Monday 16 April 2018

பெண் புலவர்கள் | சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சில பெண் புலவர்களை பற்றி அறிவோம்...


பெண் புலவர்கள் | சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சில பெண் புலவர்களை பற்றி அறிவோம்...
  • சங்க இலக்கியத்தில் 31 பெண் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதிகப் பாடல்களை எழுதியவர் அவ்வையார் . அவர் 59 பாடல்களை எழுதியுள்ளார்.
  • அதியமானுக்கும், நெடுங்கிள்ளிக்குமான போரை பாட்டுத்திறத்தால் தவிர்த்தவர் அவ்வையார்.
  • அற்றைத் திங்கள் பாடலை எழுதியவர்கள் பாரி மகளிரான அங்கை, சங்கவை.
  • ஆதிமந்தியார், கரிகால் சோழனின் மகள்.
  • ஆதிமந்தியாரின் கணவர் சேரன் ஆட்டனத்தி.
  • ஆதிமந்தி கதையை ‘சேரதாண்டவம்’ என்ற தலைப்பில் பாடியவர் பாரதிதாசன்.
  • கண்ணதாசனின் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ படைப்பே ‘மன்னாதி மன்னன்’ திரைப்படம்.
  • சோழ இளவரசன் கோப்பெரு நற்கிள்ளியின் மல்யுத்தத்தை பாடியவர் நக்கண்ணையார்.
  • சேரமன்னன் சேரலாதனைப் பாடி, அவனை மணந்தவர் நச்செள்ளையார்.
  • நச்செள்ளையார் காக்கைப் பாடியதால் காக்கை பாடினியார் ஆனார்.
  • இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண்பாற்புலவர் காக்கைப் பாடினியார், அந்த நூல் காக்கை பாடினியம்.
  • நச்செள்ளையார் கதையை ‘வில்லோடு வா நிலவே’ என்ற தலைப்பில் நாவலாக்கியவர் வைரமுத்து.
  • தாய், தந்தை, அரசன், மகன் கடமைகளை பாடியவர் பொன்முடியார்.
  • கணவனை, தமையனை இழந்து மகனையும் போருக்கு அனுப்பிய பெண்ணின் வீரத்தை பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார்.
  • ஒக்கூர் திருக்கோஷ்டியூருக்கு அருகிலுள்ளது.
  • பேயோட்டும் வெறியாடல் பற்றிப் பாடியவர், காமக்கண்ணியார்.
  • கார்கீரன் எயிற்றியார், வாடைப்புலவர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

No comments: