Tuesday 25 September 2018

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17 அன்று எழுதிய கடிதத்தில் முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற இந்தியா, இருநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜும், மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷியும் நியூ யார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் சந்தித்து பேசுவதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கஷ்மீரின் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேரை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பினர் செப்டம்பர் 21 அன்று கடத்தி கொலைசெய்தனர். இதனால் பாகிஸ்தானுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை சுஷ்மா ஸ்வராஜ் ரத்து செய்தார்.

No comments: