திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக ஆகஸ்ட் 28 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன், அதிகாரபூர்வமாக ஸ்டாலினைத் தலைவராக அறிவித்தார். திமுக தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் மட்டுமே மனுத் தாக்கல் செய்ததாகவும், அந்த மனுவை 1,307 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் உள்ளதாகவும் அவர் அறிவித்தார். திமுகவின் பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 ஆண்டுகளாகத் திமுக தலைவராக இருந்த மு. கருணாநிதி ஆகஸ்ட் 7 அன்று மறைந்த சூழலில், அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment