைவுப்பகுதியாக அமைவது ஆரண்யகங்கள்.

உபநிடதங்கள் ஞான மார்க்கத்தை போதிக்கின்றன.

ஆரண்யகங்கள் ஞான, கர்ம மார்க்கங்களுக்கு இணைப்பு பாலங்களாக அமைகின்றன.

உபநிடதங்களை வேதாந்தம் எனவும் அழைக்கலாம்.

வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் நிறைவுப்பகுதி என்பது பொருள்.

உபநிடதம் என்பதற்கு குருவின் அருகில் அமர்ந்து பெறும் ஞானம் என்பது பொருள்.

சங்கரர் 10 உபநிடதங்களுக்கு உரை எழுதி உள்ளார்.

சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) முண்டக உபநிடதத்தில் இடம் பெற்றுள்ளது.

எழுமின், விழுமின் எண்ணியாங்கெய்த உழைமின் என்ற கருத்து சதா உபநிடதத்தில் இடம் பெற்றுள்ளது.

எமதர்மனுக்கும், நஸிகேதனுக்கும் நடந்த உரையாடலாக அமையும் சண்டோக்ய உபநிடதத்தில் மரணத்துக்குப்பின் மனிதர்நிலை விளக்கப்படுகிறது.

ஆலய நிர்மாணம், ஆலய அமைப்பு, பூைஜ முறைகள் பற்றி விளக்கும் நூல்கள் ஆகமங்கள்.

ஆகமம் என்பதற்கு ஆ- ஆன்மாக்களின், கமம் - பாசம் நீக்கி முக்தி அருள்வது என்பது பொருள்.

சைவ ஆகமங்களின் எண்ணிக்கை 28.

சைவ ஆகமங்கள் சிவனின் பஞ்ச முகங்களில் இருந்து தோன்றின என்பவர்.

காரண ஆகமம் ஆகமங்களின் தோற்றம் பற்றிக் கூறுகிறது.

No comments: