Monday 17 September 2018

அன்றாட நிகழ்வுகளும்... அறிவியல் விளக்கமும்...

வானவில் ஏற்பட காரணம் ஒளிப்பிரிகை.

வானம் நீலமாகத் தெரிய காரணம் அலை நீளம் குறைந்த நீல நிறம் காற்றின் மூலக்கூறுகளால் அதிகம் சிதறடிக்கப்படுகிறது.

தொடுவானம் சிவப்பாக தெரியக்காரணம், அலை நீளம் அதிகமுள்ள சிவப்பைத் தவிர பிற நிறங்கள் அனைத்தும் சிதறடிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கியுள்ள குச்சி வளைந்தது போல ெதரியக் காரணம் ஒளிவிலகல்.

வானில் நட்சத்திரங்கள் மின்னக் காரணம், ஒளி விலகல்.

வைரம் மின்னுவதற்கும், கானல் நீர் தெரிவதற்கும் காரணம், முழு அக எதி ரொளிப்பு.

சோப்பு நுரையில் பல வண்ணங்கள் தெரியக் காரணம், ஒளியின் குறுக்கீடு விளைவு.

கண்ணாடி ஒளி இழைகளில் முழு அக எதிரொளிப்பு அதிகம் உள்ளதால் அவை தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுகின்றன.

ஒற்றை நிற ஒளிக்கற்றைகளை உருவாக்கப் பயன்படுவது லேசர்.

போலராய்டு காமராவின் செயல்பாட்டுத் தத்துவம் ஒளியின் தள விளைவு.

மின்னலுக்குப் பின் இடியோசை கேட்க காரணம் ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம்.

பாராசூட் புவி ஈர்ப்புவிசைக்கு எதிராக செயல்படுவதாலேயே பாரசூட்டில் மெதுவாக தரையிறங்க முடிகிறது.

ஆற்றுநீரைவிட கடல் நீரில் அடர்த்தி அதிகம் இருப்பதால் கடலில் எளிதாக நீந்த முடிகிறது.

சுடுநீர் ஊற்றப்பட்ட கண்ணாடி டம்ளரின் உள் வெளி அடுக்குகள் வெவ்வேறு வேகத்தில் விரிவடைவதால் அது விரிசல் அடைகிறது.

சிவப்பு நிற ஒளிக்கு அலைநீளம் அதிகம் இருப்பதால் அது போக்குவரத்து சிக்னலில் பயன்படுகிறது.

சூரிய ஒளியில் 7 நிறங்கள் இருப்பதை கண்டறிந்தவர் ஐசக் நியூட்டன்.

ஒளிச்சிதறல் பற்றிய சர் சி.வி.ராமனின் கண்டுபிடிப்புக்கு ராமன் விளைவு என்று பெயர்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

No comments: