நாட்டின் கீழ் நீதிமன்றங்களில் பத்தாண்டுகள் பழமைவாய்ந்த 22,90,364 வழக்குகள் தேங்கியிருப்பதாக ‘நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்’ அமைப்பு செப்டம்பர் 17 அன்று வெளியிட்ட தரவுகளில் தெரிவித்திருக்கிறது. கீழ் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளில் 5.97 லட்சம் சிவில் வழக்குகளாகவும் 16.92 லட்சம் குற்ற வழக்குகளாகவும் இருக்கின்றன. தேங்கியிருக்கும் வழக்குகளைப் பற்றிய தரவுகளைத் தெரிந்துகொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் மின்-குழு ‘நேஷனல் ஜுடிஷியல் டேட்டா கிரிட்’ அமைப்பைத் தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தேங்கி இருக்கும் வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் 24 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment