Tuesday 4 September 2018

நடப்பு நிகழ்வுகள் | அருணாசல பிரதேசம்: 3 புதிய மாவட்டங்கள்

அருணாசலப் பிரதேசத்தில் பக்கே-கேசாங், லேபா ரடா, ஷி யோமி என்ற மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு அம்மாநில சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 29 அன்று மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பின்மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அம்மாநிலத்தின் துணை முதல்வர் சவுனா மேய்ன், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகப் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மூன்று மாவட்டங்களால் அருணாசலப் பிரதேச மாவட்டங்களின் எண்ணிக்கை 22-லிருந்து 25-ஆக உயர்ந்திருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

No comments: