Monday 17 September 2018

கல்கி பெயர் எப்படி வந்தது?

வட்டார மொழி என்று அலட்சியம் செய்யப்பட்ட தமிழை ஏற்றமிகு மொழியாகச் செய்தவர்களில் முக்கியமானவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. 9-9-1899-ம் ஆண்டு பிறந்த இவர், தமிழ்தேனீ, தும்பி, கர்நாடகம், லாங்கூலன், அகஸ்தியன், ரா.கி.விவசாயி, எமன், பெற்றோன் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். தாம் குருவாக மதித்த கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் உள்ள ‘கல்’ என்ற இரண்டு எழுத்துக்களையும் தனது பெயரின் முதல் எழுத்தான ‘கி’ என்ற எழுத்தையும் இணைத்து கல்கி என்று வைத்துக்கொண்டார். தமிழ்ப் பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டும் படைப்புகளைப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார். விடுதலைப் போராட்டத்திற்காக மூன்றுமுறை சிறை சென்றார். தேசத்திற்காகவும் தமிழுக்காகவும் உழைத்த கல்கி 1954-ம் ஆண்டு இறந்தார்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

No comments: