Tuesday 25 September 2018

27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்பு

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் 27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீண்டிருப்பதாக செப்டம்பர் 20 அன்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2018-ம் ஆண்டுக்கான ‘பலபரிமாண வறுமை குறியீடு’ (MPI) அறிக்கை வெளியானது. 2005-6-ம் ஆண்டுகளிலிருந்து 2015-16-ம் ஆண்டுகள்வரை, இந்தியாவில் 27 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீண்டுவந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் வறுமை 55 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் பலபரிமாண வறுமையில் வாடுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

No comments: