Tuesday 25 September 2018

மூன்று வங்கிகள் இணைப்பு?

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்கலாம் என்று மத்திய அரசு செப்டம்பர் 17 அன்று ஆலோசனை வழங்கியிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி வங்கிகளை ஒன்றாக இணைப்பதில், இரண்டு வலிமையான வங்கிகள், ஒரு வலுவற்ற வங்கி என்ற முறையில் இணைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஜெட்லி தெரிவித்திருக்கிறார். நிலைத்தன்மையுடைய வங்கிகளை உருவாக்குவதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: