- சங்க இலக்கியத்தில் 31 பெண் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதிகப் பாடல்களை எழுதியவர் அவ்வையார் . அவர் 59 பாடல்களை எழுதியுள்ளார்.
- அதியமானுக்கும், நெடுங்கிள்ளிக்குமான போரை பாட்டுத்திறத்தால் தவிர்த்தவர் அவ்வையார்.
- அற்றைத் திங்கள் பாடலை எழுதியவர்கள் பாரி மகளிரான அங்கை, சங்கவை.
- ஆதிமந்தியார், கரிகால் சோழனின் மகள்.
- ஆதிமந்தியாரின் கணவர் சேரன் ஆட்டனத்தி.
- ஆதிமந்தி கதையை ‘சேரதாண்டவம்’ என்ற தலைப்பில் பாடியவர் பாரதிதாசன்.
- கண்ணதாசனின் ‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ படைப்பே ‘மன்னாதி மன்னன்’ திரைப்படம்.
- சோழ இளவரசன் கோப்பெரு நற்கிள்ளியின் மல்யுத்தத்தை பாடியவர் நக்கண்ணையார்.
- சேரமன்னன் சேரலாதனைப் பாடி, அவனை மணந்தவர் நச்செள்ளையார்.
- நச்செள்ளையார் காக்கைப் பாடியதால் காக்கை பாடினியார் ஆனார்.
- இலக்கண நூல் இயற்றிய ஒரே பெண்பாற்புலவர் காக்கைப் பாடினியார், அந்த நூல் காக்கை பாடினியம்.
- நச்செள்ளையார் கதையை ‘வில்லோடு வா நிலவே’ என்ற தலைப்பில் நாவலாக்கியவர் வைரமுத்து.
- தாய், தந்தை, அரசன், மகன் கடமைகளை பாடியவர் பொன்முடியார்.
- கணவனை, தமையனை இழந்து மகனையும் போருக்கு அனுப்பிய பெண்ணின் வீரத்தை பாடியவர் ஒக்கூர் மாசாத்தியார்.
- ஒக்கூர் திருக்கோஷ்டியூருக்கு அருகிலுள்ளது.
- பேயோட்டும் வெறியாடல் பற்றிப் பாடியவர், காமக்கண்ணியார்.
- கார்கீரன் எயிற்றியார், வாடைப்புலவர் என்று சிறப்பிக்கப்படுகிறார்.
Monday 16 April 2018
பெண் புலவர்கள் | சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய சில பெண் புலவர்களை பற்றி அறிவோம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment